<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>நிறம்</title>
	<atom:link href="http://niram.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://niram.wordpress.com</link>
	<description>எண்ணம். வசந்தம். மாற்றம்.</description>
	<lastBuildDate>Thu, 29 Oct 2009 19:17:43 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.com/</generator>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<cloud domain='niram.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://www.gravatar.com/blavatar/8a660037ada29573f2bcfb436d8cf98e?s=96&#038;d=http://s.wordpress.com/i/buttonw-com.png</url>
		<title>நிறம்</title>
		<link>http://niram.wordpress.com</link>
	</image>
			<item>
		<title>மெய்யென நம்பியுள்ள பொய்கள்</title>
		<link>http://niram.wordpress.com/2009/10/29/false-things-but-we-believe-as-true/</link>
		<comments>http://niram.wordpress.com/2009/10/29/false-things-but-we-believe-as-true/#comments</comments>
		<pubDate>Thu, 29 Oct 2009 19:03:12 +0000</pubDate>
		<dc:creator>உதய தாரகை</dc:creator>
				<category><![CDATA[அதிசயம்]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[ஆங்கிலம்]]></category>
		<category><![CDATA[இயற்கை]]></category>
		<category><![CDATA[உணர்வு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[எண்ணம்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[குறுந்தகவல்]]></category>
		<category><![CDATA[கூகிள் (Google)]]></category>
		<category><![CDATA[சிரிப்பு]]></category>
		<category><![CDATA[செல்பேசி]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[மேற்கோள்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>
		<category><![CDATA[விஞ்ஞானம்]]></category>

		<guid isPermaLink="false">http://niram.wordpress.com/?p=226</guid>
		<description><![CDATA[நாம் கொண்டுள்ள நம்பிக்கைகளின் வகைகளும், நிலைகளும் ஒவ்வொருக்கு ஒருவர் வேறுபடும். நம்பிக்கை &#8211; சூழல் காரணிகளால் வலுப்படுத்தப்படலாம் அல்லது, வழு என பலரும் அதனை விட்டு நீங்கலாம். ஆனால், நம்பிக்கை &#8211; பிழையைக்கூட சரியென எண்ண வைத்துவிடும் வலிமை கொண்டது!
நம்பிக்கைகள் என்றுமே மெய்யானதாக இருந்ததுமில்லை. அதுபோலவே, என்றுமே பொய்யானதாகவும் இருந்ததில்லை. நம்பிக்கை, மெய்யுடன் கலக்கும் போது, தரம் கொள்கிறது.

பல்லாண்டுகள் எம் முன்னோர்கள் சொன்ன விடயங்களை எந்த ஆய்ந்தறிதலும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் நாம், பல செய்கைகள், முறைகள், [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=226&subd=niram&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>நாம் கொண்டுள்ள நம்பிக்கைகளின் வகைகளும், நிலைகளும் ஒவ்வொருக்கு ஒருவர் வேறுபடும். நம்பிக்கை &#8211; சூழல் காரணிகளால் வலுப்படுத்தப்படலாம் அல்லது, வழு என பலரும் அதனை விட்டு நீங்கலாம். ஆனால், நம்பிக்கை &#8211; பிழையைக்கூட சரியென எண்ண வைத்துவிடும் வலிமை கொண்டது!</p>
<p>நம்பிக்கைகள் என்றுமே மெய்யானதாக இருந்ததுமில்லை. அதுபோலவே, என்றுமே பொய்யானதாகவும் இருந்ததில்லை. நம்பிக்கை, மெய்யுடன் கலக்கும் போது, தரம் கொள்கிறது.</p>
<p><span id="more-226"></span></p>
<p>பல்லாண்டுகள் எம் முன்னோர்கள் சொன்ன விடயங்களை எந்த ஆய்ந்தறிதலும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் நாம், பல செய்கைகள், முறைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் என்பவற்றிற்கு பின்னே காணப்படும் அழகிய அறிவியல் சார்ந்த விடயங்களை அறிய மறந்து விடுகிறோம்.</p>
<p>இதனால், நம்பிக்கைகள் பல வேளை கனமிழக்கிறது. சிலவேளை, புதிய காரணமில்லாத இன்னொரு (மூட)நம்பிக்கைக்கு விதை போடுகிறது. அதுவே, நம்பிக்கைக்கான இன்னொரு குழுவை உருவாக்கவும் வழி செய்துவிடுகிறது!</p>
<p>சின்னச் சின்ன விடயங்களில் இருக்கும் உண்மை நிலைகளைக் கூடக் கண்டு கொள்ளாமல், நாம் நினைத்தபாட்டிலேயே மெய்யென எல்லாவற்றையும் நம்புவது, எந்த வகையில் பொருத்தமானது?</p>
<p>கடந்த ஏப்ரல் மாதம் கூகிளின் ஊழியர் ஒருவர் நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில், நின்று கொண்டு அங்கு வந்தவர்களிடம் ஒரு சிறிய கேள்வியொன்றைக் கேட்டார். அது மிக மிகச் சிறிய கேள்விதான். ஆனால், பெற்ற விடைகள் தந்துவிட்ட பெறுபேறு கொடுமையானது.</p>
<p>கேட்கப்பட்ட கேள்வி What is a Browser? என்பது தான். கொடுமை என்னவென்றால், குறித்த கணக்கெடுப்பில் கலந்துகொண்ட எட்டு சதவீதமானவர்களுக்கு மட்டுந்தான் Browser என்றால் என்னவென்றே தெரிந்திருந்தது. தமிழில் Web Browser ஐ இணைய உலாவி என்று அழைப்போம்.</p>
<p>குறித்த நாளில் கணக்கெடுப்பில் கலந்து கொண்டோர் பலரும் Search Engine (தேடற்பொறி) ஐ இணைய உலாவி என்று நம்பி வைத்திருந்துள்ளனர். கூகிளின் Google Chrome என்ற இணைய உலாவியை எவரும் அறிந்திருக்கவில்லை என்பது இன்னொரு பெரிய கொடுமை.</p>
<p>அந்தக் கொடுமையை நீங்களும் பாருங்களேன். வாய்விட்டுச் சிரிக்கலாம்.</p>
<p><span style="text-align:center; display: block;"><a href="http://niram.wordpress.com/2009/10/29/false-things-but-we-believe-as-true/"><img src="http://img.youtube.com/vi/o4MwTvtyrUQ/2.jpg" alt="" /></a></span></p>
<p>அதிகமானோர் தங்கள் கணினியில் காணப்படும் இணைய உலாவியை தங்களின் வலை உலாவலுக்கு பயன்படுத்திவிடுகின்றனர். அவர்கள் தாங்கள் பாவிக்கும் இணைய உலாவிகளைப் பற்றி எந்தக் கவனமும் எடுப்பதில்லை.</p>
<p>&#8220;Google Chrome ஐ போட்டு, internet ஐ browse பண்ணு, அது ரொம்ப fast ஆனது&#8221; என்றேன்.</p>
<p>&#8220;அதென்ன குரோம்..? சும்மா விட்டுட்டு வேலையைப் பாரு&#8221; என்றான் அவன்.</p>
<p>இது இன்னொருவிடம். வேறொருவன். நான்.</p>
<p>&#8220;Firefox பாவித்திருக்கிறயா? ரொம்ப secure ஆன browser. வேகமாக சைட்டெல்லாம் load ஆக்கும்&#8221; என்றேன்.</p>
<p>&#8220;என்னாது..? எனக்குத் தெரியும்.. ஆனா அதெல்லாம் install பண்ணிக் கொண்டு இருப்பானேன். என்ன கம்பியூட்டர்ல Internet Explorer இருக்கு அது போதும்&#8221; என்கிறான்.</p>
<p>உலகில் இருபது சதவீதமானவர்கள் இன்னும் Internet Explorer (IE) எனும் Microsoft இன் இணைய உலாவியின் Version 6 ஐ (அதாவது IE6) தமது வலை உலாவலுக்காக பயன்படுத்துகின்றனர். இணையத்தின் பல இணையத்தளங்கள் இந்த உலாவியில் சரியாகத் தெரிவதில்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?</p>
<p>Kill IE6 என்று அந்த உலாவியின் பாவனையை உலகத்திலிருந்து ஒழிக்க பல போராட்டங்கள் வேறு நடைபெறுகிறது (கெளம்பிட்டாங்கய்யா..).</p>
