மலரே என்னை மறவாதே!!

உலகத்திலே விளம்பரங்கள் எதுவுமே இல்லாமல், இயல்பாகவே பிரபல்யமாகிவரும் சொல் என்றால் அது காதல் என்பதாகவே இருக்க வேண்டும். மக்களுக்கு காதல் மீது அவ்வளவு காதல். காதல் என்ற உணர்வில் தான் அத்துணை விடயங்களும் நடந்தேறுகின்றன. காதலைப் பாடியிறாத கவிஞனே இல்லை எனலாம்.
காதல் இவ்வாறு பிரபல்யமானதற்கு காரணம், அன்பு என்கின்ற அழகிய உணர்வின் அத்திவாரமாக அது இருப்பதுதான். திரைப்படங்களின் வெற்றியின் அச்சாணியாக காதல் என்பதே ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்படுகிறது என்றால் மிகையில்லை. காதல் காதலிக்கப்படவே வேண்டும் என்பதில் இருவேறு [...]