<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>நிறம் - COLOUR ::: உதய தாரகை</title>
	<atom:link href="http://niram.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://niram.wordpress.com</link>
	<description>எண்ணம். வசந்தம். மாற்றம்.</description>
	<pubDate>Wed, 06 Aug 2008 09:28:13 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=MU</generator>
	<language>ta</language>
			<item>
		<title>நான் அழுத அந்தத் தருணங்கள்</title>
		<link>http://niram.wordpress.com/2008/08/06/ive-cried-a-lot-in-my-life-zeezat-niram/</link>
		<comments>http://niram.wordpress.com/2008/08/06/ive-cried-a-lot-in-my-life-zeezat-niram/#comments</comments>
		<pubDate>Wed, 06 Aug 2008 09:28:13 +0000</pubDate>
		<dc:creator>உதய தாரகை</dc:creator>
		
		<category><![CDATA[அனுபவம்]]></category>

		<category><![CDATA[அழகு]]></category>

		<category><![CDATA[இயற்கை]]></category>

		<category><![CDATA[உலகம்]]></category>

		<category><![CDATA[எண்ணம்]]></category>

		<category><![CDATA[கட்டுரை]]></category>

		<category><![CDATA[சினிமா]]></category>

		<category><![CDATA[புதியவை]]></category>

		<category><![CDATA[மேற்கோள்]]></category>

		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<category><![CDATA[விஞ்ஞானம்]]></category>

		<guid isPermaLink="false">http://niram.wordpress.com/?p=240</guid>
		<description><![CDATA[அன்புதான் தியாகம். அழுகைதான் தியானம் என்ற தலைப்பில் ஏற்கனவே நிறத்தில் ஒரு பதிவை எழுதியதை நீங்கள் வாசித்திருக்கக்கூடும். அன்பு என்பது அழகு. எப்போதும் அழகுதான். அழகால் அன்பு வராது. அழகை மறக்கடித்து அன்பு தளைக்கும். அங்கே அன்பு வெற்றி காணும். (என்னது.. அன்பு என்று ஓவரா பில்ட்அப் கொடுக்கிறீங்க.. உதய தாரகை!)
ஒரு பாடலின் வரிகள் கூட என் ஞாபகத்திற்கு இந்நேரம் வருகின்றது. இதோ அந்தப் பாடல் வரிகள். &#8220;பவித்ரா&#8221; திரைப்படத்தில் ஏ.ஆர். ரகுமானின் இசையில் சித்ராவின் குரலில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><a href="http://niram.wordpress.com/2008/02/14/love-is-god-niram-exclusive/" target="_self">அன்புதான் தியாகம். அழுகைதான் தியானம் </a>என்ற தலைப்பில் ஏற்கனவே நிறத்தில் ஒரு பதிவை எழுதியதை நீங்கள் வாசித்திருக்கக்கூடும். அன்பு என்பது அழகு. எப்போதும் அழகுதான். அழகால் அன்பு வராது. அழகை மறக்கடித்து அன்பு தளைக்கும். அங்கே அன்பு வெற்றி காணும். (என்னது.. அன்பு என்று ஓவரா பில்ட்அப் கொடுக்கிறீங்க.. உதய தாரகை!)</p>
<p>ஒரு பாடலின் வரிகள் கூட என் ஞாபகத்திற்கு இந்நேரம் வருகின்றது. இதோ அந்தப் பாடல் வரிகள். &#8220;பவித்ரா&#8221; திரைப்படத்தில் ஏ.ஆர். ரகுமானின் இசையில் சித்ராவின் குரலில் ஒலிக்கும் &#8220;அழகு நிலவே&#8221; என்று தொடரும் பாடலில் இப்படியொரு கட்டமும் உண்டு.</p>
<blockquote><p>பூமியை நேசிக்கும் வேர் போலவே<br />
உன் பூமுகம் நேசிப்பேன் தாயாகவே<br />
நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே<br />
உன் நேசத்தில் வாழ்வேன் நானாகவே<br />
உலகம் தான் மாறுமே<br />
உறவுகள் வாழுமே<br />
கடலை விடவும் ஆழம் என்தன் கண்ணீர் துளிகளே</p></blockquote>
<p>நான் பாடலில் சொல்ல வந்த கருத்தையோ அல்லது திரைப்படத்தின் கதையோ இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் இறுதி வரியை திரும்ப ஒருதரம் வாசியுங்கள். &#8220;கடலை விடவும் ஆழம் எந்தன் கண்ணீர் துளிகளே&#8221; - அழுதவனுக்கு தெரியும் கண்ணீரின் ஆழம். ஆனால், ஆண்கள் அழக்கூடாது என்று எமது பெரியோர்கள் எம்மிடம் திரும்பத் திரும்ப எழுதப்படாத விதியாகச் சொல்லியே வந்திருக்கிறார்கள்.</p>
<p style="text-align:center;"><img class="size-full wp-image-243 aligncenter" src="http://niram.files.wordpress.com/2008/08/man_crying.jpg?w=468&h=152" alt="ஆண்கள் உண்மையில் அழக்கூடாதா?" width="468" height="152" /></p>
<p>ஆண்கள் உண்மையில் அழக்கூடாதா? அழுகை என்பது அவ்வளவு குறைத்து மதிப்பிடப்பட வேண்டிய குணமா? எனக்குள் எழும் கேள்விகள் நிறையவே உண்டு. (என்னது அன்பு என்று பில்ட்அப் கொடுத்துட்டு இப்ப அழுகை என்று பில்ட்அப் வேற எதுக்கு உதய தாரகை&#8230;?)</p>
<p>உண்மையான ஆண்மகன் ஒருபோதும் அழவே மாட்டான் என்ற கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. அழுகை என்பதும் கண்ணீர் என்பதும் நகமும் சதையும் போன்ற பிரிக்க முடியாத நண்பர்கள்.</p>
<p>விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில், தொன்று தொட்டு வந்த நாகரிகங்களின் பதிவுகளின் அடிப்படையிலும் அழுகை என்பது எமது சுகாதாரத்திற்கு நன்மை செய்யும் செயற்பாடாகும் என உணரப்பட்டுள்ளது. அழுகை என்பது மனிதனின் பிரபஞ்ச அனுபவம் என்றே சொல்லிவிடலாம். வரலாறுகளில் நாம் எத்தணை கதைகளைக் கேட்டிருக்கிறோம். அனர்த்தம், மன அதிர்ச்சி, இழப்பு, வலி, ஏன் சின்னச் சின்ன மனக்கவலைகள் என எல்லாமே அழுகையை வரவழைக்கும். அதுமட்டுமா சந்தோசம், களிப்பு என விரியும் மகிழ்ச்சியான தருணங்களில் கூட அழுகை எம்மை ஆட்கொள்ளலாம்.</p>
<p>உயிரியலாளர்கள், அழுகை என்பது நான்கு உயிரியல் பொறிமுறைகளுக்கு ஊக்கியாகத் தொழிற்படுவதாக ஆய்ந்தறிந்துள்ளார்கள். அது என்ன நான்கு விடயங்கள் என இக்கட்டுரையின் இறுதியில் சொல்கிறேன். இப்ப மேட்டருக்கு வர்ரன். (என்ன.. அப்போ இன்னும் மேட்டருக்கு வரலியா? என்ன கொடுமை உதய தாரகை இது?)</p>
<p>கனவுகள் என்பது எல்லைகளற்றது. நேரம் காலம் புரியாதது. மிகச் சுதந்திரமானது. (ஆமா.. அன்பு, அழுகை என்று தொடங்கி இப்ப கனவு என்று வேறு பில்ட்அப் வேற. தாங்க முடியல உதய தாரகை). கனவுகளின் நனவில் மகிழ்ச்சி ஏற்படுவது போல், கனவுகள் நிறைவேறாத போதும் கவலை வரும். நிறைவேறிய கனவுகளில் கலக்கம் ஏற்படுகையில் கூட, கவலை வரும். இதுதான் வாழ்க்கை.</p>
<p>ஆண்கள் வெளிப்படையாக அழக்கூடாது, கண்ணீர் விடக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடே இல்லை. அண்மையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் Michael Vaughan தனது தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விடயம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். நாம் விரும்பிச் செய்யும் ஒரு விடயத்தினை இழப்பதென்பது மிகவும் உறுக்கமான விடயம்தான். ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய Michael Vaughan நன்றிகளைத் தெரிவித்ததன் பின்னர், அவரை அறியாமலேயே அவர் கண்கள் கண்ணீர் சொட்டத் தொடங்கின. உணர்வு பூர்வமான கட்டங்கள் அவை.</p>
<p>நானும் பல தருணங்களில் அழுதிருக்கிறேன். சிலவேளைகளில் நான் அழுகை வந்ததை அடக்கியிருக்கிறேன். ஆண்கள் அழக்கூடாது என்று யாரும் அட்வைஸ் பண்ண வருவார்கள் என்ற ஐதீகத்தில் தான் அப்படி நான் செய்திருக்க வேண்டும். தனிப்பட்ட ரீதியில் யாருமே அறியாமல் அழுவது வேறு, பொது இடங்களில் மக்களிடையே அழுகை உணர்வால் கண்ணீர் சொட்டுவது வேறு.</p>
<p>பொது இடங்களில் கூட ஆண்களைக் கண்ணீர் வடிக்கச் செய்யும் சந்தர்ப்பங்கள் பலவுள்ளன. அண்மையில் BBC இணையத்தளத்தில் இதுபற்றிய ஒரு கட்டுரை இடம் பெற்றிருந்தது. இதனை நான் உங்களுக்காக சுருக்கமாகத் தமிழில் தருகிறேன்.அத்தோடு எனது அனுபவங்களையும் இணைத்துக் கொள்கிறேன்.</p>
<ol>
<li><strong>தம் பெற்றோருக்கு பெருமை சேர்த்தல்</strong> : நமது பெற்றோர்களுக்கு நாம் பெருமை சேர்க்கும் போது, பெற்றோர்கள் அடையும் மகிழ்ச்சி இருக்கிறதே, அதை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. அத்தருணத்தில் தமது கண்களை காய்ந்த நிலையில் வைக்க யாரால்தான் முடியும். உணர்ச்சி பூர்வமான உணர்வுகள் பகிரும் நிலைகள். நான் பல வேளைகளில் இந்த நிலையை அனுபவித்திருக்கிறேன்.</li>