<p>இணையத்தில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் கூகிளுக்கு நிகர் கூகிள் தான். கூகிளின் தொழில்நுட்ப முன்னெடுப்புகளுக்கு தடையாக விளங்கும் ஒரு விடயமாக அதிகமானோர் IE பாவிப்பது விளங்குகிறது.</p>
<p>அதெப்படி? என்பது உங்களின் அடுத்த கேள்வியாக இருக்கலாம்.</p>
<p>புதிய தொழில்நுட்ப சாத்தியங்களைக் கொண்ட சேவைகளை அறிமுகப்படுத்தும் போது, அந்தப் புதிய விடயங்கள் தொழிற்படும் நிலையிலுள்ள உலாவிகளிலேயே அந்தச் சேவை கொடிகட்டிப் பறக்கலாம். அண்மையில் வெளிவந்த <a href="http://niram.wordpress.com/2009/10/11/google-wave-my-experience/">Google Wave</a> இனை IE இல் வெறுமனே பாவிக்க முடியாது. அதற்கு <a href="http://code.google.com/chrome/chromeframe/">கூகிள் தரும் நீட்டிப்பொன்றை</a> IE இற்கு install செய்ய வேண்டும் (கெளப்புறாங்கய்யா பீதிய..).</p>
<p>இப்போது, காணொளிகளை கண்டு களிக்க YouTube தளத்திற்கு IE6 மூலம் சென்றால், &#8220;நீங்க பயன்படுத்துவது ரொம்ப பழைய browser சார். நாங்க விரைவில் உங்களுக்கு வீடியோ காட்டமாட்டோம். முடிந்தால், அதற்கிடையில் புதிய browser ஒன்றை போட்டுக்கோங்க..!&#8221; என்று <a href="http://niram.files.wordpress.com/2009/10/youtube-ie6-6msgfull.png" target="_blank">கூகிள் அறிவித்தல்</a> கொடுக்கிறது.</p>
<p>Browser என்றால் என்னவென்பது பற்றி பிழையான தகவல்களை எண்ணியுள்ள மக்கள் தொடர்பில் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் கூகிள் அண்மையில் What Browser என்ற செயற்றிட்டமொன்றை தொடங்கி அதற்கு <a href="http://www.whatbrowser.org/">அழகான இணையத்தளமொன்றையும்</a> வெளியிட்டது.</p>
<p>பலரும் மெய்யென நம்பியுள்ள Browser பற்றிய பொய்களை அகற்றும் பொருட்டு, இது உதவுமென கூகிள் நினைக்கிறது. வயதுபோனவர்களுக்குக் கூட, உலாவி என்றால் என்ன? என்ற கேள்விக்கான விடையை சின்னதொரு ஒரு நிமிடம் வரை நீளும் குறுகிய காணொளி மூலம் கூகிள் விளக்குகிறது.</p>
<p>ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?!</p>
<p><span style="text-align:center; display: block;"><a href="http://niram.wordpress.com/2009/10/29/false-things-but-we-believe-as-true/"><img src="http://img.youtube.com/vi/BrXPcaRlBqo/2.jpg" alt="" /></a></span></p>
<p>நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழில்நுட்ப விடயங்கள் சம்மந்தமாக சொல்லும் போது, நீங்கள் கதைக்கும் கலைச்சொற்களின் பாரத்தை பார்த்தே பல பேர், இந்த மேட்டர் நமக்கு சரிப்பட்டு வராது என்று முடிவு எடுத்துவிடுவார்கள்.</p>
<p>ஆதலால், தொழில்நுட்ப விடயங்களை, ஏன் சங்கீரணமான விடயங்களைக் கூட மிக எளிமையாகச் சொல்லிக் கொடுக்கும் போது, இன்னும் இதுபற்றி அறிய வேண்டுமென அவர்கள் ஆர்வங் கொள்வார்கள்.</p>
<p>நாம் தெரிந்திருக்கிறோம் என்பதன் உண்மை, அறிந்த விடயத்தை நாம் எந்தளவில் மற்றவருக்கு எளிமையாக எடுத்துச் சொல்ல முடிகிறது என்பதிலேயே தங்கியுள்ளது.</p>
<p><strong>இன்னும் சில உண்மையான பொய்கள்</strong></p>
<p>தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பாகத்தான் பலரும் மெய்யென பொய்களை நம்பியிருக்கின்றனர் என நீங்கள் நினைக்கலாம். நினைத்தால் அதுகூட பொய்யானதே!!</p>
<p>நமது மூளையில் பத்து சதவீதத்தைதான் நாம் பயன்படுத்துகிறோம். ஏனைய தொன்னூறு சதவீதமும் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது என்பது நாமனைவரும் நம்பியுள்ள விடயம். ஏன் பல வியாபார விளம்பரங்கள் கூட இதைச் சொல்லி வர்த்தகமே நடத்துகிறார்கள். ஆனால், <a href="http://faculty.washington.edu/chudler/tenper.html">இது பொய்</a>. நாம் மூளையை முற்றாகவே பயன்படுத்துகிறோம்.</p>
<p><img class="aligncenter size-full wp-image-642" title="water_overdose" src="http://niram.files.wordpress.com/2009/10/water_overdose.jpg?w=465&#038;h=160" alt="water_overdose" width="465" height="160" /></p>
<p>நீரை எவ்வளவு வேண்டுமானாலும் அருந்தலாம், எந்தப் பிரச்சனையும் கிடையாது என்றே எல்லோரும் நம்புகின்றனர். உண்மை நிலை அவ்வாறல்ல. அதிகமாக நீரை அருந்தியதால் மரணமடைந்த செய்தியை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? <a href="http://www.scientificamerican.com/article.cfm?id=strange-but-true-drinking-too-much-water-can-kill">நடத்திருக்கிறதே!!</a></p>
<p>The Moment of Truth என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதில் வெறும் lie detector என்ற polygraph கருவியின் மூலம் போட்டியில் கலந்து கொள்ளுபவர் சொல்லும் விடயங்கள் உண்மையா பொய்யா என கண்டுபிடிக்கப்படும். ஆம், இல்லை என்ற விடைகளை சொல்லும் போது, அது உண்மையா அல்லது பொய்யா என அந்த கருவி கண்டுபிடித்துச் சொல்லிவிடும்.</p>
<p>இந்தப் போட்டியில் கேட்கப்படும் கேள்விகளோ, படு மோசமானவை. அந்தரங்கமான விடயங்கள் பற்றியதாகும். ஆனால், வெற்றியாளருக்குக் கொடுக்கப்படும் பரிசு பல மில்லியன் டொலர்களாகும்!!</p>
<p>குறிப்பிட்ட கருவியால் பொய்யைக் கண்டுபிடிக்க முடியுமா? அப்படி முடிந்தாலும் அதன் பெறுபேறு மிகவும் சரியானதா? 1996 ஆம் ஆண்டு, American Civil Liberties Union, &#8220;பொய்யைக் கண்டுபிடிக்கும் எந்த கருவியும் கிடையாது. &#8220;லை டிடக்கடர்&#8221; என்பது குருதி அழுத்தம், சுவாசிக்கும் வீதம் போன்றவற்றைக் கொண்டே உண்மைத் தன்மையை அறிகின்றது. இந்த உளவியல் ரீதியான மாற்றங்களை பல உணர்ச்சிகள் மூலம் மாற்றமடையச் செய்ய முடியும்&#8221; என அறிக்கை விட்டது.</p>
<p>மெய், பொய் எதுவெனச் சொல்லும் கருவி பொய்யைச் சரியாக கண்டுபிடிக்காது என்ற விடயமும் ஒரு மெய்யாகும். பொய்யைச் சரியாகக் கண்டுபிடிக்கும் என்று நம்பியது மெய்யான பொய்யாகும் (குழம்பிட்டீங்களா?).</p>
<p>பொய், மெய் என்பன பற்றி அறிதலே வாழ்க்கையின் மூட நம்பிக்கைகளை களைதலுக்கான ஆதாரம். இன்று ஆதாரம் இல்லாமலே பல விடயங்கள் ஆதரவு வேண்டி நிற்பது கொடுமை! தேடல் ஒன்றுதான் தெளிவின் வழி!</p>
<p>- உதய தாரகை</p>
