Posted on மார்ச்24, 2009 by உதய தாரகை
கனவுகள் வாழ்தலின் நிமிடங்களை கொடுக்கும் இனிய அமைப்புகள். ஒவ்வொரு நிமிடமும் நான் சந்திக்கின்ற நிகழ்வுகள் நாம் கொண்ட கனவுகளின் மிச்சத்தை நனவாக்குவது போல், இடம்பெறுவது தவிர்க்க முடியாததொன்று.
நாம் காண்கின்ற உலகமும் வாழ்கின்ற உலகமும் சிலவேளைகளில் ஒன்றாக இருக்கலாம். வேறொன்றாக மலரலாம். இதில் புதுமை எதுவுமே கிடையாது, ஆனால், எண்ணங்களால், மனதில் நிலைக்கும் கனவு தான் உங்கள் நாளையை நிர்ணயிக்கும். இன்றைய நாளுக்கும் உயிர் கொடுக்கும்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அனுபவம், அழகு, இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, புதியவை, மேற்கோள், வாழ்க்கை | குறிச்சொற்கள்: அர்த்தம், கனவு, கற்பனை, வாழ்க்கை | 2 மறுமொழிகள் »
Posted on மார்ச்18, 2009 by உதய தாரகை
நாம் ஒவ்வொரு கணமும் எண்ணுகின்ற, விரும்புகின்ற, ஆசைப்படுகின்ற, நம்புகின்ற, வெறுக்கின்ற மற்றும் உணர்கின்ற அத்தனை உணர்வுகளையும் யாராலும் பிரதி பண்ணி விட முடியாது. உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறானது. அது தனிமனிதனின் சூழல் தொடர்பாக மாறும் தன்மை கொண்டது.
எம் மனதில் தோன்றும் எண்ணங்களை நாம் தொடர்ச்சியாகக் குறித்து வைக்கத் தொடங்கினால், அது அழகிய கருத்துக்கள் பொதிந்த அன்பேடாக வருங்காலத்தில் காட்சி தரும். அவை எமக்கு எண்ணங்களின் வலிமையைச் சொல்லிப் போகும். எண்ணங்களின் வலிமையோ, அதன் தன்மையோ எமது அன்றாட [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், அனுபவம், அழகு, இணையம், இயற்கை, உணர்வு, எண்ணம், கட்டுரை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை | Leave a Comment »