<li><strong>முதலாவது பிள்ளையை அல்லது பேரனை பெற்ற தருணம்</strong>: ஒரு ஆணினதும் பெண்ணினதும் மிகவும் மறக்க முடியாத தருணம். ஆமா.. இந்தத் தருணத்தையும் உதய தாரகை அனுபவிச்சி இருப்பீங்களே? என்றல்லவா? கேட்க நினைக்கிறீங்க.. அவசரப்படப்படாது. ஓ.கே.?</li>
<li><strong>நெருங்கியவர்களின் சங்கடங்கள்</strong>: உங்களுக்கு நெருங்கியவர்கள் கஷ்டப்படும் போது, கவலையே உருவாய்க் காணப்படும் போது, உங்களால் அவர்களைத் தேற்ற முடியும். ஆனாலும், உணர்வுகளின் பகிர்வுகள் இடம்பெறுகையில் அழுகையென்பது உங்களை அறியாமலேயே உங்கள் கண்களை நனைக்கும். நேற்றிரவு கூட, என்னால் என்னைக் அழுகையில் இருந்து கட்டுப்படுத்த முடியாமல் போனது. வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் எமக்கு இருக்கவே வேண்டும். நான் நிறையத் தரம் அழுதிருக்கிறேன். அத்தருணங்களில் கதைக்க வேண்டிய வார்த்தைகளைக் கூடத் தொலைத்திருக்கிறேன். மறந்திருக்கிறேன். நான் எனது அன்புக்குரியவர்களின் உணர்வுகளை உணருகையில் அவர்களாகவே மாறிவிடுகிறேன்.</li>
<li><strong>அன்புக்குரியவர்களுக்கு தீயது செய்தல்</strong>: அன்குரியவர்களுக்கு தீங்குகள் செய்தால் அது எம்மை எப்போதுமே, உறுத்திக் கொண்டேயிருக்கும். அது மனதில் ரணமாகி எம்மை வருத்தும். இதனை யாரிடமாவது அல்லது அன்புக்குரியவரிடமே சொல்லி அழ வேண்டும் போலிருக்கும். இன்னும் இதுபோன்ற அனுபவம் இல்லை. இருக்கவும் தேவையில்லை என்று தோன்றுகிறது எனக்கு.. உங்களுக்கு எப்படியோ?</li>
<li><strong>மன்னிப்பு கேட்டல்</strong>: &#8220;மன்னிப்பு என்பது பாவிகளை உருவாக்கும் என்பதால் நான் மன்னிப்பதே இல்லை&#8221; என்று ஒரு நூலில் வாசித்த ஞாபகம் எனக்குண்டு. எந்த நூல் என்று என்னால் நினைவு படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால், மன்னிப்பு என்பது வாழ்க்கையின் ஜதார்த்தத்தை மன்னிப்பு கேட்பவருக்கு உணர்த்தலாம். ஆதலால் மன்னிக்க வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். <a href="http://niram.wordpress.com/2007/01/10/sorry-very-sorry/" target="_self">மலிந்துவிட்ட Sorryகள்</a> என்ற தலைப்பிலான பதிவையும் நீங்கள் வாசித்திருப்பீர்கள். நீங்கள் செய்த தவறுக்காக அதனை உணர்ந்து நீங்கள் மன்னிப்பு கேட்கும் போது, உங்களால் கண்கள் கொள்ளும் ஈரத்தை தடுத்துவிட முடியாது. அனுபவம் உண்டு எனக்கு..</li>
<li><strong>நீங்களே தோற்றும் போகும் தருணம்</strong>: நீங்கள் வெற்றி நிச்சயம் என நம்பியிருந்த தருணம், தோற்றுப் போனதாய் பெறுபேறு கிடைத்தால் என்ன செய்வீர்கள். உங்களை அறியாமலேயே கண்கள் நனையத் தொடங்கும். இதில் நிறைய அனுபவங்கள் இருக்கிறது எனக்கு. (அனுபவம் இருக்கு.. இருக்கு என்று சொன்னா போதுமா?? என்ன அனுபவம் என்று சொல்ல வேண்டாமா? உதய தாரகை??..) நிச்சயமாக நான் எல்லாவற்றையும் எனது அனுபவத் தொடராக எழுதும் <a href="http://niram.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/" target="_self">இன்னொரு பிரபஞ்சம்</a> தொடரில் சுவைபடச் சொல்வேன். அதுவரை பொறுமனமே..!</li>
<li><strong>முயற்சியில் வெற்றியடையாமை</strong>: நாம் செய்யும் முயற்சிகள் எப்போதும் வெற்றியையே தரும் என எதிர்பார்க்க முடியாது. தோல்விகளும் வரத்தான் செய்யும். எமது முயற்சியின் பலன் தோல்வியில் முடிந்தால் கவலை வரும். அது அழுகை தரும். என் ஞாபகத்திற்கு நான் மேற்கொண்ட முயற்சி தோற்றுப் போன தருணம் வருகிறது. நாம் எத்தனை முறை விழுகிறோம் என்பதல்ல முக்கியம். நாம் விழுந்த தடவையெல்லாம் எழுந்து நிற்பதுதான் முக்கியம். (எங்கேயோ கேட்ட டயலொக் மாதிரி இருக்கே&#8230; உதய தாரகை)</li>
<li><strong>முயற்சியில் வெற்றியடைதல்</strong>: அயராத முயற்சி தரும் வெற்றி, மகிழ்ச்சியின் பிறப்பிடம் என்று சொல்லிவிடலாம். நான் வென்ற நிலையிலும் அழுதிருக்கிறேன். மனதிற்குள் கண்ணாடி முன் சிலவேளை என் அம்மாவிடம். எல்லாமே <a href="http://niram.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/" target="_self">இன்னொரு பிரபஞ்சத்தில்</a> விரிவாகச் சொல்வேன்.</li>
<li><strong>தூசுகள் தரும் கண்ணீர்</strong>: இது உணர்வுகளோடு சம்மந்தப்படாவிட்டாலும் எமது கண்ணீருடன் சம்மந்தப்பட்ட விடயம் தான். நாம் எதிர்பார்க்காத நிலையில் எமது கண்களுக்குச் செல்லும் தூசுகள் கண்ணீர்ச் சுரப்பியை தூண்டி விடுகின்றன. நிறைய அனுபவம் உண்டு எனக்கு. (அதுக்குத்தான் &#8220;கூலிங் கிளாஸ்&#8221; போட்டுட்டு ஊர் சுத்தணும் என்று சொல்றது&#8230; புரிஞ்சுதா உதய தாரகை!?!)</li>
</ol>
<p>இப்படி ஆண்களை கண்ணீர் வர வைக்கும் சம்பவங்கள் விரிகின்றது. அழுகையால் ஏற்படும் நான்கு நன்மைகளைச் சொல்ல வேண்டாமா..? அது தான் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தேனே, இறுதியில் சொல்வதாய்..? பிறப்புரிமைக் காரணிகளில் செல்வாக்குச் செலுத்தல், சமிபாட்டுத் தன்மையில் நன்மை கொடுத்தல், ஹோமோன்களின் அளவில் பயனுள்ள மாறுதல்களைத் தோற்றுவித்தல் மற்றும் அன்றாட கடமைகளில் புத்துணர்ச்சியைத் தருதல் என்பதே அந்த நான்கு நன்மைகளுமாகும்.</p>
<p>நீங்கள் ஆண்கள் அழுவது தொடர்பில் என்ன நினைக்கறீர்கள்? நீங்கள் அழுத தருணங்கள் என்னவென்ன என்பது பற்றி மறுமொழியிடுங்கள். உங்கள் மறுமொழிகளோடு இன்னும் கதைப்போம் எண்ணத்துடன் நிறைவு செய்கிறேன்.</p>
<p>- உதய தாரகை</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/niram.wordpress.com/240/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/niram.wordpress.com/240/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/niram.wordpress.com/240/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/niram.wordpress.com/240/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/niram.wordpress.com/240/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/niram.wordpress.com/240/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/niram.wordpress.com/240/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/niram.wordpress.com/240/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/niram.wordpress.com/240/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/niram.wordpress.com/240/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/niram.wordpress.com/240/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/niram.wordpress.com/240/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=240&subd=niram&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://niram.wordpress.com/2008/08/06/ive-cried-a-lot-in-my-life-zeezat-niram/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/geekit-128.jpg" medium="image">
			<media:title type="html">உதய தாரகை</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2008/08/man_crying.jpg" medium="image">
			<media:title type="html">ஆண்கள் உண்மையில் அழக்கூடாதா?</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நிலவிற்கு உங்கள் பெயரை அனுப்புங்கள்</title>
		<link>http://niram.wordpress.com/2008/07/04/send-your-name-to-moon/</link>
		<comments>http://niram.wordpress.com/2008/07/04/send-your-name-to-moon/#comments</comments>
		<pubDate>Fri, 04 Jul 2008 09:38:30 +0000</pubDate>
		<dc:creator>உதய தாரகை</dc:creator>
		