Posted in அதிசயம், அனுபவம், அழகு, ஆங்கிலம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, குறுந்தகவல், கூகிள் (Google), சிரிப்பு, செல்பேசி, தொழில்நுட்பம், மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம்  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/niram.wordpress.com/226/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/niram.wordpress.com/226/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/niram.wordpress.com/226/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/niram.wordpress.com/226/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/niram.wordpress.com/226/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/niram.wordpress.com/226/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/niram.wordpress.com/226/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/niram.wordpress.com/226/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/niram.wordpress.com/226/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/niram.wordpress.com/226/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=226&subd=niram&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://niram.wordpress.com/2009/10/29/false-things-but-we-believe-as-true/feed/</wfw:commentRss>
		<slash:comments>8</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1b23f926c064fc73135bfbe1afb14d28?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">உதய தாரகை</media:title>
		</media:content>

		<media:content url="http://img.youtube.com/vi/o4MwTvtyrUQ/2.jpg" medium="image" />

		<media:content url="http://img.youtube.com/vi/BrXPcaRlBqo/2.jpg" medium="image" />

		<media:content url="http://niram.files.wordpress.com/2009/10/water_overdose.jpg" medium="image">
			<media:title type="html">water_overdose</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>உனக்கான பாடல், உன்னைப் பற்றிப் பாடவில்லை</title>
		<link>http://niram.wordpress.com/2009/10/24/i-want-my-old-me/</link>
		<comments>http://niram.wordpress.com/2009/10/24/i-want-my-old-me/#comments</comments>
		<pubDate>Sat, 24 Oct 2009 21:29:10 +0000</pubDate>
		<dc:creator>உதய தாரகை</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[உணர்வு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[எண்ணம்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://niram.wordpress.com/?p=623</guid>
		<description><![CDATA[இந்த இரவில் நிறத்தில் புதிதாக பதிவொன்றை இடவேண்டுமென நான் நினைக்கிறேன். நான் எதுவாக இருந்தேனோ அதுவாகவே ஆகிவிட ஆர்வங் கொள்கிறேன். அதுவொரு மிக நீளமான பயணம். மிக மிக நீளமானது தான். அங்கும் இங்குமென பல இடங்களில் இடர்களைச் சந்திந்திருக்கிறேன். வாழ்க்கை என்பது அவ்வளவு லேசுபட்டதல்ல. முக்கியமாக வயது வந்த வாழ்க்கை.
கடந்துவிட்ட நேரத்தை மீளக்கொண்டு வரும் வரமெனக்கு இருந்திருந்தால் என கற்பனை செய்கிறேன். எனது வாழ்வின் அழகிய நேரங்கள் நிறைவு பெற்றுவிட்டது போன்ற எண்ணம் எனக்குள் குடிகொள்கிறது. இனிவரும் எல்லாமே [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=623&subd=niram&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>இந்த இரவில் நிறத்தில் புதிதாக பதிவொன்றை இடவேண்டுமென நான் நினைக்கிறேன். நான் எதுவாக இருந்தேனோ அதுவாகவே ஆகிவிட ஆர்வங் கொள்கிறேன். அதுவொரு மிக நீளமான பயணம். மிக மிக நீளமானது தான். அங்கும் இங்குமென பல இடங்களில் இடர்களைச் சந்திந்திருக்கிறேன். வாழ்க்கை என்பது அவ்வளவு லேசுபட்டதல்ல. முக்கியமாக வயது வந்த வாழ்க்கை.</p>
<p>கடந்துவிட்ட நேரத்தை மீளக்கொண்டு வரும் வரமெனக்கு இருந்திருந்தால் என கற்பனை செய்கிறேன். எனது வாழ்வின் அழகிய நேரங்கள் நிறைவு பெற்றுவிட்டது போன்ற எண்ணம் எனக்குள் குடிகொள்கிறது. இனிவரும் எல்லாமே நானறிந்த அழகிய நேரங்களை விடக் குறைவான அர்த்தங்களையே கொண்டிருக்கும். வாழ்வைத் திரும்பிப் பார்க்கும் போது, அந்த மங்கலான நிலையை மட்டுமே என்னால் கண்டு கொள்ள முடிகிறது.</p>
<p><span id="more-623"></span></p>
<p>அது ஆரம்பத்திலிருந்தே உண்மையாகவே இருந்தது, ஆனாலும், நான் இப்போதே அது மெய்யானதென உணர்ந்து கொண்டேன்.</p>
<p><img class="aligncenter size-full wp-image-625" title="life_empty" src="http://niram.files.wordpress.com/2009/10/life_empty.jpg?w=465&#038;h=250" alt="life_empty" width="465" height="250" /></p>
<p>எனது வாழ்க்கையில் நான் பெற்றிருந்த எல்லாவற்றையும் பிரிந்துவிட்டு நிற்கின்றேன். நண்பர்கள், பாடசாலை, வாழ்க்கையைப் பற்றி படிக்க கழித்த நாட்கள், சும்மா எதுவுமே இல்லாமல் கழித்த நாட்கள், எழுதுதல், கனவு காணுதல், செவிமடுத்தல், நானாக இருத்தல் என எல்லாவற்றையும் பிரிந்து விட்டதாய் சொல்லும் ஒரு அலை எனக்குள் பாய்கிறது.</p>
<p>இயல்பாகவிருக்க வேண்டுமெனச் சொல்லும் வாழ்க்கையின் உத்தரவு இந்நாட்களில் என்னைத் தாக்குகின்றது. நான் எனக்கான எல்லாவற்றையும் செய்து விட்ட போதிலும், சில நேரங்களில் என்னை நேசிக்க முடியாமல் இருக்கிறது. பல நேரங்களில் என்னை உச்சளவில் காதல் செய்ய முடிகிறது. மாறி மாறிக் கொண்டிருக்கும் நிகழ்வில் நானும் அகப்பட்டாலும், அதனை எப்போதும் எனக்காக தக்கவைத்துக் கொள்ள ஆர்வம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வேன்.</p>
<p>குறிப்பிட்ட சில விடயங்களை முன்னொரு போதும் இல்லாத வகையில் பிரிந்து விட்டதாய் உணர்கிறேன். உங்களுக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது. அவை திருப்திப் படுத்தக்கூடிய உணர்வுகளாக தோன்றலாம். அவை ஆத்மாவை தேற்றுவது போல் தெரியலாம். ஒரு வருடத்திற்கு பின்னர், நான் மனமுடைந்த நிலையில் இருக்கிறேன். வாழ்க்கையே அதன் மனத்தை உடைத்துக் கொண்டுவிட்டது. வாழ்க்கையில் நீங்கள் நினைப்பது போல், எல்லாமே அமைந்துவிடுவதில்லை.</p>
<p>நான் எனது &#8216;பழைய நானிடமிருந்து&#8217; நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. வேகமாக வளர்ந்தது போலவே, நான் சிறுபிள்ளையாக மீண்டும் ஆகிவிட்டேன். சில நேரங்களில் இதுவே நான் தொடரப்போகும் வாழ்க்கை என்று உணர்கின்றேன். இன்னும் சில நேரங்களில் தப்பியோட வேண்டுமென உணர்கிறேன்.</p>
<p>இன்றிரவு நான் தப்பியோடுவதை தேர்ந்தெடுக்கிறேன். மூடப்பட்ட கதவுகளை திரும்பிப் பார்க்காமல், புதிய கதவுகளை திறந்து கொள்ளப் போகிறேன். எனது ஆர்வங்கள், திறமைகள் என எல்லாவற்றையும் சேர்த்த பெரிய உலகின் கதவுகள் அவை. எனது ஆர்வங்களுக்கு அர்த்தம் கொடுக்கும் ஆதாரங்களை இந்த உலகத்தில் நான் காண வேண்டுமென தவிக்கிறேன். அதிகமாகவே சஞ்சலமடைகிறேன். கஷ்டப்படுகிறேன். நான் வெறுமையாய் உணர்கிறேன்.</p>
<p>எனக்கு அழுதிட வேண்டும் போலிருக்கிறது. எனக்கு நீ வேண்டும். எல்லாமே முன்பிருந்தது போல், மீண்டும் அமைந்துவிடும் என்று தயவுசெய்து சொல்&#8230;</p>
<p>- உதய தாரகை</p>
