Posted on பெப்ரவரி23, 2009 by உதய தாரகை
வெற்றிகள் எம்மை எதிர்பார்த்த கணங்களிலும், எதிர்பாராத கணங்களிலும் நெருங்கி சினேகம் கொள்வதுண்டு. இந்த இரு நிலையிலும் நாம் உணர்ந்து கொள்ளும், வெளிப்படுத்தும் உணர்வு பொதுவாகவே ஒன்றானது தான் என எண்ணத் தோன்றுகிறது.
ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்வை நேற்றிரவு நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது, விருதுகளை வெற்றி கொண்டு அதைப் பெற்றுக் கொண்ட பின் திரைப்பட பிரபல்யங்கள் ஆற்றிய உரையும், அவர்களின் உணர்ச்சியும் இருக்கிறதே, அது அவர்களின் தொழிலையும், நடிப்பையும் தாண்டியவொன்று.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், அனுபவம், அழகு, இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, சினிமா, மேற்கோள், வாழ்க்கை | 4 மறுமொழிகள் »
Posted on பெப்ரவரி9, 2009 by உதய தாரகை
அதுவொரு வெள்ளிக்கிழமை ஆனந்தமான மாலை நேரம். பகல் சாப்பாட்டை அருந்திய பின்னர், குடும்பத்தினர் எல்லோரும் குதூகலித்து அளவளாவிக் கொண்டிருந்த பொழுது. எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது எனக்கு வயது எட்டு ஆகும். (ஆமா.. உதய தாரகை தொடங்கிட்டாரு பழைய புராணங்களைச் சொல்றதுக்கு..!!)அந்தத் தினத்தில் எனது உறவினர்கள் சிலர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர்.
தனது பிள்ளை கதைக்கப்பழகிவிட்டால் அம்மழலை மொழியை மற்றவர்களிடம் சொல்லிக் காட்டி ஆனந்தம் அடையாத பெற்றோர்கள் இந்த அவனியிலேயே (அதுதான் பூமி என்பதற்கு ஒத்த கருத்துச் சொல்.. [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அனுபவம், இன்னொரு பிரபஞ்சம், இயற்கை, எண்ணம், கட்டுரை, கவிதை, புதியவை, மேற்கோள், வாழ்க்கை | 8 மறுமொழிகள் »