		<category><![CDATA[அனுபவம்]]></category>

		<category><![CDATA[இணையம்]]></category>

		<category><![CDATA[இயற்கை]]></category>

		<category><![CDATA[உலகம்]]></category>

		<category><![CDATA[கட்டுரை]]></category>

		<category><![CDATA[சுவாரஸ்யம்]]></category>

		<category><![CDATA[செய்தி]]></category>

		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>

		<category><![CDATA[மேற்கோள்]]></category>

		<category><![CDATA[விஞ்ஞானம்]]></category>

		<guid isPermaLink="false">http://niram.wordpress.com/?p=220</guid>
		<description><![CDATA[உலகத்தின் வினாடிகளை அலங்கரிக்கும் அச்சாணியாக விளங்குவது, அறிவியல் தான். அறிவியலினால் எட்டப்பட்டுள்ள சாதனைச் சிகரங்கள் எத்துணை பாரியவை. விசாலமானவை. அறிவியலின் ஆர்வத்தின் வெளிப்பாடுதான் மனிதன் பூமியை விட்டும் வேற்று கிரகங்களுக்கு ஏகி ஆராய்ச்சி செய்யத் துணிந்தது.

1969 ஆம் ஆண்டு இந்த மாதம் (அதாங்க.. ஜுலை மாதம்..) 20 ஆம் திகதி முதன் முதலாக நிலவிற்குச் சென்றார். உலகமே வியந்த அந்த நிகழ்வு இன்றும் வெகுவாக நினைவு கூறப்படுகிறது. பல அறிவியல் ஆய்வுகளின் அடித்தளமாகக்கூட இது உணரப்படுகிறது. (சரி.. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>உலகத்தின் வினாடிகளை அலங்கரிக்கும் அச்சாணியாக விளங்குவது, அறிவியல் தான். அறிவியலினால் எட்டப்பட்டுள்ள சாதனைச் சிகரங்கள் எத்துணை பாரியவை. விசாலமானவை. அறிவியலின் ஆர்வத்தின் வெளிப்பாடுதான் மனிதன் பூமியை விட்டும் வேற்று கிரகங்களுக்கு ஏகி ஆராய்ச்சி செய்யத் துணிந்தது.</p>
<p><span id="more-220"></span></p>
<p>1969 ஆம் ஆண்டு இந்த மாதம் (அதாங்க.. ஜுலை மாதம்..) 20 ஆம் திகதி முதன் முதலாக நிலவிற்குச் சென்றார். உலகமே வியந்த அந்த நிகழ்வு இன்றும் வெகுவாக நினைவு கூறப்படுகிறது. பல அறிவியல் ஆய்வுகளின் அடித்தளமாகக்கூட இது உணரப்படுகிறது. (சரி.. சரி.. என்ன இழுவ&#8230; உதய தாரகை.. மேட்டருக்கு வாங்க&#8230;)</p>
<p>உங்கள் பெயரை நிலவுக்குச் செல்லும் விண்வெளியோடத்தில் பொறித்து, நிலவிற்கு அனுப்ப ஆர்வமுள்ளதா? (என்ன உதயதாரகை.. இப்படி கேட்டுப்புட்டீங்க&#8230;? எங்களுக்கு ஆர்வமுள்ளதாவா..? எப்படி அனுப்பலாம்.. சீக்கிரமாகச் சொல்லுங்கய்யா&#8230;) கொஞ்சம் பொறுங்க.. விளக்கமாக சொல்கிறேன்.</p>
<p><img class="alignnone size-full wp-image-221" src="http://niram.files.wordpress.com/2008/07/moon.jpg?w=468&h=118" alt="" width="468" height="118" /></p>
<p>நாஸா - அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சிய நிலையத்தின் பெயர். விண்வெளி பற்றிக் கதைக்கும் போது, அனைவரும் உச்சரிக்கும் பெயர். விண்வெளியே தனது மூச்சாய் சுவாசிக்கும் அமைப்பு, வயது வேறுபாடின்றி, உங்கள் அனைவரினதும் பெயரை நிலவிற்கு அனுப்ப <strong>Lunar Reconnaissance Orbiter (LRO) spacecraft </strong>என்ற செயற்றிட்டத்தின் மூலமாக <a href="http://www.nasa.gov/mission_pages/LRO/news/nametomoon.html" target="_blank">அழைப்பு </a>விடுத்திருக்கிறது. நம்ப முடிகிறதா&#8230;? நம்பித்தான் ஆகணும். பெயர்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி ஜுன் 27 ஆக அமைந்த போதும், இதற்கு பொதுமக்களிடையே காணப்பட்ட ஆர்வம் காரணமாக இந்த இறுதித் திகதியை ஜுலை 25 ஆக மாற்றியமைத்திருக்கிறது. அதிர்ஷ்டக் காரர்கள் தான் நீங்கள்.. இப்போ நீங்களும் உங்கள் பெயரை நிலவிற்கு அனுப்பலாம்.</p>
<p>உங்களின் பெயர் விபரத்தை <a href="http://lro.jhuapl.edu/NameToMoon/index.php" target="_blank">இங்கே</a> வழங்கி, நாஸாவினால், வழங்கப்படும் சான்றிதழையும் பெற்றிட மறந்து விடாதீர்கள். நமது பெயரை சந்திரனுக்கு அனுப்புவதென்றால் சும்மாவா&#8230;? இவ்வாறு இத்திட்டத்திற்கு சமர்ப்பிக்கப்படும் பெயர்கள் யாவும் தரவுத்தளம் ஒன்றினுள் நிரற்படுத்தப்பட்டு ஒரு நுண்ணிய இலத்திரனியல் சில்லொன்றின் சேமிக்கப்பட்டு இந்த ஆண்டில் நிலவிற்கு ஏகவுள்ள விண்ணோடத்தில் பொருத்தப்பட்டு நிலவிற்கு அனுப்பப்படவுள்ளது.</p>
<p>நான் எனது பெயரை சமர்ப்பித்து விட்டேன், சான்றிதழும் பெற்றுக் கொண்டேன். நீங்கள் உங்கள் பெயரை அனுப்பிவிட்டீர்களா? முந்திக் கொண்டு உங்கள் பெயரை நிலவிற்கு அனுப்ப ரெடியாகிட்டீங்க போலத் தோணுது..? நான் Already done! நீங்க ready ஆ?</p>
<p>- உதய தாரகை</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/niram.wordpress.com/220/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/niram.wordpress.com/220/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/niram.wordpress.com/220/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/niram.wordpress.com/220/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/niram.wordpress.com/220/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/niram.wordpress.com/220/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/niram.wordpress.com/220/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/niram.wordpress.com/220/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/niram.wordpress.com/220/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/niram.wordpress.com/220/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/niram.wordpress.com/220/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/niram.wordpress.com/220/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=220&subd=niram&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://niram.wordpress.com/2008/07/04/send-your-name-to-moon/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/geekit-128.jpg" medium="image">
			<media:title type="html">உதய தாரகை</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2008/07/moon.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>அவலை எனக்கு ரொம்பப் பிடிக்கும்</title>
		<link>http://niram.wordpress.com/2008/06/30/niram-zeezat-sorry-is-it-enough/</link>
		<comments>http://niram.wordpress.com/2008/06/30/niram-zeezat-sorry-is-it-enough/#comments</comments>
		<pubDate>Mon, 30 Jun 2008 09:51:45 +0000</pubDate>
		<dc:creator>உதய தாரகை</dc:creator>
		
		<category><![CDATA[அதிசயம்]]></category>

		<category><![CDATA[அனுபவம்]]></category>

		<category><![CDATA[இயற்கை]]></category>

		<category><![CDATA[உலகம்]]></category>

		<category><![CDATA[கட்டுரை]]></category>

		<category><![CDATA[சுவாரஸ்யம்]]></category>

		<category><![CDATA[புதியவை]]></category>

		<category><![CDATA[மேற்கோள்]]></category>

		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://niram.wordpress.com/?p=217</guid>
		<description><![CDATA[கடந்த பல நாட்களாக நிறத்தில் எந்தப் பதிவையும் புதிதாக பதிப்பிக்க முடியாமல் போனதையிட்டு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எம்மிடமிருந்து ஒருவர் ஒன்றை எதிர்பார்க்கும் நிலையில் அதனை வழங்காமல் அவர் காட்டும் அத்தனை ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளுக்கும் எமது அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டிருந்தால் பொருத்தமாக இருக்காது என்றே சொல்ல வேண்டும். அப்படித்தான் நிறத்தில் புதிய வர்ணங்கள் நிரம்பி வழியும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாக உங்களுக்கு ஏமாற்றத்தே தந்திருக்கும். அதனை நீங்கள் எனக்கு அனுப்பி வைத்த மின்னஞ்சல்களிலிருந்து [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>கடந்த பல நாட்களாக நிறத்தில் எந்தப் பதிவையும் புதிதாக பதிப்பிக்க முடியாமல் போனதையிட்டு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எம்மிடமிருந்து ஒருவர் ஒன்றை எதிர்பார்க்கும் நிலையில் அதனை வழங்காமல் அவர் காட்டும் அத்தனை ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளுக்கும் எமது அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டிருந்தால் பொருத்தமாக இருக்காது என்றே சொல்ல வேண்டும். அப்படித்தான் நிறத்தில் புதிய வர்ணங்கள் நிரம்பி வழியும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாக உங்களுக்கு ஏமாற்றத்தே தந்திருக்கும். அதனை நீங்கள் எனக்கு அனுப்பி வைத்த மின்னஞ்சல்களிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது. சரி.. சரி.. மேட்டருக்கு வாரேன்&#8230;</p>
<p><span id="more-217"></span></p>
<p>நாம் ஏதாவதொன்றை தவறாகவோ அல்லது பொருத்தமில்லாதவாறோ செய்துவிட்டால் அதற்கு &#8220;என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்&#8221; (நல்ல தமிழில் இல்லப்பா ஆங்கிலத்தில் சொல்வதானால் I am sorry என்று சொல்வார்கள்.. ) இருக்கட்டும்.. இருக்கட்டும்.. மலிந்துவிட்ட Sorryகள் என்ற தலைப்பில் ஒருபதிவை ஏற்கனவே நிறத்தில் பதிவிட்டிருந்தது நீங்கள் அறிந்ததே! ஆனால் நாம் செய்த தவறுக்காக அல்லது பொருத்தமி்ல்லாத நடவடிக்கைக்காக வெறும் Sorry கேட்டுவிடுதல் போதுமானதா? - எனக்குள் இன்று காலை எழுந்த கேள்வியிது.</p>
<p><img class="alignleft size-full wp-image-218" src="http://niram.files.wordpress.com/2008/07/calm.jpg?w=200&h=225" alt="" width="200" height="225" />நாம் பிழைகளைச் செய்துவிட்டு பின்னர் குறிப்பிட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லாம் சமாளிக்கப்பட்டுவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ என்று நான் சிலவேளைகளில் நினைப்பதுண்டு. மற்றவர்களிடம் ஏதாவது சொல்லி நாம் செய்த தவறுகளை சமாளிபிக்கேஷன் செய்துவிடலாம் என்ற நினைப்பு பொருத்தமற்றதென்றே சொல்லலாம். மன்னிப்பு என்று கேட்டுவிட்டால் மன்னிப்பு வழங்குபவர்களே மனிதர்களில் புனிதர்கள். மன்னிப்பது மகத்துவமானது. மனிதர்களுள் புனிதர்களாகி விளங்குபவர்களே மன்னிப்பதை மகத்துவமாகக் கொண்டிருப்பர்.</p>
<p>நீங்கள் மன்னிக்கக் கோரும் விண்ணப்பங்களை ஏற்காதவர்கள், உங்களை நற்குணத்திலிருந்து பிறழ்ந்தவர்களாகக் கணிக்கக்கூடும். அதற்கான காரணங்களையும் சந்தர்ப்பங்களையும் உங்கள் முன்னால் நிறுத்தக்கூடும். இதேவேளை, நீங்கள் மன்னிப்பு கேட்கும் போது, It&#8217;s ok என்று உங்களை தேற்றி மன்னிப்பு வழங்குபவர்கள், நீங்கள் செய்த விடயத்தால் உண்டான விளைவுகளின் அதிர்ச்சியை சந்திக்காமல் இருந்திருக்கலாம். அல்லது சந்தித்திருக்கலாம். ஆனாலும், வெறும் Sorry என்ற வார்த்தைகளால் மட்டும் மன்னிப்பின் மகத்துவத்தை வரையறுக்காமல், நாம் செய்யும் செயல்களால் மற்றவர்கள் அடையக்கூடிய அசெளகரியங்களைப் பற்றியும் சிந்தித்தல் சாலப் பொருத்தமானது. இது மன்னிப்புக் கேட்கும் எமது தொனியில் அன்பையும் ஆழத்தையும் கொண்டு தரும்.</p>
<p>தவறாகப் புரிந்து கொண்ட நிலைகளைத் தெளிவாகப் பின்னர் புரிந்து கொள்வதும் புரிந்து கொள்ளச் செய்வதும் இலகுவான காரியங்கள் தான். ஆனால், சுய கெளரவம் மற்றும் அகம்பாவம் என்பவற்றின் விளைவால் குறித்த விடயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள தவறுக்கு நான் எப்படியும் காரணமாக இருக்கமாட்டேன் என்று ஆணித்தரமாக வாதிடுவதோ அல்லது கூறி நிற்பதோ மற்றவர்களின் எரிச்சலையையே அதிகளவில் சம்பாதித்துத் தரும்.</p>
<p>இதனை இப்படி எளிய முறையில் சொல்லிவிடலாம். அதாவது, &#8220;நீங்கள் என்னைப் புரிந்து கொள்வதல்ல. மாறாக, உங்களை நான் நான் புரிந்து கொள்வதுதான்&#8221; என்று சொல்லிவிடலாம். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதற்கான நிகழ்தகவைக் குறைக்கும் என்பதோடு, இனிய பொழுதுகளை எமக்குச் சொந்தமாக்கிச் செல்லும். வாழ்க்கையில் நாம் புரிதலின் ஆதாரங்களாகவே இருக்கின்றோம்.</p>
<p>ஆமா,. தலைப்பில் ஏதும் எழுத்துப் பிழைகள் இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டே இந்தப் பதிவை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என நான் எண்ணுகிறேன். ஆனால் தலைப்பில் எந்த எழுத்துப் பிழையும் இல்லை. நேற்று எனது நண்பனின் வீட்டிலிருந்து அவலை அனுப்பியிருந்தார்கள். எனக்கு அவல் என்றால் ரொம்பப் பிடிக்கும். இரசித்து ருசித்துச் சாப்பிடுவேன் அவலை. ஆமா அதுதாங்க.. அரிசியை குத்தி எடுத்தால் வரும் தகட்டு அரிசி.. அதுதான் அவல்.. உங்களுக்குத் தெரியாதா என்ன?? அவலில் சீனிப்பாகு இட்டு செய்து அனுப்பியிருந்தார்கள். அவலிடம் கொண்ட பிரியத்தால் சீக்கிரமாகவே நண்பனுக்கு அனுப்பப்பட்ட அவலை பதம் பார்த்து விட்டேன். கடைசியில் Sorry என்று சொல்லிவிடலாம் என்ற நிலை தோன்றியது. நண்பனாச்சே.. நான் அவலுக்கு ரொம்பப் பிரியம் என்பதை அவனறிவான். புரிந்து கொள்வதென்பதில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றாது என்பதற்கு அவல் தொடர்பான நிகழ்ச்சியும் ஒரு ஆதாரம் தான்.</p>
<p>என்னது.. நீங்க இப்படி இருப்பீங்க என்று நாங்க நெனக்கவேயில்ல என்று நீங்கள் முனுமுனுப்பது எனக்குப் புரியாமல் இல்லை. மேலே நான் உங்களுடன் பகிர்ந்து கொண்ட அவல் பற்றிய சந்தர்ப்பம் எனது நண்பன் ஒருவன் என்னுடன் பகிர்ந்து கொண்டதுதான். இங்கு பொருத்தமாகவிருக்கும் என எண்ணினேன் உங்களோடு பகிர்ந்து கொண்டேன். உங்கள் எண்ணங்களையும் நிறத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.</p>
<p>- உதய தாரகை</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/niram.wordpress.com/217/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/niram.wordpress.com/217/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/niram.wordpress.com/217/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/niram.wordpress.com/217/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/niram.wordpress.com/217/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/niram.wordpress.com/217/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/niram.wordpress.com/217/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/niram.wordpress.com/217/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/niram.wordpress.com/217/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/niram.wordpress.com/217/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/niram.wordpress.com/217/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/niram.wordpress.com/217/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=217&subd=niram&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://niram.wordpress.com/2008/06/30/niram-zeezat-sorry-is-it-enough/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/geekit-128.jpg" medium="image">
			<media:title type="html">உதய தாரகை</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2008/07/calm.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>எனது முதலாவது காதலி</title>
		<link>http://niram.wordpress.com/2008/05/12/my-first-lover-niram-zeezat/</link>
		<comments>http://niram.wordpress.com/2008/05/12/my-first-lover-niram-zeezat/#comments</comments>
		<pubDate>Mon, 12 May 2008 07:12:31 +0000</pubDate>
		<dc:creator>உதய தாரகை</dc:creator>
		