Posted in அனுபவம், உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, வாழ்க்கை  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/niram.wordpress.com/623/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/niram.wordpress.com/623/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/niram.wordpress.com/623/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/niram.wordpress.com/623/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/niram.wordpress.com/623/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/niram.wordpress.com/623/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/niram.wordpress.com/623/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/niram.wordpress.com/623/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/niram.wordpress.com/623/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/niram.wordpress.com/623/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=623&subd=niram&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://niram.wordpress.com/2009/10/24/i-want-my-old-me/feed/</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1b23f926c064fc73135bfbe1afb14d28?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">உதய தாரகை</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2009/10/life_empty.jpg" medium="image">
			<media:title type="html">life_empty</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>Google Wave இல் அலையடித்த அனுபவங்கள்</title>
		<link>http://niram.wordpress.com/2009/10/11/google-wave-my-experience/</link>
		<comments>http://niram.wordpress.com/2009/10/11/google-wave-my-experience/#comments</comments>
		<pubDate>Sun, 11 Oct 2009 19:50:24 +0000</pubDate>
		<dc:creator>உதய தாரகை</dc:creator>
				<category><![CDATA[அதிசயம்]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[ஆங்கிலம்]]></category>
		<category><![CDATA[இணையம்]]></category>
		<category><![CDATA[இயற்கை]]></category>
		<category><![CDATA[உணர்வு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[எண்ணம்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[கூகிள் (Google)]]></category>
		<category><![CDATA[சிரிப்பு]]></category>
		<category><![CDATA[சுவாரஸ்யம்]]></category>
		<category><![CDATA[செல்பேசி]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[பெரியது]]></category>
		<category><![CDATA[மேற்கோள்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>
		<category><![CDATA[விஞ்ஞானம்]]></category>

		<guid isPermaLink="false">http://niram.wordpress.com/?p=608</guid>
		<description><![CDATA[கடந்த மாதம் இறுதி நாளின் காலை நேரம் எங்கும் அமைதியாகவே விடிந்தது. விடிந்தது என்றே நம்புகிறேன். ஆனால், இணையவெளி எல்லாமே ஒரே ஆரவாரம், கும்மாளம், ஆரவாரிப்பு, ஆவல், காத்திருப்பு என எல்லாமே பரந்து விரிந்து கிடந்தன.
காரணங்கள் எதுவுமே இல்லாமல், எந்த விடயங்களும் நடப்பதில்லை. அப்படித்தான் அன்றைய பொழுதின் இணைய ஆரவாரங்களுக்கும் காரணமிருந்தது. Google Wave என்ற கூகிளின் மிகப்புதிய தொடர்பாடல் கருவி (Communication Tool) தனது பயணத்தை உலக மக்களோடு சேர்ந்து தொடங்கிய நாள்.

Google Wave இற்கான [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=608&subd=niram&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>கடந்த மாதம் இறுதி நாளின் காலை நேரம் எங்கும் அமைதியாகவே விடிந்தது. விடிந்தது என்றே நம்புகிறேன். ஆனால், இணையவெளி எல்லாமே ஒரே ஆரவாரம், கும்மாளம், ஆரவாரிப்பு, ஆவல், காத்திருப்பு என எல்லாமே பரந்து விரிந்து கிடந்தன.</p>
<p>காரணங்கள் எதுவுமே இல்லாமல், எந்த விடயங்களும் நடப்பதில்லை. அப்படித்தான் அன்றைய பொழுதின் இணைய ஆரவாரங்களுக்கும் காரணமிருந்தது. Google Wave என்ற கூகிளின் மிகப்புதிய தொடர்பாடல் கருவி (Communication Tool) தனது பயணத்தை உலக மக்களோடு சேர்ந்து தொடங்கிய நாள்.</p>
<p><span id="more-608"></span></p>
<p>Google Wave இற்கான அழைப்பைப் பெற்ற ஒருவரினாலேயே இந்தப் புதிய கருவியின் அதீத அதிசயங்களை தங்கள் கண்முன் நடந்தேற கண்டு களிக்க முடியுமென்பது கூகிளின் தகவல். எல்லோரும் போலவே, நானும் <a href="https://services.google.com/fb/forms/wavesignup/">Google Wave இற்கான அழைப்பைப் பெறும் சுட்டியில்</a> Google Wave இன் அறிமுகம் இடம் பெற்ற நாளே என்னையும் சேர்த்துக் கொண்டேன்.</p>
<p style="text-align:center;"><img class="aligncenter size-full wp-image-615" title="google_wave" src="http://niram.files.wordpress.com/2009/10/google_wave1.jpg?w=465&#038;h=160" alt="google_wave" width="465" height="160" /></p>
<p>குறித்த செப்டம்பர் 30 ஆம் திகதியே எனக்கு அழைப்பு கிடைத்துவிடும் என மிகவும் நம்பிக்கையுடனேயே இருந்தேன். இதில் கொடுமை என்னவென்றால், சிலவேளை எனக்குக் கிடைத்த அழைப்பு எரிதங்கள் (Spams) பகுதிக்குள் சேர்ந்திருக்கலாமென எண்ணி அப்பகுதியையும் திரும்பத் திரும்ப அந்தக் கிழமை முழுவதுமாக அவதானித்த நிலையை என்னால் மறக்க முடியாது.</p>
<p>எனது டிவிட்டர் நண்பனொருவன் தனக்கு Google Wave இற்கான அழைப்பு கிடைத்துவிட்டதாம் என செய்தி சொன்ன போது, அவனிடம் எனக்கொரு அழைப்பை கொடுத்துவிடு என்று செய்தி சொன்னேன். அவனோ என்னையும் அலையடிக்க அழைத்துவிட்டதாக உடனடியாக பதில் சொன்னான். ஆனாலும், அழைப்பு என்னை அந்தநேரமே கிட்டவில்லை என்பது கவலை.</p>
<p>கூகிளிடமிருந்து நேரடியாக அழைப்பைப் பெறும் ஒருவராலேயே இன்னும் எட்டுப் பேரை Google Wave இல் அலையடிக்க அழைக்க முடியும். எனது நண்பனும் அவ்வாறு அழைப்பைப் பெற்றவன் தான். ஆனாலும், அவன் அலையடிக்க என்னை அழைத்து பத்து நாட்கள் கழிந்த பின்னரே எனக்கு அலையடிக்க எனக்கு அழைப்பு வந்தது. ஆமா.. நேற்றுக் காலை காத்திருப்பின் சந்தோசம் கனிந்துவிட்ட நாள்.</p>
<p>கூகிளிடமிருந்து நேரடியாக அழைப்பைப் பெற்ற ஒருவர், இன்னொருவரை அலையடிக்க அழைக்கும் இடைமுகத்தில், கூகிள் சொல்லும் செய்தி சுவாரஸ்யமானது. எனக்கு அழைப்புக் கிடைக்க பத்து நாட்கள் எடுத்ததற்கு அர்த்தமுள்ள காரணத்தை அது சொல்லி நின்றது.</p>
<p>&#8220;Invitations will not be sent immediately. We have a lot more stamps to lick.&#8221; என்பதுதான் அந்தச் செய்தி.</p>
<p><span style="background-color:#ffffff;">முத்திரையை எச்சிலில் படுத்தி கடிதவுறையில் ஒட்டியனுப்பும் பாரம்பரிய தபால் முறையை ஞாபகப்படுத்துவதாய் அந்தச் செய்தி அமைந்துள்ளது. Lifehacker இணையத்தளத்தின் ஒரு பதிவின் படி, Google Wave அழைப்புக்கள், தன்னியக்கமாக இல்லாமல், கைம்முறையாகவே (manual) அவுஸ்திரேலியாவிலிருந்து அனுப்பப்படுவதாக தகவலுள்ளது. அவுஸ்திரேலியாவிலேயே Google Wave இன் உருவாக்க பொறியியலாளர்கள் இருக்கிறார்கள் என்பது நீங்களறிந்தே!!</span></p>
