தெரியாது என்பதை தெரிந்திருத்தல்

கடந்த செவ்வாய்க்கிழமை பாதையால் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு விளம்பரப் பலகையொன்றில் ஒரு வாசகம் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். அந்த வாசகம் பல உயரிய கருத்துக்களைச் சொல்வதாக எனக்குள் தோன்றியது. ஆக, அந்த வசனத்தைக் கண்டவுடன் எனக்குள் தோன்றிய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணினேன். அது இப்பதிவாக உருவாயிற்று.
அவ்வாசகம் சிங்கள மொழியில் காணப்பட்டது. “நொதன்னா பbவ தென சிட்டீம ஞானவந்தகமக்கி” (Nodhanna Bava Dhena Sittima Gnanavanthakamaki) என்பதே அவ்வசனமாகும். உண்மையில் இதன் நேரடித் தமிழ்ப் பொருள் [...]

மண்மலை எனும் அதிசயம்

இனிய இயற்கை காட்சிகள் நிறையவே நிறைந்த எங்கள் ஊரின் அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இயற்கையாய் அமைந்ததே “மண்மலை” என்றால் மிகையில்லை. இதனை ஊரின் கிழக்கே அமைந்துள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் உறுதியுடன் நிமிர்ந்து நிற்கக் காணலாம். “ஆமரபுட்டி” மற்றும் “Sandhill” எனும் பெயர் கொண்டும் இந்த இயற்கையாக உருவான பிரமாண்டம் அழைக்கப்படுகிறது.
மண் ஒன்று சேர்ந்து மலையாக உருவெடுத்துள்ளது, ஓர் ஆச்சரியமான விடயம்தான். இதன் உயரம் 32 அடியையும் விஞ்சி நிற்பதை அங்கு செல்லும் எவரும் உணர்ந்து கொள்வர். [...]

எங்கள் ஊர் பொத்துவில்

காரிருள் பிரியு முன்னே
கழனியை நாடித் தூய
ஏரிலே நெஞ்சைப் பூட்டி
இன்புறும் துணைவரோடு,
சீரிலே வாழும் மாதர்
சென்றுமே பணிகள் செய்து
பார்புகழ் கொழிக்க வாழும்
பண்பினர் வாழும் நாடு!
கொட்டிடும் மழை காலத்தும்
கோப்பையைக் கையிலேந்தி,
கட்டெழில் கயலின் கண்ணார்
கன்றினை அவிழ்த்துச் சென்று
இட்டமாயப் பால் கறந்து
இதமுறப் பதமுமேற்றி
பட்டினப் பகுதிக் கெல்லாம்
பால் கொடுப்போர் வாழ் நாடு!
ஏடுகள் கண்டி ராத
இன்கவி பிறக்கும் பூமி
கூடவே மூவினத்தோர்
கொள்கைகள் வாழும் பூமி,
தேடரும் வாவி மூன்றைத்
தன்னகம் கொண்ட தாலே
பாடகர் பாவில் போற்றும்
பொத்துவில் எங்கள் ஊரே!
1968.10.14ஆம் திகதி தினபதி பத்திரிகையில் வெளியான கவிஞர் கவிவாணனின் கவிதை.