		<category><![CDATA[அனுபவம்]]></category>

		<category><![CDATA[இன்னொரு பிரபஞ்சம்]]></category>

		<category><![CDATA[உலகம்]]></category>

		<category><![CDATA[எண்ணம்]]></category>

		<category><![CDATA[கட்டுரை]]></category>

		<category><![CDATA[சுவாரஸ்யம்]]></category>

		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://niram.wordpress.com/?p=214</guid>
		<description><![CDATA[
தலைப்பைக் கண்டு உஷாராகிவிட்டீர்கள் போலும். ‘முதலாவது காதலி’ என்றால் அப்போ, உதய தாரகை உங்களுக்கு இரண்டாவது மூன்றாவது என்று பல காதலிகள் உண்டா என்றல்லவா நீங்கள் கேட்கத்துடிக்கிறீர்கள். எப்படிங்க உங்களால மட்டும் இப்படியெல்லாம் வயலண்டா யோசிக்க முடியுது…? (இருக்கோட்டும்.. இருக்கோட்டும்…)
என்ன உதய தாரகை! ஒரே காதலி பேச்சாக்கிடக்குது.. என்ன விசயம் என்றுதானே கேட்கிறீங்க…? எல்லாவற்றையும் தெளிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இப்போது உங்களுடன்… இன்னொரு பிரபஞ்சம் என்ற தொடரின் மூலம் ‘யாரும் பார்க்காத உதய தாரகையின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><img class="alignnone size-full wp-image-169" src="http://niram.files.wordpress.com/2007/11/cosmic1.jpg?w=460&h=130" alt="" width="460" height="130" /></p>
<p>தலைப்பைக் கண்டு உஷாராகிவிட்டீர்கள் போலும். ‘முதலாவது காதலி’ என்றால் அப்போ, உதய தாரகை உங்களுக்கு இரண்டாவது மூன்றாவது என்று பல காதலிகள் உண்டா என்றல்லவா நீங்கள் கேட்கத்துடிக்கிறீர்கள். எப்படிங்க உங்களால மட்டும் இப்படியெல்லாம் வயலண்டா யோசிக்க முடியுது…? (இருக்கோட்டும்.. இருக்கோட்டும்…)</p>
<p>என்ன உதய தாரகை! ஒரே காதலி பேச்சாக்கிடக்குது.. என்ன விசயம் என்றுதானே கேட்கிறீங்க…? எல்லாவற்றையும் தெளிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இப்போது உங்களுடன்… இன்னொரு பிரபஞ்சம் என்ற தொடரின் மூலம் ‘யாரும் பார்க்காத உதய தாரகையின் வானம்’ என்ற அடிக்குறிப்போடு உங்களைச் சந்தித்த நான், அத்தொடரில் தொடர்பதிவுகளை இட முடியாமல் போனது பற்றி எனக்கும் கவலைதான். என்ன செய்ய… ஒன்றா.. இரண்டா.. பல மாதங்கள் தொடரிலமைந்த எந்தப் பதிவையும் பிரசுரிக்க முடியவில்லை. கொஞ்சம் வேலைப்பளு கூடியதால் முறையாக இன்னொரு பிரபஞ்சத்தை சமைக்க முடியவில்லை. (பார்ரா… பிரபஞ்சத்தை சமைக்கப் போறாராம்.. ரொம்ப நக்கலாப் போச்சு…)</p>
<p><span id="more-214"></span></p>
<p>இதோ இன்னொரு பிரபஞ்சத்தின் மூன்றாவது பதிவு விரிகின்றது. உலகில் உணர்வுகளின் பிடிப்பில் அகப்பட்டு, தன்னையே இழக்காத சந்தர்ப்பங்களைக் கொண்டிருக்கும் மனிதர்களைக் காண்பது அரிது. உணர்வுகளுக்கு அத்தனை சக்தியுண்டு. உணர்வுகளின் மிக உன்னதமானது அன்பு என்றால் நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். உணர்வுகளின் மூச்சாய் அமைந்திருப்பதுவும் அதுவே. கோபம் என்பது உணர்வு என்றால் அதை தணிக்கக்கூடிய உணர்வு அன்புதான். இப்படி எந்த உணர்வாக இருந்த போதிலும் அவற்றை அந்நிலையிலிருந்து தம் நிலையாம் அன்பே உருவாய் அமைந்த நிலைக்குக் கொண்டு வருவது அன்பு என்ற உணர்வு ஒன்றேதான். (போதும்! போதும்! அன்புக்கு மார்க்கடிங் எக்ஸகடிவ் வேலை பார்க்கிறீங்களா உதய தாரகை?)</p>
<p><img class="alignnone size-full wp-image-215" src="http://niram.files.wordpress.com/2008/05/affection_edit.jpg?w=460&h=274" alt="" width="460" height="274" /></p>
<p>அன்பின் ஆரம்பத்தில் தான் அனைத்து உணர்வுகளும் அடங்குகின்றது. காதலும் அப்படித்தான். அன்பின் தீவிரம் தான் காதலாக வேண்டும். எனக்கின்னும் ஞாபகமிருக்கிறது, நான் எனது கிராமப் பாடசாலையிலிருந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்து, தலைநகரத்தின் பிரபல பாடசாலைக்கு கல்வி கற்க வந்த காலம்! ஆஹா… அந்த நேரம் நான் வடித்த கண்ணீரை சேகரித்திருந்தால் வறட்சிக் காலங்களில் மின்சார துண்டிப்புக்களே நடத்தியிருக்கத் தேவையில்லை. சின்ன வயசில் (அது சின்ன வயசா?) உறவுகளைப் பிரிந்து வருகின்ற ஏக்கம்! வந்ததால் ஏற்பட்ட தாக்கம்!</p>
<p>நான் வீட்டிற்கு கடிதம் எழுத காகிதத்தை எடுத்தால் என் கண்களே முந்திக் கொண்டு காகிதத்தில் சித்திரம் வரைந்து கொள்ளும். காகிதத்தில் நானெழுதும் பேனா மையை, கண்ணீர் வர்ணச் சித்திரமாய் மாற்றியமைக்கும். பெற்றோரை, உற்றாரை பிரிந்து வந்த கவலையின் வெளிப்பாடுதான் அது! ஆனால், அந்தக் கவலை என்ற உணர்வு என்னைப் பல மாதங்கள் காதலித்தது தவிர்க்க முடியாத உணர்வுப் பகிர்வுதான். அப்போ உங்க முதலாவது காதலி கவலை என்றுதான் சொல்ல வர்ரீங்களா? என்று நீங்கள் கேட்க நினைப்பது போல் எனக்குத் தோனுகிறது. அவசரப்படப்படாது. கவலையைப் போய் எனது காதலி என்பேனா..? சொல்லுங்க.. நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்…</p>
<p>தலைநகரத்து பாடசாலையில் கற்ற நாட்களில் நான் சந்தித்த பாத்திரங்கள் எண்ணிலடங்காதவை தாம். அங்கே சந்தித்த ஒவ்வொரு பாத்திரங்களைப் பற்றியும் பொருத்தமான நேரங்களில் பொருத்தமான சம்பவங்களினூடாக உங்களிடம் பிரிதொரு பதிவில் பகிர்ந்து கொள்வேன். இந்தப் பதிவில் எனது முதலாவது காதலியைப் பற்றி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.</p>
<p>நான் கற்றது ஆண்கள் பாடசாலையில் தான். எனது சகபாடி ஒருவன் அவனது தோழியைப் பற்றி தினமும் இடைவேளை நேரத்தில் வர்ணித்துக் கொண்டேயிருப்பான். அவன் வர்ணிப்புகளின் நான் புதைந்து போவேன். அந்த வர்ணிப்புகளில் அன்பு என்ற நிலையைத் தாண்டி தயவு, கீழ்படிவு, புத்திக்கூர்மை என்ற பண்புகளெல்லாம் குறித்த பெண்ணின் வழியே தொடர்ந்து மிளிரக் காண்பேன்.</p>
<p>அடப்பாவி.. அந்தச் சின்ன வயசிலேயே உனக்கு காதல் கத்தரிக்காய் எல்லாம் வந்துவிட்டதா? என்றல்லவா நீங்கள் கேட்கிறீர்கள்? வேணாம் சார். அப்படியெல்லாம் சொல்லப்படாது. எல்லாம் ஒரு பீலிங்ஸ்தான். (ஆனாலும், நீங்க எடுத்த வாக்கிலேயே இப்படியொரு கேள்வி கேட்டிருக்கக்கூடாது..) சரி.. சரி.. மேட்டருக்கு வர்ரேன்…</p>
<p>என் நண்பனின் வர்ணிப்புகளில் அவள் பற்றிய எனது கனவுகள் வானளாவப் பரந்து விரிந்தன. நண்பனின் வர்ணிப்புகளில் என்னைத் தொலைத்தேன். அவளின் குணங்களைக் கண்டு வியந்தேன். அக்குணங்களை அவள் வெளிப்படுத்தும் தருணத்தில் நானும் அவள் முன்னால் இருக்க வேண்டுமென்று கற்பனைக் கோட்டை கட்டினேன். நண்பன் வர்ணிப்புகளில், அவளின் கருமங்களில் என்றுமே பிழை இருந்ததில்லை என்றே சொல்லுவான். உண்மையைச் சொல்லப் போனால், நான் அவளின் குணங்களில் என்னைத் தொலைத்தேன். அவள் போன்ற ஒருவளை நானும் தோழியாகப் பெற வேண்டுமென ஆர்வங் கொண்டேன். (இதெல்லாம் ரொம்ப ஓவர் உதய தாரகை!)</p>
<p>நாட்கள் நகர்ந்தன. தலைநகரத்திலிருந்து மீண்டும் கிராமத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று. ஆனாலும், என் நெஞ்சக்கூட்டின் நினைவுகளுக்குள் எல்லாம் அவள் செயல்கள்தான் நிரம்பி வழிந்தன. என் எண்ணங்கள் கூட, அவள் அதைச் செய்வாளா? இதைச் செய்வாளா? அப்படிச் செய்வாளா? இப்படிச் செய்வாளா? என்றெல்லாம் தங்களுக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டன. இப்படியாக எண்ணங்களையே கொள்ளை கொண்டவளாய் எனக்குள்ளேயே குடியிருந்தாள் அவள்.</p>