<p><span style="background-color:#ffffff;">நேற்று காலை, நான் எனது மின்னஞ்சல்களைச் பார்க்கும் போது, Google Wave இற்கான அழைப்பு வந்திருந்தது. மகிழ்ச்சியைத் தந்தது. எனது நண்பனுக்கு அழைப்பெடுத்து அனுப்பிய அழைப்பு பத்து நாட்களுக்குப் பிறகாயினும் வந்து சேர்ந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்.</span></p>
<p><span style="background-color:#ffffff;">நான் எனது நண்பரிடமிருந்து Google Wave இற்கான அழைப்பைப் பெற்றுக் கொண்டதால், என்னால் எனது ஏனைய நண்பர்களை அலையடிக்க அழைக்க முடியாதுள்ளது கவலை.</span></p>
<p><span style="background-color:#ffffff;">எனது அலையடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாமென இந்தப் பதிவு.</span></p>
<p style="text-align:left;"><span style="background-color:#ffffff;">Google Account மூலமே Google Wave இற்கான இணைப்பு கிடைக்கப் பெறுகிறது. அதேபோல, Google Wave இல் இணைந்ததும், @gmail.com என்பதற்குப் பதிலாக, எமது Wave இற்கான முகவரி, @googlewave.com என மாறிவிடுவது அழகு.</span></p>
<p style="text-align:left;"><img class="aligncenter size-full wp-image-614" title="google_wave_cool" src="http://niram.files.wordpress.com/2009/10/google_wave_cool.jpg?w=468&#038;h=249" alt="google_wave_cool" width="468" height="249" /></p>
<p style="text-align:left;"><span style="background-color:#ffffff;">Google Wave இற்குள் நுழைந்ததும் wave ஒன்றை என் நண்பருக்கு அனுப்பிவிட்டு, இன்னொரு wave ஐத் தொடங்கி தமிழில் தட்டச்சு செய்து அதனை Google Wave இன் கணக்கைக் கொண்டிருக்கும் எல்லோரும் காணும் வகையில் Public நிலைக்கு ஆக்கிவிட்டேன்.</span></p>
<p><span style="background-color:#ffffff;">&#8220;இது என்ன மொழி?&#8221; என ஆங்கிலத்தில் அயர்லாந்திலிருந்து ஒருவர் என்னிடம் அலையடிக்கத் தொடங்கினார். ஆஹா.. Google Wave இன் அலையடிப்புப் பற்றி சொல்லவா வேண்டும்?</span></p>
<p style="text-align:center;"><span style="background-color:#ffffff;"><img class="aligncenter size-full wp-image-613" title="tamil_wave" src="http://niram.files.wordpress.com/2009/10/tamil_wave.jpg?w=468&#038;h=551" alt="tamil_wave" width="468" height="551" /></span></p>
<p><span style="background-color:#ffffff;">நீங்கள் அறிந்திருப்பீர்களே!! அவர் தட்டச்சு செய்கிறார் என்றெல்லாம் பில்ட்அப் கொடுத்து திரையில் செய்தி வராது. மறுமுனையில் நண்பர் எதை தட்டச்சு பண்ணுகிறாரோ அது உடனடியாக (அதுதாங்க real time) தெரியும். எத்தனை பேர் வேண்டுமானாலும், அலையடிக்க முடியும் என்பதுவும் அது real time இல் தெரியத் தொடங்குவதும் சுவாரஸ்யம்.</span></p>
<p><span style="background-color:#ffffff;">இது Google Wave இல் செய்யக்கூடிய வெறும் சின்ன விடயமொன்றுதான். ஆனால், Google Wave இன் மூலம் சாத்தியமாக்கக் கூடிய பல விடயங்கள் உண்டு. Google Wave ஆனது, Open Source ஆக கூகிளினால் அறிமுகம் செய்யப்பட்டது, எதிர்காலத்தில் இந்தப் புதிய தொடர்பாடல் நிலைக்கான சாத்தியங்களை அப்படியே எதிர்வு கூறுகின்றது.</span></p>
<p><span style="background-color:#ffffff;">Google Wave இன் அடிப்படை விடயங்களையும் அதன் சாத்தியங்களையும் இப்பதிவில் சொல்வது அவ்வளவு பொருத்தமாகாது என்பதால், எனது அலையடித்த அனுபவங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். Google Wave தொடர்பான விடயங்கள் அடங்கிய இணைப்புகளை பதிவின் இறுதியில் தருகிறேன்.</span></p>
<p><span style="background-color:#ffffff;">Public என்ற நிலையில் காணப்படும் wave பற்றி நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்த நிலையில் ஏதாவது &#8220;தமிழ்&#8221; என்ற சொல்லைக் கொண்ட தமிழ் மொழியாலான wave கள் காணப்படுமா? என அறிய ஆர்வம் கொண்டேன். அதனையும் தேடினேன். இரண்டு பொருத்தமான தேடற்பெறுபேறுகள் கிடைத்தன. அதிலொன்று என்னுடையது. </span></p>
<p style="text-align:center;"><span style="background-color:#ffffff;"><img class="aligncenter size-full wp-image-612" title="tamil_wave1" src="http://niram.files.wordpress.com/2009/10/tamil_wave1.jpg?w=468&#038;h=194" alt="tamil_wave1" width="468" height="194" /></span></p>
<p><span style="background-color:#ffffff;">ஆங்கிலத்தில் தட்டச்சுச் செய்யும் போதே, அதனைத் திருத்தித் தரும் Spelly, இணைய முகவரிகளை தட்டச்சு செய்ய அதற்கு இணைப்பை தன்னியக்கமாகவே வழங்கு Linky என பல துணைசெய் நிரல்கள் Google Wave இன் வலிமைக்கு வலிமை சேர்க்கின்றன.</span></p>
<p><span style="background-color:#ffffff;">Google Wave இன் முன்னோட்டமே இப்போது இடம்பெறுவதால், அதன் கூறுகள் பல செயலிழந்த நிலையில் இருப்பது கவனிக்கத்தக்கது. Google Wave இன் Settings பற்றிய பக்கம் சொல்லும் தகவல் சுவாரஸ்யமானது.</span></p>
<p style="text-align:center;"><span style="background-color:#ffffff;"><img class="aligncenter size-full wp-image-616" title="tamil_wave2" src="http://niram.files.wordpress.com/2009/10/tamil_wave2.jpg?w=468&#038;h=273" alt="tamil_wave2" width="468" height="273" /></span></p>
<p><span style="background-color:#ffffff;">கூகிளின் இந்தப் புதிய தொடர்பாடல் சேவை, அதன் Gmail போல், பாரியளவில் பிரசித்தம் கண்டு, பிரபல்யமாக யாவரும் விரும்பும் சேவையாக மலரப்போவதென்னமோ உண்மைதான். Gmail ஆரம்பிக்கப்பட்ட போது, அதில் Drafts என்ற நிலையில் மின்னஞ்சல்களை சேமிக்க முடியாமல் இருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இப்போது, Gmail தான் எல்லாமே என்றாகிவிட்டது.</span></p>
<p><span style="background-color:#ffffff;">முன்னேற்றங்கள் மற்றும் மாற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும். (அதுக்குள்ள ஒரு தத்துவமா?)</span></p>
<p><span style="background-color:#ffffff;">அழைப்புக் கிடைத்து வெறும் ஒரு நாளுக்குள்ளே இவ்வளவு அனுபவங்கள் நினைவுகளுக்கு சுவை சேர்க்கின்றன. இன்னும் பல அனுபவங்கள் இனிவரும் நாட்களை வசந்தமாக்கும் என நம்பலாம்.</span></p>
<p><span style="background-color:#ffffff;">Google Wave பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு அழைப்புக் கிடைத்துவிட்டதா? என்பதை சொல்லி அனுப்புங்கள். என்னோடு அலையடிக்க zeezat[at]googlewave.com என்ற முகவரிக்கு இணைப்பை ஏற்படுத்துங்கள். அலையடிக்கும் ஆவலோடு நான்.</span></p>
<p><span style="background-color:#ffffff;">- உதய தாரகை</span></p>
