தொற்றிக் கொள்ளும் உணர்வுகள்

விடியாத இரவொன்று இல்லை என்பது போலவே, எமது வாழ்விலும் துன்பங்களில்லாத நிலை இல்லையென்றே சொல்ல வேண்டும். இவ்வாறு எமக்கு துன்பங்கள் நேரும் போது அதனைச் சகித்துக் கொண்டு அதனை வெல்லக்கூடிய மனப்பக்குவம் வருவதென்பது கடினமான விடயம் தான். ஆனாலும், எவ்வாறான துன்பங்கள் நேரந்து விட்டபோதிலும் அவற்றை இன்பமயமாக மாற்றிக் கொள்வதற்கு எமக்கு நிறையத் தெரிவுகள் காணப்படுகின்றன என்பதென்னவோ மறுக்க முடியாத உண்மையாகும்.
வாழ்க்கையின் அனைத்து விதமான வீழ்ச்சிகளையும் சமாளிக்கும் சக்தி, ஆக்கபூர்வமான சிந்தனைக்குள்ளதென்பது நாமனைவரும் அறிந்த உண்மைதான். அவ்வாறான [...]

அதுதான் வாழ்க்கை!

எமது வாழ்வின் ஒவ்வொரு புதிய நாளும் புதிய ஆரம்பத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் நிலைகளைச் சாத்தியமாக்கும் தன்மை கொண்டது. வாழ்தலின் ஒவ்வொரு கணத்தையும் மிகவும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டியது தொடர்பில் நாமே நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது கையில் தான் எமது இன்றைய நாளின் இனிமையில் சதவீதம் தங்கியுள்ளதென்றால் மறுக்கத்தான் முடியுமா?
எமது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நாளும் எமது நீண்ட கால இலக்குகளை அடைந்து கொள்ள வழிசமைக்கும் களமாகும். நாம் ஒவ்வொரு நாளையும் ஒரு ஏணியில் [...]

புதியதொரு ஆரம்பம்…

கணினி தொடர்பான, இணையம் தொடர்பான விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஒரு இணைய வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன்.
அதன் முகவரி…
http://itgeek.wordpress.com
சென்று பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..
சிறிய முயற்சி மட்டும்தான். தொடர்ந்து வலைப்பதிவை Update செய்ய ஆவலாயுள்ளேன்…
- உதய தாரகை