<p>கிராமத்து பாடசாலையில் நான். அது இன்னொரு இடைவேளை நேரம். கிராமத்துப் பாடசாலையில் ஆராதனை மண்டபத்தின் அருகால் நான் நடந்து செல்லுகையில், அம்மண்டபத்தின் அருகேயுள்ள கட்டிடத்தின் கண்ணாடிக் கதவு வழியாக ஒரு அதிசயம் கண்டேன். அது என் நண்பன் வர்ணித்த அவளே என்பேன். என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும், உண்மையாக அவளேதான் அக்கட்டடத்திற்குள் அடக்கமாக இருந்து கொண்டிருந்தாள். வாழ்க்கையில் நாம் எதை அடைய வேண்டுமென ஆர்வம் கொள்கிறோமோ, மனப்பூர்வமாக விரும்புகிறோமோ அது எமக்கு எப்போதாவது கிடைக்குமென்பது திண்ணமென்பதை எனக்குணர்த்திய இன்னொரு சம்பவம் இது!</p>
<p>என் மனவானில் சிறகடித்துப் பறந்து அவளை கண்டதிலிருந்து எனக்கு ஒரே புளகாங்கிதம் தான். நாம் எதிர்பார்க்கும் எல்லாமும் எப்போதும் எமக்குக் கிடைப்பதில்லை. ஆனால் ஒருவேளையில் நாம் எதிர்பார்த்திருந்த எதுவும் கிடைக்கப் பெறும் போது, எமக்கு ஏற்படும் சந்தோசம் இருக்கிறதே சொல்லி விளக்கி விட முடியாது! அனுபவித்துப் பார்க்க வேண்டும்! (உங்கள் நினைவுகள் உங்களின் எதிர்பார்ப்புகள் ஈடேறிய தருணங்களைச் சுற்றிக் கொண்டு ஓடுகிறதல்லவா? ஆமாம். அந்த நினைவுகளில் கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள்… எத்துணை சுகம்… எத்துணை இனிமை…)</p>
<p>எனது பாடசாலையில் அவளைக் கண்ட நாளிலிருந்து எனக்கு அவளோடு தோழமை கொள்ள வேண்டுமென்ற ஆசைதான்! என்ன செய்ய… யார்தான் இதற்கு உதவப் போகிறார்கள்…?</p>
<p>ஆனாலும், அவள் முன்னிருந்து நான் சொல்வதை அவள் செய்யும் அழகை ரசிக்க வேண்டும். அதில் நான் வியந்து போக வேண்டும் என்ற கனவுகளெல்லாம் கட்டாயம் நிறைவேறும் என்று உறுதியாக நான் நம்பியிருந்தேன். நம்பினார் கைவிடப்படுவாரா..? இல்லையே..</p>
<p>அவளின் முன்னிருந்து அவளோடு நேரடியாகப் பழகும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டேன். ஆனந்தமேயுருவாய் அவளருகே சென்றேன். (போதும்! போதும்..! எங்களுக்குப் பொறாமையாய் இருக்க….)</p>
<p>என்ன அதிசயம்! என் தலைநகரத்து பாடசாலையில் எனது நண்பன் வர்ணித்தவள் தானோ இவளென்று சந்தேகமெழுமளவில் அவள் ஒவ்வொரு அசைவும், நடவடிக்கையும் அமைந்திருந்தது. தினமும் அவளைச் சந்திக்க நான் திட்டமிட்டுக் கொண்டேன் (எல்லாம் பிளான் பண்ணித்தான் செய்வீங்களோ?). அவள் முன்னிருந்து அவள் செயல்களிலேயே வியந்து போக என்னை நான் தினமும் கண்டேன். அவளின் நடவடிக்கைகளை எப்படிச் சொல்வேன். அவளுக்கு நன்றாகப் பாடக்கூடத் தெரியும். நான் விரும்பும் பாடல்களை மட்டுமே மிகவும் இனிமையாகப் பாடுவாள். அவள் பாடல்களில் மெய்மறந்து திழைக்கலாம்.</p>
<p>அவள் அனைவருடனும் மிகவும் சரளமாகவும் இனிமையாகவும் பழகுவாள். ஆனால் அப்போது, அவளை ஒரு சிலரால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. அவள் சர்வகலையிலும் பாண்டித்தியம் பெற்றவளோ என்றே நான் சில வேளை எண்ணுவதுண்டு. அவளுக்கு அத்துணை அறிவு.. விவேகம்…! அந்தக் காலத்தில் அவளை விட அறிவுடையவர் யாருமிருந்திருக்க முடியாதென்றே என்னால் சொல்ல முடியும் (இதெல்லாம் ரொம்ப அதிகமான பில்ட் அப்). இத்தணைக்கும் எனக்கு அப்போது வயது வெறும் பதினான்கு மட்டுந்தான். (ரொம்ப குசும்புதான் உதய தாரகை!)</p>
<p>அவள் என்னைக் காதலித்தாலோ இல்லையோ நான் அவளைத் தீவிரமாகவே காதலித்தேன். ஆனால், காலச் சக்கரத்தின் சுழற்சியில் நாம் எதிர்பார்க்காத விடயங்கள் கூட வாழ்க்கையோட்டத்தில் எமக்கு இடம்பெறுவது தவிர்க்க முடியாததே! அப்படித்தான் அவளையும் நான் பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது!</p>
<p>அவளின் பெற்றோரோ உற்றாரோ அவளைக் கண்டிக்கவில்லை. அவளுடலில் ஏற்பட்ட திடீர் நோயின் காரணமாக, அவள் சிகி;ச்சை பெறுவதற்காக கிராமம் விட்டு தலைநகருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் அவளுக்கு ஏற்பட்டது. ஆனாலும் அவள் சிகிச்சைக்காக சென்ற இடத்தையோ, அவளுக்கு ஏற்பட்ட நோயையோ நானறியேன்! அவள் மீது நான் கொண்டிருந்த காதல் என்னை அப்படிச் செய்ய வைத்திருக்கக்கூடாது. ஆனாலும், பிறகு அவளை நான் எனது பாடசாலையில் காணவேயில்லை. விசாரித்துப் பார்த்த போது சொன்னார்கள்: அவளுக்கு என் கிராமத்திற்கு வர இஸ்டமில்லையாம் என்று. அவள் என்னை ஏமாற்றினாளா? அல்லது நான் தான் அவளால் ஏமாந்தேனா? ஏமாற்றம் என்ற உணர்வின் தோற்றம் இங்கு தேவைதானா? என்றெல்லாம் எனக்குள்ளேயே ஆயிரம் கேள்விகள். (என்ன உதய தாரகை நீங்க லவ் ப்ரேக் என்று எங்களுக்குச் சொல்லவேயில்லை…?)</p>
<p>இன்றும் அவள் நினைவுகளோடே நானும் இருக்கிறேன். அதனால் தான் இன்று உங்களோடு அவள் நினைவுகளை பதிவாக்கி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆனாலும் அவளைப் போன்ற பலரை இதுவரை சந்தித்திருக்கிறேன். அவளை விட விவேகமுடையவர்களைக் கூட சந்திந்திருக்கிறேன். அவர்களுடன் பழகியிருக்கிறேன். ஆனாலும், நான் முதலாவதாகக் காதலித்த அவளை என்னால் மறக்க முடியவில்லை.</p>
<p>என்ன உதய தாரகை! அவள், அவள் என்று சொல்லிக் கொண்டேயிருக்கீங்க… உங்களின் முதலாவது காதலியின் பெயரைக் கொஞ்சம் எங்களிடம் சொல்லக்கூடாதா? என்று நீங்கள் கேட்பது போல் எனக்குத் தோனுகிறது.</p>
<p>நான் அவளை செல்லமாக, போ எயிட் சிக்ஸ் [Four Eight Six] என்றே அழைப்பேன். பொதுவாக அவளை எல்லோரும் கம்பியூட்டர் என்றே அழைப்பர். என்னது கம்பியூட்டரா?!! அப்போ நீங்க இவ்வளவு நேரமும் அவள் என்று சொன்னது கம்பியூட்டரைப் பற்றியா? புரிஞ்சிக்கிட்டாச் சரிதான்.. உதய தாரகை எங்களைக் கவுத்துப் போட்டியப்பா…ரொம்ப நக்கலாப் போச்சு…</p>
<p>இப்போது ‘அவள்’ என்று இக்கட்டுரையில் வரும் இடங்களில் ‘கம்பியூட்டர்’ என்பதைப் பிரதியிட்டு வாசித்துப் பாருங்கள். கம்பியூட்டரில் நான் கொண்டிருந்த ஆர்வத்தை காதலாய் உருவகித்து, அதில் காதலியாய் கம்பியூட்டரை ஆக்கி உங்களோடு எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன். கொஞ்சம் வித்தியாசமான வில்லங்கத்தனமான முயற்சிதான்!</p>
<p>நீங்களும் சில விடயங்களின் மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள். அதுபற்றி நிறத்தோடு பகிர்ந்து கொள்ளுங்களேன். அனுபவங்களை அனுபவித்து ஆனந்தம் காண்போமா?</p>
<p>இன்னொரு பிரபஞ்சத்தின் இன்னொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.</p>
<p>- உதய தாரகை</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/niram.wordpress.com/214/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/niram.wordpress.com/214/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/niram.wordpress.com/214/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/niram.wordpress.com/214/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/niram.wordpress.com/214/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/niram.wordpress.com/214/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/niram.wordpress.com/214/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/niram.wordpress.com/214/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/niram.wordpress.com/214/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/niram.wordpress.com/214/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/niram.wordpress.com/214/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/niram.wordpress.com/214/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=214&subd=niram&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://niram.wordpress.com/2008/05/12/my-first-lover-niram-zeezat/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/geekit-128.jpg" medium="image">
			<media:title type="html">உதய தாரகை</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2007/11/cosmic1.jpg" medium="image" />

