Posted on ஆகஸ்ட்30, 2009 by உதய தாரகை
அதுவொரு மாலைப்பொழுதாகவே இருக்க வேண்டும். எனது நண்பனொருவனை சந்தித்தேன். அவனிடம் பல விடயங்கள் தொடர்பாகக் கதைத்துக் கொண்டிருந்தேன்.
திடீரென அவனிடம் சில சம்பவங்கள் பற்றிக் கேள்விகள் சிலவற்றைக் கேட்கலானேன். அவனும் எதற்கும் தயார் என்ற நிலையில் சட்டு சட்டு என பதில் சொல்லிக் கொண்டேயிருந்தான்.
அப்போதுதான் நான், “அநேகமாக ஆண்கள் இடது கையிலும் பெண்கள் வலது கையிலும் மணிக்கூடு கட்டியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டேன்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், அனுபவம், அழகு, உலகம், எண்ணம், கட்டுரை, சிரிப்பு, சுவாரஸ்யம், புதியவை, மேற்கோள், வாழ்க்கை | 13 மறுமொழிகள் »
Posted on ஆகஸ்ட்23, 2009 by உதய தாரகை
அப்போது எனக்கு நான்கு வயதாக இருக்க வேண்டும். பாடசாலைக்கு எனது அக்காவுடன் சென்று அக்காவின் வகுப்பில், ஓரமாக உட்கார்ந்து கொண்டிருப்பது தான் பழக்கம். ஐந்து வயதில் தான் பாலர் வகுப்பில் சேர்ப்பார்கள் என்பது உங்களுக்கும் தெரியும் தானே?
அக்காவின் வகுப்பறைக்கு வரும் ஆசிரியர்கள் எல்லோரும் “யாரிந்தப் பையன்?” என்று கேட்டு விட்டுத் தான் பாடங்களைத் தொடங்கினார்கள். அந்த வகுப்பில் அவர்கள் என்ன படிப்பித்தார்கள் என்றெல்லாம் சத்தியமாக எனக்குத் தெரியாது.
அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த தமிழ் எழுத்துக்களே கொஞ்சம் தான். ஆங்கில [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், அனுபவம், அழகு, ஆங்கிலம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கவிதை, சினிமா, மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம் | 2 மறுமொழிகள் »
Posted on ஆகஸ்ட்10, 2009 by உதய தாரகை
அண்மையில் எனது டிவிட்டர் நண்பனொருவன், டிவிட்டிய வரிகள் சில என்னைக் கொஞ்சம் சிந்திக்கச் செய்தது. அதுவே இந்தப் பதிவிற்கும் பதியம் போட்டது எனலாம்.
யோசனைகளை சேமிப்பதிலோ அல்லது உருவாக்குவதிலோ பொருள் ஏதும் எய்தப்படாது. அது செயற்பாட்டில் வரும் போதே, நிறைய நிலைகள் சாத்தியப்படும் என்பது வெள்ளிடை மலை. என் நண்பன் டிவிட்டிய வசனம், “That’s what life is about. You make decisions and you don’t look back.” என்பது தான்.
நாம் எடுக்கும் தீர்மானங்கள் தான், [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அனுபவம், ஆங்கிலம், உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, மேற்கோள், வாழ்க்கை | 4 மறுமொழிகள் »
Posted on ஆகஸ்ட்9, 2009 by உதய தாரகை
திரைப்படங்கள் ஏற்படுத்தும் உணர்வுகளின் வெளிப்பாடு, சிலவேளைகளில் மிக வலிமையானதாக இருந்து விடுவதுண்டு. வலிமை என அவை உருவாவதற்கு அது சொல்லும் வலிகள் தான் காரணமாக அமைந்து விடுவது அழகு.
ஆனாலும், திரைப்படங்களின் உணர்வுபூர்வமான கட்டங்கள், நடிப்பு என்பனவற்றைப் பற்றி கதைப்பதற்கு எனக்கு உடன்பாடில்லை. அவை ரசிக்கப்பட வேண்டியவை என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும்.
மொழிகள் தான் நமக்கு பல வேளைகளில் உணர்வுகளை புரிந்து கொள்ள அச்சாணியாக அமைந்து கொள்கிறது. மெளனமும் ஒரு மொழி என்பதை நீங்கள் அறிவீர்கள்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், அனுபவம், அழகு, ஆங்கிலம், இணையம், உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, சினிமா, சுவாரஸ்யம், தொழில்நுட்பம், புதியவை, மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம் | Leave a Comment »