<p><span style="background-color:#ffffff;">Google Wave தொடர்பான விபரங்கள் அடங்கிய இணைப்புகள்</span></p>
<ol>
<li><a href="http://www.youtube.com/watch?v=v_UyVmITiYQ&amp;feature=channel">அறிமுக நிகழ்வின் முன்னோட்ட காணொளி. ரொம்ப நீ&#8230;ளமானது.</a></li>
<li><a href="http://www.youtube.com/watch?v=v_UyVmITiYQ&amp;feature=channel"></a>Lifehacker தளத்தின் Google Wave பற்றிய விபரமான பதிவுகள்
<ol>
<li><a href="http://lifehacker.com/5370738/google-wave-first-look">முன்னோட்டப் பதிவு</a></li>
<li><a href="http://lifehacker.com/5376138/google-wave-101">துப்புகள் சொல்லித் தரும் பதிவு</a></li>
</ol>
</li>
</ol>
Posted in அதிசயம், அனுபவம், அழகு, ஆங்கிலம், இணையம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கூகிள் (Google), சிரிப்பு, சுவாரஸ்யம், செல்பேசி, தொழில்நுட்பம், பெரியது, மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம்  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/niram.wordpress.com/608/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/niram.wordpress.com/608/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/niram.wordpress.com/608/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/niram.wordpress.com/608/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/niram.wordpress.com/608/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/niram.wordpress.com/608/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/niram.wordpress.com/608/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/niram.wordpress.com/608/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/niram.wordpress.com/608/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/niram.wordpress.com/608/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=608&subd=niram&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://niram.wordpress.com/2009/10/11/google-wave-my-experience/feed/</wfw:commentRss>
		<slash:comments>11</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1b23f926c064fc73135bfbe1afb14d28?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">உதய தாரகை</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2009/10/google_wave1.jpg" medium="image">
			<media:title type="html">google_wave</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2009/10/google_wave_cool.jpg" medium="image">
			<media:title type="html">google_wave_cool</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2009/10/tamil_wave.jpg" medium="image">
			<media:title type="html">tamil_wave</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2009/10/tamil_wave1.jpg" medium="image">
			<media:title type="html">tamil_wave1</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2009/10/tamil_wave2.jpg" medium="image">
			<media:title type="html">tamil_wave2</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மெழுகுவர்த்தியில் எனக்கு உடன்பாடில்லை</title>
		<link>http://niram.wordpress.com/2009/10/05/countries-rich-and-human-index/</link>
		<comments>http://niram.wordpress.com/2009/10/05/countries-rich-and-human-index/#comments</comments>
		<pubDate>Mon, 05 Oct 2009 21:06:04 +0000</pubDate>
		<dc:creator>உதய தாரகை</dc:creator>
				<category><![CDATA[அதிசயம்]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[ஆங்கிலம்]]></category>
		<category><![CDATA[ஆரம்பம்]]></category>
		<category><![CDATA[இணையம்]]></category>
		<category><![CDATA[இயற்கை]]></category>
		<category><![CDATA[உணர்வு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[எண்ணம்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[குறுந்தகவல்]]></category>
		<category><![CDATA[சிரிப்பு]]></category>
		<category><![CDATA[சுவாரஸ்யம்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[புதியவை]]></category>
		<category><![CDATA[பெரியது]]></category>
		<category><![CDATA[மேற்கோள்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>
		<category><![CDATA[விஞ்ஞானம்]]></category>

		<guid isPermaLink="false">http://niram.wordpress.com/?p=602</guid>
		<description><![CDATA[அன்றொரு நாள் மாலை வேளை, எனது நண்பனொருவனுடன் கதைத்துக் கொண்டிருந்த போது யோசித்த விடயமொன்றை அண்மையில் Forbes சஞ்சிகை ஆய்வொன்று செய்து அதன் பெறுபேறுகளை வெளியிட்டிருந்தது.
புள்ளிவிபரங்கள் பல வேளைகளில், ஒரு விடயம் சம்மந்தமான தரவுகளை விபரமாகச் சொல்வதில் வெற்றி கண்டு கொள்கின்றன. &#8220;எவ்வளவு பணத்தை இந்தப் உலகத்திலுள்ள பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள், அவர்களால், உலகத்தையே வாங்கி விடமுடியும் போல..&#8221; எனது நண்பன் பணம் பற்றி வியந்து கதைக்கத் தொடங்கினான்.

&#8220;குறைந்தது ஒரு நாட்டையாவது, பில் கேட்ஸால், தனது பணத்தால் விலைக்கு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=602&subd=niram&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>அன்றொரு நாள் மாலை வேளை, எனது நண்பனொருவனுடன் கதைத்துக் கொண்டிருந்த போது யோசித்த விடயமொன்றை அண்மையில் Forbes சஞ்சிகை ஆய்வொன்று செய்து அதன் பெறுபேறுகளை வெளியிட்டிருந்தது.</p>
<p>புள்ளிவிபரங்கள் பல வேளைகளில், ஒரு விடயம் சம்மந்தமான தரவுகளை விபரமாகச் சொல்வதில் வெற்றி கண்டு கொள்கின்றன. &#8220;எவ்வளவு பணத்தை இந்தப் உலகத்திலுள்ள பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள், அவர்களால், உலகத்தையே வாங்கி விடமுடியும் போல..&#8221; எனது நண்பன் பணம் பற்றி வியந்து கதைக்கத் தொடங்கினான்.</p>
<p><span id="more-602"></span></p>
<p>&#8220;குறைந்தது ஒரு நாட்டையாவது, பில் கேட்ஸால், தனது பணத்தால் விலைக்கு வாங்க முடியும்&#8221; என்றவாறு அவன் சொன்ன கருத்துக்கு விளக்கம் சொல்ல வழிகள் செய்தான் நண்பன். &#8220;ஆமா.. அவங்களால எவ்வளவோ முடியுது.. இதுகூட முடியாமப் போகுதா என்ன?&#8221; என்று எனது குறும்பான பதிலையும் அவன் சம்பாஷனைக்குள் சேர்த்துக் கொண்டேன்.</p>
<p>Forbes சஞ்சிகையானது, உலகத்தின் செல்வந்தர்களை பட்டியற்படுத்தும் வேலையை கச்சிதமாகவே செய்து கொண்டேயிருக்கிறது. அந்த சஞ்சிகையின் பட்டியற்படுத்தப்பட்ட முதல் 400 செல்வந்தர்கள், குறைந்தது ஒரு நாட்டையாவது விலைக்கு வாங்குமளவில் செல்வத்தைக் கொண்டுள்ளனர் என்பது வியப்பு.</p>