		<media:content url="http://niram.files.wordpress.com/2008/05/affection_edit.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>தொற்றிக் கொள்ளும் உணர்வுகள்</title>
		<link>http://niram.wordpress.com/2008/04/08/infectious-emotions/</link>
		<comments>http://niram.wordpress.com/2008/04/08/infectious-emotions/#comments</comments>
		<pubDate>Tue, 08 Apr 2008 00:08:54 +0000</pubDate>
		<dc:creator>உதய தாரகை</dc:creator>
		
		<category><![CDATA[அதிசயம்]]></category>

		<category><![CDATA[அனுபவம்]]></category>

		<category><![CDATA[இயற்கை]]></category>

		<category><![CDATA[உலகம்]]></category>

		<category><![CDATA[எண்ணம்]]></category>

		<category><![CDATA[கட்டுரை]]></category>

		<category><![CDATA[கற்பனை]]></category>

		<category><![CDATA[சிரிப்பு]]></category>

		<category><![CDATA[சுவாரஸ்யம்]]></category>

		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>

		<category><![CDATA[புதியவை]]></category>

		<category><![CDATA[பெரியது]]></category>

		<category><![CDATA[மேற்கோள்]]></category>

		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://niram.wordpress.com/?p=209</guid>
		<description><![CDATA[விடியாத இரவொன்று இல்லை என்பது போலவே, எமது வாழ்விலும் துன்பங்களில்லாத நிலை இல்லையென்றே சொல்ல வேண்டும். இவ்வாறு எமக்கு துன்பங்கள் நேரும் போது அதனைச் சகித்துக் கொண்டு அதனை வெல்லக்கூடிய மனப்பக்குவம் வருவதென்பது கடினமான விடயம் தான். ஆனாலும், எவ்வாறான துன்பங்கள் நேரந்து விட்டபோதிலும் அவற்றை இன்பமயமாக மாற்றிக் கொள்வதற்கு எமக்கு நிறையத் தெரிவுகள் காணப்படுகின்றன என்பதென்னவோ மறுக்க முடியாத உண்மையாகும்.
வாழ்க்கையின் அனைத்து விதமான வீழ்ச்சிகளையும் சமாளிக்கும் சக்தி, ஆக்கபூர்வமான சிந்தனைக்குள்ளதென்பது நாமனைவரும் அறிந்த உண்மைதான். அவ்வாறான [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>விடியாத இரவொன்று இல்லை என்பது போலவே, எமது வாழ்விலும் துன்பங்களில்லாத நிலை இல்லையென்றே சொல்ல வேண்டும். இவ்வாறு எமக்கு துன்பங்கள் நேரும் போது அதனைச் சகித்துக் கொண்டு அதனை வெல்லக்கூடிய மனப்பக்குவம் வருவதென்பது கடினமான விடயம் தான். ஆனாலும், எவ்வாறான துன்பங்கள் நேரந்து விட்டபோதிலும் அவற்றை இன்பமயமாக மாற்றிக் கொள்வதற்கு எமக்கு நிறையத் தெரிவுகள் காணப்படுகின்றன என்பதென்னவோ மறுக்க முடியாத உண்மையாகும்.</p>
<p>வாழ்க்கையின் அனைத்து விதமான வீழ்ச்சிகளையும் சமாளிக்கும் சக்தி, ஆக்கபூர்வமான சிந்தனைக்குள்ளதென்பது நாமனைவரும் அறிந்த உண்மைதான். அவ்வாறான சிந்தனை மிகப்பெரிய விலை மதிக்க முடியாத சொத்து என்றே நான் கூறுவேன். ஆனாலும், சிலவேளைகளில், ஆக்கபூர்வமாகச் சிந்திப்பதற்கும் அவகாசம் இருக்காது. அல்லது அவ்வாறு சிந்தனை செய்வது மிகவும் கஷ்டமாகவிருக்கும் சந்தர்ப்பங்களும் வாழ்க்கையில் ஏற்படும். அப்படியானால், வாழ்க்கையில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து ஆக்கபூர்வமான நிலையை எம்மிடத்தில் கொண்டு வர என்ன செய்யலாம் என்ற நியாயமான கேள்வி உங்களிடம் தோன்றலாம்.</p>
<p><span id="more-209"></span></p>
<p><a href="http://niram.files.wordpress.com/2008/04/positive_thinking.jpg"><img class="alignnone size-full wp-image-210" src="http://niram.files.wordpress.com/2008/04/positive_thinking.jpg?w=460&h=291" alt="" width="460" height="291" /></a></p>
<p>ஒலிவர் வென்டெல் ஹோம்ஸ் என்ற அறிஞரின் ஆலோசனையைக் கடைப்பிடிப்பது மிகவும் இலகுவான வழியென்றே நான் சொல்வேன். மகிழ்ச்சியான முகத்தோற்றத்தை எந்நேரமும் வைத்துக் கொண்டிருக்கும் இனிமையான மந்திரத்தை நாமனைவரும் நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டும். அதில் தேர்ச்சி அடைய வேண்டும். தொடர்ச்சியாக மகிழ்ச்சியாக முகத்தை பேணிக் கொள்வது பற்றி பயிற்சி பெறுதல் பொருத்தமான செயற்பாடாகும்.</p>
<p>எமது முகங்களை மகிழச்சியே உருவாய்க் கொண்டதாக வைத்துக் கொள்ள முடியாமல் போகும் சந்தர்ப்பங்கள் வாழ்வில் நிறைய ஏற்படும். உண்மையாகவே, எம்மால் மகிழ்ச்சியே உருவான முகத்தை எந்நேரமும் கொண்டிருக்க முடியாதுதான். எனக்குப் புரிகிறது&#8230;. ஆனாலும், எம்மால் புன்முறுவல் பூக்க முடியாவிட்டாலும், முகத்தையாவது அமைதியே உருவாய் காணப்படும் மங்கலகரமான தோற்றமாக வைத்துக் கொள்ளலாம் தானே! - இதைத்தான் ஹோம்ஸ் வலியுறுத்துகிறார்.</p>
<p>சிரிக்கும் போது, எமது கவலைகளையும் உள்ளார்ந்தமாக வைத்துக் கொள்வது உடலியல் ரீதியில் அசாத்தியமானதொன்று என பலரும் கருதுகின்றார்கள். எம்மில் எவருக்குமே எந்நேரமும் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது கிடைக்கப்பெறாது. எந்நேரமும் எம்மால் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது. அதுதான் வாழ்க்கையின் கோலமும் கூட.</p>
<p>நாம் தைரியமாக இருக்கும் நிலையில், கவலைகளை ஏற்றுக் கொள்வது இயற்கையானதுதான். ஏனைய நேரங்களில் நாம் கவலைகளை எப்படிக் கையாள வேண்டும்? சிறியதொரு கவலையான சந்தர்ப்பம் ஏற்பட்டாலும், தைரியம் என்பது இல்லாததல் நாம் எமது நிலையை இழந்து விடுவதுதான் வழியா?? இவ்வாறான நிலையில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து எமது கவலைகளை மறந்துவிடுவது சாத்தியமான நிகழ்வுதானா? தொடரும் கேள்விகள் விந்தையானதே!!</p>
<p>எமது மகிழ்ச்சியான முகத்தைத் தரிசிக்கும் மக்கள் எம்மிடமிருந்து எதனை எடுத்துக் கொள்கிறார்கள்? எம்மால் அவர்கள் என்ன நன்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள்? வாழ்வில் ஈடுபாடு, மகிழ்ச்சி, சாந்தம், அமைதி எல்லாமே தொற்றிக் கொள்ளும் ஒருவகையான உணர்வுகள். இதனால், எமது சாந்தமான புன்முறுவல் பூக்கும் முகத்தைக் கண்டு கொள்கின்ற ஏனையோருக்கு, அவர்களை அறியாமலேயே எமது புன்முறுவல், சாந்தம் கொண்ட முகம் தொற்றிக் கொள்கிறது. என்ன அதிசயம் என்று பார்த்தீர்களா?</p>
<p>அதுதான் அதிசயமான தொற்று நோய். ஆக்கபூர்வமான தொற்று நோய். உங்கள் சிரிக்கும் முகத்தைப் பார்த்து உடனடியாக சிரிப்பால் பதிலளிக்கும் பாங்குள்ள மனிதர்களை நீங்கள் நாளாந்தம் தொடர்ச்சியாக் கண்டு கொண்டுதான் இருப்பீர்கள். உங்கள் புன்முறுவல் அவர்களைத் தொற்றிக் கொள்ளும் அற்புதம் தான் அங்கே நிகழ்கிறது&#8230;!!!</p>
<p>தொற்றிக் கொள்கின்ற உணர்வுகளை கொண்டவர்களாய் பரிணமிக்க நாம் முனைந்தால், நாமும் மகிழ்வடைவோம். மற்றவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யலாம். ஆனால், தொற்றிக் கொள்ளும் உணர்வுகள் ஆனந்தத்தைத் தரும் அழகிய உணர்வுகளாக இருக்க வேண்டுமென்பது கட்டாயமான விதியென்பது மட்டும் எழுதப்படாத விதி.</p>
<p>- உதய தாரகை</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/niram.wordpress.com/209/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/niram.wordpress.com/209/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/niram.wordpress.com/209/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/niram.wordpress.com/209/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/niram.wordpress.com/209/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/niram.wordpress.com/209/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/niram.wordpress.com/209/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/niram.wordpress.com/209/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/niram.wordpress.com/209/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/niram.wordpress.com/209/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/niram.wordpress.com/209/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/niram.wordpress.com/209/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=209&subd=niram&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://niram.wordpress.com/2008/04/08/infectious-emotions/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/geekit-128.jpg" medium="image">
			<media:title type="html">உதய தாரகை</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2008/04/positive_thinking.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>அதுதான் வாழ்க்கை!</title>
		<link>http://niram.wordpress.com/2008/04/07/this-is-life-and-happiness/</link>
		<comments>http://niram.wordpress.com/2008/04/07/this-is-life-and-happiness/#comments</comments>
		<pubDate>Mon, 07 Apr 2008 12:08:48 +0000</pubDate>
		<dc:creator>உதய தாரகை</dc:creator>
		
		<category><![CDATA[அதிசயம்]]></category>

		<category><![CDATA[அனுபவம்]]></category>

		<category><![CDATA[இயற்கை]]></category>

		<category><![CDATA[உலகம்]]></category>

		<category><![CDATA[எண்ணம்]]></category>

		<category><![CDATA[கட்டுரை]]></category>

		<category><![CDATA[மேற்கோள்]]></category>

		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://niram.wordpress.com/?p=207</guid>
		<description><![CDATA[எமது வாழ்வின் ஒவ்வொரு புதிய நாளும் புதிய ஆரம்பத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் நிலைகளைச் சாத்தியமாக்கும் தன்மை கொண்டது. வாழ்தலின் ஒவ்வொரு கணத்தையும் மிகவும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டியது தொடர்பில் நாமே நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது கையில் தான் எமது இன்றைய நாளின் இனிமையில் சதவீதம் தங்கியுள்ளதென்றால் மறுக்கத்தான் முடியுமா?
எமது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நாளும் எமது நீண்ட கால இலக்குகளை அடைந்து கொள்ள வழிசமைக்கும் களமாகும். நாம் ஒவ்வொரு நாளையும் ஒரு ஏணியில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>எமது வாழ்வின் ஒவ்வொரு புதிய நாளும் புதிய ஆரம்பத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் நிலைகளைச் சாத்தியமாக்கும் தன்மை கொண்டது. வாழ்தலின் ஒவ்வொரு கணத்தையும் மிகவும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டியது தொடர்பில் நாமே நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது கையில் தான் எமது இன்றைய நாளின் இனிமையில் சதவீதம் தங்கியுள்ளதென்றால் மறுக்கத்தான் முடியுமா?</p>
<p>எமது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நாளும் எமது நீண்ட கால இலக்குகளை அடைந்து கொள்ள வழிசமைக்கும் களமாகும். நாம் ஒவ்வொரு நாளையும் ஒரு ஏணியில் காணப்படும் படியாகவே கணிப்பிட வேண்டும். அதுதான் வாழ்க்கையின் வாழ்தலின் வழி என்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால், என்ன செய்ய? நாம் ஏணியிலே பல படிகளைக் கடந்து ஏறிவிட்ட போதிலும் அடைந்து விட்ட இடம் பொருத்தமற்றதாக அமைகின்றது என்றால் என்ன செய்வது?</p>
<p><span id="more-207"></span></p>
<p><a href="http://niram.files.wordpress.com/2008/04/smile-happy.jpg"><img class="alignnone size-full wp-image-208" src="http://niram.files.wordpress.com/2008/04/smile-happy.jpg?w=448&h=299" alt="அவள் ஆனந்தமாகச் சிரிக்கிறாள்" width="448" height="299" /></a></p>
<p>வெற்றியும் மகிழ்ச்சியும் பயணங்கள்தாம். அவை ஒருபோதும் குறிப்பிட்ட முற்றுப்புள்ளிகள் ஆகாது. எம்மால் ஒருபோதும் வாழ்வின் எந்தக் கட்டத்தினதும் இறுதி முடிவாக மகிழ்ச்சியையோ அல்லது வெற்றியையோ கண்டு கொள்ள முடியாது. மாறாக நாம் தாம் வெற்றி மற்றும் மகிழ்ச்சி என்பன காணப்படுகின்ற பாதைகளைத் தெரிவு செய்து எமது பயணங்களைத் தொடர வேண்டும். இவ்வாறு பயணப்படுகையில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் எம்மால் கண்டு கொள்ள முடியாவிட்டால் அவற்றை எம்மால் ஒருபோதும் கண்டு கொள்ள முடியாது.</p>
<p>மகிழ்ச்சியைக் கண்டடைந்தவர்கள், இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது பற்றி தெளிவான அறிவைக் கொண்டு காணப்படுவார்கள். அவர்கள், ஒவ்வொரு நாளும் வாழ்க்கையின் மகிழ்ச்சி மற்றும் வெற்றி ஆகியவற்றைக் கண்டு கொள்ள அனுதினமும் உழைப்பார்கள். ஈற்றில் அதில் வெற்றியும் காண்பார்கள்.</p>
<p>செல்வச் செழிப்பு, பௌதீக வளம் என்பனவற்றை பெற்றுக் கொண்டால் வாழ்வில் நாம் மகிழ்ச்சியாகத் திகழ்ந்து விடலாமென நாம் நினைக்கிறோம். வெறும் செல்வம் எமக்கு நீடித்த மகிழ்ச்சியைத் தந்திடுமா? வாழ்வில் எப்போதும் வெற்றியாளர்களாகத் திகழ உதவி செய்து விடுமா? இல்லையே&#8230;.</p>
<p>எவரும் அவர்கள் செய்கின்ற உழைப்பிற்கு ஏற்ற வகையில் வெற்றி காண்பார்கள். மகிழ்ச்சியே உருவாய் அமையும் வாழ்க்கையை தம்வசம் கொண்டிருப்பார்கள்.</p>
<p>வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கண்டடைய நாம் எம்மிடமே தேட வேண்டும். எம்முள்ளேயே மகிழ்ச்சியை வைத்துக் கொண்டு அவற்றை தொலைத்துவிட்டவர்களாக, வெளியுலகில் தேடித் திரிவது எந்தவகையில் பொருந்தும்.</p>
<p>நான் முன்னொரு பதிவில் குறிப்பிட்டது போன்று, வாழ்வில் சின்னச் சின்ன விடயங்களிலேயே மகிழ்ச்சி பொதிந்து காணப்படும். இன்னொருவருக்கு நாம் செய்யும் உதவியால் நாமடையக்கூடிய மகிழ்ச்சியைப் பற்றி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதுதான் வாழ்க்கை! அங்கேதான் மகிழ்ச்சிப் பிரவாகம் ஓயாமல் நிகழ்கிறது. எமக்கு பிரியமானவர்களை இழந்த போது நாமடையும் கவலையை மற்றவர்களுக்கு நாம் செய்யும் உதவிகளால் மகிழ்ச்சியாக பரிவர்த்தனை கூட செய்து கொள்ள முடியும்.</p>
<p>- உதய தாரகை</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/niram.wordpress.com/207/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/niram.wordpress.com/207/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/niram.wordpress.com/207/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/niram.wordpress.com/207/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/niram.wordpress.com/207/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/niram.wordpress.com/207/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/niram.wordpress.com/207/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/niram.wordpress.com/207/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/niram.wordpress.com/207/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/niram.wordpress.com/207/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/niram.wordpress.com/207/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/niram.wordpress.com/207/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=207&subd=niram&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://niram.wordpress.com/2008/04/07/this-is-life-and-happiness/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/geekit-128.jpg" medium="image">
			<media:title type="html">உதய தாரகை</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2008/04/smile-happy.jpg" medium="image">
			<media:title type="html">அவள் ஆனந்தமாகச் சிரிக்கிறாள்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>புதியதொரு ஆரம்பம்&#8230;</title>
		<link>http://niram.wordpress.com/2008/04/03/itgeek-weblog/</link>
		<comments>http://niram.wordpress.com/2008/04/03/itgeek-weblog/#comments</comments>
		<pubDate>Thu, 03 Apr 2008 08:21:50 +0000</pubDate>
		<dc:creator>உதய தாரகை</dc:creator>
		
		<category><![CDATA[அனுபவம்]]></category>

		<category><![CDATA[இணையம்]]></category>

		<category><![CDATA[உலகம்]]></category>

		<category><![CDATA[எண்ணம்]]></category>

		<category><![CDATA[கூகிள் (Google)]]></category>

		<category><![CDATA[செய்தி]]></category>

		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>

		<category><![CDATA[புதியவை]]></category>

		<category><![CDATA[விஞ்ஞானம்]]></category>

		<guid isPermaLink="false">http://niram.wordpress.com/?p=206</guid>
		<description><![CDATA[கணினி தொடர்பான, இணையம் தொடர்பான விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஒரு இணைய வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன்.
அதன் முகவரி&#8230;
http://itgeek.wordpress.com
சென்று பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..
சிறிய முயற்சி மட்டும்தான். தொடர்ந்து வலைப்பதிவை Update செய்ய ஆவலாயுள்ளேன்&#8230;
- உதய தாரகை
       ]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>கணினி தொடர்பான, இணையம் தொடர்பான விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஒரு இணைய வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன்.</p>
<p>அதன் முகவரி&#8230;</p>
<p><a href="http://itgeek.wordpress.com">http://itgeek.wordpress.com</a></p>
<p>சென்று பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..</p>
<p>சிறிய முயற்சி மட்டும்தான். தொடர்ந்து வலைப்பதிவை Update செய்ய ஆவலாயுள்ளேன்&#8230;</p>
<p>- உதய தாரகை</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/niram.wordpress.com/206/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/niram.wordpress.com/206/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/niram.wordpress.com/206/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/niram.wordpress.com/206/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/niram.wordpress.com/206/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/niram.wordpress.com/206/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/niram.wordpress.com/206/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/niram.wordpress.com/206/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/niram.wordpress.com/206/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/niram.wordpress.com/206/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/niram.wordpress.com/206/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/niram.wordpress.com/206/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=206&subd=niram&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://niram.wordpress.com/2008/04/03/itgeek-weblog/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/geekit-128.jpg" medium="image">
			<media:title type="html">உதய தாரகை</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மகிழ்ச்சியைக் கண்டடைதல்</title>
		<link>http://niram.wordpress.com/2008/03/02/all-about-happiness-niram-exclusive-zeezat/</link>
		<comments>http://niram.wordpress.com/2008/03/02/all-about-happiness-niram-exclusive-zeezat/#comments</comments>
		<pubDate>Sun, 02 Mar 2008 12:41:28 +0000</pubDate>
		<dc:creator>உதய தாரகை</dc:creator>
		