<p>பில் கேட்ஸின் மொத்த சொத்தின் மதிப்பு, உலகின் 140 நாடுகளை வாங்கிவிடும் அளவிற்கு விசாலமாம். பொலிவியா, உருகுவே போன்ற நாடுகள் இந்த 140 நாடுகளுக்குள் அடங்கியும் விடுகிறதாம் (நல்லா கெளப்புறாங்கய்யா.. பீதிய..).</p>
<p>கடந்த 12 மாதங்களில் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்த வோரன் பபட் கூட, வட கொரியாவை விலைக்கு வாங்குமளவிற்கு தகுதி கொண்டுள்ளாராம் (ஆஹா.. என்னமா எல்லாம் யோசிக்கிறாங்கய்யா..)</p>
<p>பணத்தின் அளவில் கொண்ட மதிப்பால் இப்படியெல்லாம் Forbes சஞ்சிகை புள்ளிவிபரங்களை எடுக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியிருக்க முடியாது.</p>
<p>எப்போதோ கட்டுரையொன்றில், &#8220;அமெரிக்கர்கள் புள்ளிவிபரங்கள் எடுக்காத விடயமே இல்லை. பாதையால் நடத்து கொண்டு செல்கையில் பாப்கோர்ன் சாப்பிட்டுக் கொண்டு செல்வோர் எத்தனை பேர்? என்ற புள்ளிவிபரங்கள் கூட அங்கு சுடச் சுடக் கிடைக்கும்&#8221; என்று வாசித்திருக்கிறேன்.</p>
<p>பலவேளைகளில், பிரசினங்களைத் தீர்க்கக் கிடைக்கும் முதல் துப்பாக புள்ளிவிபரங்கள் இருப்பது யாருமே கண்டுகொள்ளாத உண்மை.</p>
<p><img class="aligncenter size-full wp-image-603" title="sculpture_cool" src="http://niram.files.wordpress.com/2009/10/sculpture_cool1.jpg?w=465&#038;h=160" alt="sculpture_cool" width="465" height="160" /></p>
<p>நாடுகளைப் பற்றிக் கதைக்கும் போது,  நேற்று திங்கட்கிழமை, ஐக்கிய நாடுகள் மனித அபிவிருத்திச் சுட்டெண் வெளியிடப்பட்டது ஞாபகத்திற்கு வருகிறது. எழுத்தறிவு, பாடசாலையில் சேர்தல், ஒருவருக்கான மொத்த தேசிய உற்பத்தி மற்றும் ஆயுள் எதிர்பார்க்கை போன்ற அளவீடுகளே இச்சுட்டெண் கணிப்பீட்டில் பயன்படுத்தப்படுகின்றன.</p>
<p>இந்தச் சுட்டெண்ணின் அடிப்படையில் உலகில் வாழ்வதற்கு உன்னதமான நாடாக, நோர்வே தேர்வாகியுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் ஐஸ்லாந்து ஆகியன இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளன.</p>
<p>182 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்தப்பட்டியலில், இலங்கை 102 ஆவது இடத்திலும், 134 ஆம் இடத்தில் இந்தியாவும், 141 ஆவது இடத்தில் பாக்கிஸ்தான் இருப்பதுவும் கவலை.</p>
<p>இப்படி நாடுகளின் கோலங்கள் விரிந்து செல்ல, நாட்டின் பிரஜைகளின் அறிவின் எழுச்சிக்காய் பணி செய்யும் ஆசிரியர்களுக்கான தினமும் இன்றுதான் என்பது மகிழ்ச்சி. எனது வாழ்க்கையில் பல ஆசிரியர்களைச் சந்திந்துக்கொண்டிருக்கிறேன் (இன்னமுமா படிக்கிறீங்க..? &#8220;கல்வி கரையில. கற்பவர் நாள் சில.&#8221; என்று சும்மா யாரும் சொல்லியிருக்க மாட்டாங்களே!!??).</p>
<p>கசப்பாய் இருந்தபோதிலும், நோய் போக மருந்தை அருந்தியேயாக வேண்டும். பல ஆசிரியர்களினதும் அணுகுமுறைகள் என்னை புடம் போடச் செய்தலில் பங்கு பெற்றிருக்கிறது. அவர்களின் உணர்வுகளையும் உண்மைகளையும் பற்றி எனது <a href="http://niram.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/">இன்னொரு பிரபஞ்சம்</a> தொடரில், <a href="http://niram.wordpress.com/2007/11/28/another-cosmic-no-1-niram-zeezat/">பட்டம் பறக்கும் இரகசியம்</a> என்றும் <a href="http://niram.wordpress.com/2008/12/01/tear-and-sorrow/">ஆனைக்கு காலம் வந்தால் பூனைக்குக் காலம் வரும்</a> என்றும் ஏற்கனவே சொல்லியுமிருக்கிறேன். இன்னும் சொல்வேன் (இன்னுமா..?!! சபா.. இப்பவே கண்ணைக் கட்டுதே!!!)</p>
<p>இன்னும் சிலரையும், நான் பாடசாலைகளில் சந்திந்திருக்கிறேன். அவர்கள் ஆசிரியர்கள் என அதிபர் சொன்ன போதுதான் தெரிந்து கொண்டேன். வாழ்க்கை, செங்கல் கொண்டு தலையில் அடிக்கும் ஆனால் சோர்ந்து விடவோ, நம்பிக்கையிழந்து விடவோ கூடாது (என்ன உதய தாரகை!! ரொம்ப பீலிங்ஸா எல்லாம் பில்ட்அப் கொடுக்குறீங்க&#8230;??). இது பற்றியும் <a href="http://niram.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/">இன்னொரு பிரபஞ்சம்</a> தொடரில் சொல்லவுள்ளேன்.</p>
<p>சிற்பிகளை உருவாக்கும் சிற்பியாய் திகழும் ஆசிரியர்களுக்கு, நினைக்கும் நல்ல விடயங்கள் எல்லாம் வசமாகும் வலிமை சேர வாழ்த்துக்கள் சொல்கிறேன்.</p>
<p>மெழுகுதிரி என ஆசிரியர்களை உவமித்துக் கூறும் பழக்கம் இன்றும் இருக்கிறது.</p>
<p>பிறருக்கு ஒளி கொடுத்து தன்னிலையை இழந்துவிடும் மெழுகுதிரியை எனக்கு பாடம், வாழ்க்கை என்பன சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு உவமையாகச் சொல்ல நான் விரும்பவில்லை. அதில் எனக்கு உடன்பாடும் கிடையாது. தன்னிலை இழக்காத நிலையில் தான் ஒரு தனிமனிதனால், அவனின் நிலைகளைப் பற்றி மற்றவர்களுக்குத் தெளிவாகச் சொல்லமுடிகிறது.</p>
<p>அவர்கள் சிற்பிகளாவே இருக்க வேண்டும். கற்களைத்தான் அவர்கள் செதுக்குகிறார்களே!</p>
<p>இது இப்படியிருக்க யாழ்தேவி திரட்டியின் இவ்வார நட்சத்திரப் பதிவராக உதய தாரகை (ஆமா.. அது நான் தாங்க..) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. சென்று பார்த்தேன். அட ஆமால்ல.. நானே தான். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் (ஏனிந்த பில்ட்அப் உதய தாரகை??) யாழ்தேவி திரட்டி நிர்வாகத்திற்கு எனது நன்றிகள் பல.</p>
<p>&#8220;என்னடா.. இன்னுமா ஆர்டிகல் (article) எழுதிக் கொண்டிருக்கிறாய்? உனக்கு வேற வேலையே கெடயாதா?&#8221; என்று தொலைபேசியில் என்னை அழைத்து ஒரு நண்பன் கேட்கிறான். &#8220;இப்படிக் கேட்பதுதானே உனது வேலை என்பதால், உனக்கு வேலை தந்து கொண்டுதான் இருப்பேன்&#8221; என்கிறேன் சிலேடையாக.</p>
<p>- உதய தாரகை</p>
<h6><span style="font-weight:normal;">*Forbes சஞ்சிகையின் ஆய்வுபற்றிய நிழற்படத்தொகுப்பின் இணைப்பு: [</span><a href="http://www.forbes.com/2009/09/29/forbes-400-gates-dell-walton-charney-rich-list-09-billionaires-vs-world_slide.html"><span style="font-weight:normal;">நாடு வாங்கக்கூடிய ராசிக்காரர்கள்</span></a><span style="font-weight:normal;">].<br />
<strong><span style="font-weight:normal;">* இவ்வருடத்திற்கான (2009) ஐக்கிய நாடுகள் மனித அபிவிருத்திச் சுட்டெண்: [</span><a href="http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_Human_Development_Index"><span style="font-weight:normal;">முழுப் பட்டியல் விபரம்</span></a><span style="font-weight:normal;">].</span></strong></span></h6>