		<category><![CDATA[அதிசயம்]]></category>

		<category><![CDATA[அனுபவம்]]></category>

		<category><![CDATA[இயற்கை]]></category>

		<category><![CDATA[உலகம்]]></category>

		<category><![CDATA[எண்ணம்]]></category>

		<category><![CDATA[கட்டுரை]]></category>

		<category><![CDATA[சுவாரஸ்யம்]]></category>

		<category><![CDATA[புதியவை]]></category>

		<category><![CDATA[மேற்கோள்]]></category>

		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://niram.wordpress.com/?p=204</guid>
		<description><![CDATA[ஆமா&#8230; நீங்க நினைப்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. இவரு யாரு&#8230;? &#8220;எங்களுக்கு மகிழ்ச்சி பற்றிச் சொல்லித் தருவதற்கு? நாங்க மகிழ்ச்சியாத்தான் இருக்கோம்&#8230; மகிழ்ச்சியை தொலைச்சவங்கதான் மகிழ்ச்சியை கண்டடைதல் என்று தலைப்புப் போட்டு மகிழ்ச்சியைத் தேடித் திரிய வேணும் - நாங்க அல்ல..!&#8221; என்றெல்லாம் அல்லவா நினைக்கிறீர்கள்..?
உண்மையும் கூடத்தான்.. மகிழ்ச்சியைக் கண்டடைதல் என்ற தலைப்பைப் பற்றி யோசிக்கவே ஆளுமை வேண்டும். உண்மையில் இக்கட்டுரையில் நான் சொல்லப்போகவுள்ள விடயங்கள் யாவும் நான் சந்தித்த அனுபவங்கள், மகிழ்ச்சி தொடர்பிலமைந்த நூல்கள் என்பனவற்றின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>ஆமா&#8230; நீங்க நினைப்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. இவரு யாரு&#8230;? &#8220;எங்களுக்கு மகிழ்ச்சி பற்றிச் சொல்லித் தருவதற்கு? நாங்க மகிழ்ச்சியாத்தான் இருக்கோம்&#8230; மகிழ்ச்சியை தொலைச்சவங்கதான் மகிழ்ச்சியை கண்டடைதல் என்று தலைப்புப் போட்டு மகிழ்ச்சியைத் தேடித் திரிய வேணும் - நாங்க அல்ல..!&#8221; என்றெல்லாம் அல்லவா நினைக்கிறீர்கள்..?</p>
<p>உண்மையும் கூடத்தான்.. மகிழ்ச்சியைக் கண்டடைதல் என்ற தலைப்பைப் பற்றி யோசிக்கவே ஆளுமை வேண்டும். உண்மையில் இக்கட்டுரையில் நான் சொல்லப்போகவுள்ள விடயங்கள் யாவும் நான் சந்தித்த அனுபவங்கள், மகிழ்ச்சி தொடர்பிலமைந்த நூல்கள் என்பனவற்றின் அமைந்த விடயங்களின் தொகுப்பாகவே அமையப் போகிறது. பிரபஞ்சத்திலேயே மகிழ்ச்சியைப் போதிக்கும் எந்தக் கலாசாலையும் இதுவரையில் உருவாகவில்லை என்றே நான் சொல்வேன்.</p>
<p><span id="more-204"></span></p>
<p>கசப்பான அனுபவங்களைக் கூட நினைவுகளில் விட்டுச் செல்லும் கலாசாலை வாழ்க்கை, பிரிதொரு காலத்தில் மகிழ்ச்சியை அந்த நினைவுகளின் நிகழ்வோடு சம்மந்தப்பட்டவர்களுக்கு கொடுக்கின்ற விடயமும் இருக்கிறது. ஆக, நிகழ்காலத்தை விட மனிதன் எதிர்காலத்திற்கே மகிழ்ச்சியை சேமித்து வைக்கின்றானோ? என்ற நியாயமான சந்தேகம் எனக்குள் எழுவதுண்டு.</p>
<p>மகிழ்ச்சியைப் பற்றிக் கதைக்கும் போது, அங்கு எண்ணங்களின் ஒருங்கமைவு இருக்க வேண்டும். சிந்தனைகளின் சித்தரிப்பு இருக்க வேண்டும். வாழ்க்கையின் வலி இருக்க வேண்டும். வலிகள் எமக்களிக்கும் வரலாறுகள் சொல்லப்பட வேண்டும். சந்தோசம் என்ற சொல்லில் உயிர் பிறக்க வேண்டும். மகிழ்ச்சி - அது சாகாவரம் பெற வேண்டும்.</p>
<p>மகிழ்ச்சி பற்றி நான் கதைக்க நினைப்பது உங்களுக்குள்ளும் ஓர் ஆர்வத்தைத் தோற்றுவித்திருக்கும் என்றே நம்புகிறேன். மகிழ்ச்சி - அது பிரபஞ்ச பாஷை. சிரிப்பின் ஆரம்பப் பருவம் அதுவல்லவா? உங்களுக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய கட்டங்கள் அல்லது அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம்.. வாழ்;க்கையில் மகிழ்ச்சி, துக்கம் என்பன மாறி மாறி வருவது இயற்கைதானே.. அவைதானே வாழ்க்கைக்கும் உயிருண்டு என்பதைச் சொல்லும் முரசொலிகள்.</p>
<p>வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கண்டடைதல் தொடர்பில் எத்தனையோ சொற்பொழிவுகள் நாளாந்தம் உலகளவில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. &#8220;ஆக்கபூர்வமான சிந்தனை அபிவிருத்தி&#8221; என்ற குறிப்போடு, வர்த்தகமே செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். ஆக்கபூர்வமான சிந்தனை என்பது வெறுமனே, அது தொடர்பான நூல்களை வாசிப்பதாலோ அல்லது சொற்பொழிவுகளைக் கேட்பதாலோ எம்மிடம் குடிகொண்டு விடும் என நீங்கள் நம்புகிறீர்களா?? ஆக, ஆக்;கபூர்வமான சிந்தனை மட்டும்தான் மகிழ்ச்சியைத் தந்து விடுகிறதா? - தொடரும் கேள்விகள். அப்படியானால், மகிழ்ச்சியைக் கண்டடைதல் என்பது சாத்தியமற்றதா? இது இன்னுமொரு கேள்வி&#8230;</p>
<p>ஒரு தனிமனிதனை எடுத்துக் கொள்வோம். உலகில் இருக்க வேண்டிய அத்தனை செல்வங்கள் அவனிடம் இருக்கிறதென வைத்துக் கொள்வோம். (எல்லாம் ஒரு கற்பனை தான்.. சரியா?) அந்நிலையில், குறித்த நபர் மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டதாய் சம்மந்தம் இல்லாத இடங்களிலெல்லாம் மகிழ்;ச்சியைத் தேடிக் கொண்டிருப்பார். மகிழ்ச்சியை ஒரு சடப்பொருளாய் அவர் கண்டார் போலும். மகிழ்ச்சி, மனத்தின் எழுச்சி என்பதை நீங்கள் அறிவீர்கள். செல்வங்களைத் தன்னகம் கொண்டவர்கள், அவர்களிடம் உள்ள பொருள்ச் செல்வத்தின் குழுவில் இருக்கும் இன்னொரு பொருளாகவே மகிழ்ச்சியைக் காண்கிறார்கள். இதனால், அவர்கள் மகிழ்ச்சியை முற்றிலும் மறந்தவர்களாகின்றனர்.</p>
<p>மகிழ்ச்சியை அளந்து சொல்வதற்கு கருவிகள் ஏதும் கண்டுபிடித்த தகவல் இன்னுமில்லை. நீங்கள் அப்படித் தகவலேதும் அறிந்திருந்தால் சொல்லியனுப்புங்கள். ஆக, மகிழ்ச்சி அளவிட முடியாதது தான். அதனால்தானோ, &#8220;மகிழ்ச்சிக் கடல்&#8221; என்றெல்லாம் மகிழ்ச்சியின் அளவை ஒப்பிட்டுச் சொல்வார்களோ? இருக்கட்டும். இருக்கட்டும்.</p>
<p>மகிழ்ச்சியைப் பற்றியும் மகிழ்ச்சியையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மகிழ்ச்சி என்பது மனத்தின் ஒரு நிலையா? அல்லது ஆற்றலா? அல்லது மனிதனின் ஒரு வகையான இருப்பு நிலையா? மகிழ்ச்சியை கற்றுக் கொள்ளத்தான் முடியுமா? - இதோ கேள்விகள் தொடர்கிறது.. மகிழ்ச்சி மனதோடு சம்மந்தப்பட்ட விடயமாகவே இருக்க வேண்டும். இருக்க முடியும் என நான் பலமாக நம்புகிறேன்.</p>
<p>மனச்சோர்வு என்ற ஒரு வகையான அசாதாரண நிலை எமக்கெல்லாம் ஏற்படுவது என்பது நாம் மகிழ்ச்சியான நிலையில் இல்லை என்பதைத் தான் சொல்லி வைக்கின்றது. ஆனாலும், 50 வருடங்களுக்கு முன்னர் மனச்சோர்வு ஏற்பட்டால் அதனைப் போக்க அதிக சிரத்தை எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இன்றைய நவீன யுகத்தில் மனச்சோர்வை வேகமாக எம்மிலிருந்து போக்கி விடலாமென ஒரு ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது. ஆக, முந்திய காலத்தைப் போலல்லாது, நாம் மனச்சோர்வு தொடர்பில் விழிப்புணர்வு கொண்டவர்களாக இருக்கிறோம் என்றே அந்த ஆய்வறிக்கை சொல்லாமல் சொல்லியதோ?! இருக்கட்டும்.. இருக்கட்டும்..</p>
<p><img src="http://niram.files.wordpress.com/2008/03/happy.jpg" alt="happy.jpg" /></p>
<p>கிராமிய வாழ்க்கை என்பது மகிழ்ச்சியின் ஊற்று என்று பலரும் தமது இலக்கியப் படைப்புகள், கருத்துகள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அப்படியானால், கிராமத்தில் அப்படி என்ன மகிழ்ச்சியை நிலை நிறுத்துவதற்கான கலையை மக்களிடம் போதிக்கிறார்கள்.??</p>
<p>நான் எனது வாழ்க்கையில் கிராம மக்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். அவர்களின் ஒவ்வொருவரினதும் முகங்களில் உண்மையான மகிழ்ச்சி எனும் உன்னதமான உயிர்ப்பைக் கண்டிருக்கிறேன். அவர்கள் எனக்கு மகிழ்ச்சியைப் பற்றி நிறையவே கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் எதையும் கற்றுத் தரவில்லை. (என்னது! முன்னுக்கு பின் முரணான கருத்துக்களைத் தெரிவிக்கிறது?) அவர்களின் வாழ்வே கற்றுக் கொள்ளப்பட வேண்டியது என்றே நான் சொல்வேன்.</p>
<p>இங்கிதம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடி அகராதி புரட்டாதீர்கள். ஒரு கிராமத்தின் ஒரு மனிதரைச் சந்தியுங்கள். அச்சந்திப்பே உங்களுக்கு இங்கிதம் என்பதை மட்டுமல்ல வாழ்வு என்ற அகராதியின் பல பக்கங்களை மனனம் செய்ய ஆதாரமாக அமையும். வாழ்க்கையை இரசிக்கத் தெரிந்தவர்கள் அவர்கள். வாழ்க்கையை இரசியுங்கள் என்று சொல்லும் அவர்களின் செயல்கள். வாழத் தெரிந்தவர்கள். மகிழ்ச்சியின் புத்திரர்கள்.</p>
<p>அவர்களிடம் புன்சிரிப்பு என்றும் இருக்கும். அன்பே உருவாய் இருப்பார்கள். மகிழ்ச்சிதான் அவர்களின் மொழி. மகிழ்ச்சி அவர்களின் வாழ்க்கையின் ஒளி. அவர்களால் எப்படி இவ்வாறு மகிழ்ச்சியாய் இருக்க முடிகிறது? யார்தான் இவர்களுக்கு மகிழ்ச்சியாய் இருப்பதற்கு கற்றுக் கொடுத்திருப்பார்கள்&#8230;? - இதுவும் கேள்விகளின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியதுதான். நான் இவர்களின் வாழ்வின் மீதான அணுகுகையை எண்ணி பல வேளைகளில் வியந்திருக்க