Posted in அதிசயம், அனுபவம், ஆங்கிலம், ஆரம்பம், இணையம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, குறுந்தகவல், சிரிப்பு, சுவாரஸ்யம், தொழில்நுட்பம், புதியவை, பெரியது, மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம்  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/niram.wordpress.com/602/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/niram.wordpress.com/602/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/niram.wordpress.com/602/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/niram.wordpress.com/602/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/niram.wordpress.com/602/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/niram.wordpress.com/602/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/niram.wordpress.com/602/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/niram.wordpress.com/602/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/niram.wordpress.com/602/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/niram.wordpress.com/602/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=602&subd=niram&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://niram.wordpress.com/2009/10/05/countries-rich-and-human-index/feed/</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1b23f926c064fc73135bfbe1afb14d28?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">உதய தாரகை</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2009/10/sculpture_cool1.jpg" medium="image">
			<media:title type="html">sculpture_cool</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கூகிளுக்குள் அகிம்ஷைப் போராட்டம்</title>
		<link>http://niram.wordpress.com/2009/10/02/google-humility-and-start-today/</link>
		<comments>http://niram.wordpress.com/2009/10/02/google-humility-and-start-today/#comments</comments>
		<pubDate>Fri, 02 Oct 2009 19:37:43 +0000</pubDate>
		<dc:creator>உதய தாரகை</dc:creator>
				<category><![CDATA[அதிசயம்]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[ஆங்கிலம்]]></category>
		<category><![CDATA[இணையம்]]></category>
		<category><![CDATA[இயற்கை]]></category>
		<category><![CDATA[உணர்வு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[எண்ணம்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[கூகிள் (Google)]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[சுவாரஸ்யம்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[மேற்கோள்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://niram.wordpress.com/?p=590</guid>
		<description><![CDATA[பூலோகம் தோன்றிய காலந்தொட்டு பல ஆளுமைகள் உதித்து மனிதர்களின் வாழ்தலின் அர்த்தங்களைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். பலரும் வெற்றி கண்டிருக்கிறார்கள். இந்தச் சக்கரம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
1982 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு திரைப்படம் 8 ஒஸ்கார் விருதுகளை வாங்கிச் சென்றது. றிச்சட் அட்டன்புரோ இயக்கிய திரைப்படமது. ஒரு மனிதனின் வாழ்க்கைச் சரிதத்தைச் சொல்லியது தான் அந்தப் படம்.  ஆனால், வாழ்க்கை இப்படித்தான் வாழப்பட வேண்டுமென்பதையும் சொல்லி நின்றது.

அந்தத் திரைப்படத்தை பார்த்து அழுதுவிட்டதாக என்னிடம் பலரும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=590&subd=niram&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>பூலோகம் தோன்றிய காலந்தொட்டு பல ஆளுமைகள் உதித்து மனிதர்களின் வாழ்தலின் அர்த்தங்களைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். பலரும் வெற்றி கண்டிருக்கிறார்கள். இந்தச் சக்கரம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.</p>
<p>1982 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு திரைப்படம் 8 ஒஸ்கார் விருதுகளை வாங்கிச் சென்றது. றிச்சட் அட்டன்புரோ இயக்கிய திரைப்படமது. ஒரு மனிதனின் வாழ்க்கைச் சரிதத்தைச் சொல்லியது தான் அந்தப் படம்.  ஆனால், வாழ்க்கை இப்படித்தான் வாழப்பட வேண்டுமென்பதையும் சொல்லி நின்றது.</p>
<p><span id="more-590"></span></p>
<p>அந்தத் திரைப்படத்தை பார்த்து அழுதுவிட்டதாக என்னிடம் பலரும் சொன்ன போது, அது அப்படியாகவே இருந்திருக்கிறது என்று தான் என்னால் உணர முடிந்தது. அந்தத் திரைப்படத்தின் ஒரு கட்டத்தில் படத்தின் கதாநாயகன் சிறையிலடைக்கப்பட்டவுடன், தனது மக்களைப் பார்த்து ஒரு வசனம் கதாநாயகன் பேசுவார். &#8220;They want us to fight back or lose heart. We will do neither&#8221; என்பது தான் அந்த வசனம்.</p>
<p>சொற்களின் வலிமை கண்டு வியந்த தருணமது. நாவின் வன்மை, மனத்தின் மேன்மை எல்லாமே ஒரு புள்ளியில் ஒருமித்த நேரமது.</p>
<p><img class="aligncenter size-full wp-image-597" title="change_this" src="http://niram.files.wordpress.com/2009/10/change_this1.jpg?w=465&#038;h=160" alt="change_this" width="465" height="160" /></p>
<p>இன்று காந்தி உலகில் அவதரித்து 140 ஆண்டுகள் நிறைவாகிறது. &#8220;காந்தி&#8221; என்பது தான் நான் குறிப்பிட்ட அந்தத் திரைப்படம்.</p>
<p>காந்தி என்றாலே அகிம்ஷைப் போராட்டம் என்பதே வணிகக் குறியீடு போல சிறுயோர் முதற் கொண்டு பெரியோர் வரை குறிப்பிடுவர்.</p>
<p>எங்கள் வீட்டில் ஒரு குட்டி நூலகமொன்று இருக்கிறது. நான் பிறந்த காலத்திலிருந்தே அந்த நூலகம் இருந்து வருவது கலை. பத்துப் பாட்டு, சிலப்பதிகாரம், சீறாப்புராணம் என விரியும் பல சங்க கால இலக்கியம் தொட்டு, அண்மைக் கால கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பலரினதும் நூல்களும் அங்கு இருக்கின்றன.</p>
<p>சுமார் அறுநூறு புத்தகங்கள் இன்னும் அங்கு பேசிக் கொண்டேயிருக்கிறது (இது என்ன பில்ட் அப்.. புத்தகங்கள் இருக்கு என்று சொன்னா சரிதானே.. அதுக்கு இத்தணை புத்தகம் இருக்கு.. இவர்ர புத்தகம் இருக்கு என்றெல்லாம் சொல்ல வேண்டுமா..? அடங்குங்க உதய தாரகை!!).</p>
<p>அப்புத்தகங்களில் எனக்கு &#8216;காந்தி பாமாலை&#8217; என்ற ஒரு நூலை நான் எப்போதோ படித்த ஞாபகம். உலகிலுள்ள பல தமிழ்க் கவிஞர்களும் காந்தி பற்றி பாடிய கவிதைகள் அப்பாமாலையில் ஒலியெழுப்பின. அந்த நூலின் வடிவமைப்புக்கூட மிக எளிமையாக இருந்தது என்னை ரொம்பவும் கவர்ந்தது என்பேன்.</p>
<p>எனது வாசிப்பு மற்றும் தேடல் என்பவற்றின் சொர்க்காபுரியாக மற்றும் ஊக்கியாக இருந்ததெல்லாம் எனது தந்தையால் உருப்பெற்ற எங்கள் வீட்டு நூலகம் தான். காந்தி பற்றிய எனது தேடலுக்கு அப்போது கிடைத்த விருந்தெல்லாம் அந்த வீட்டு நூலகத்திலேயே சமைக்கப்பட்டது தான்.</p>
<p>காந்தி சொன்ன விடயங்கள் பலவுள்ளன. அவற்றை அறிந்து கொள்வது வாழ்க்கையின் அர்த்தத்திற்கு அர்த்தம் சேர்க்கும். அழகிய கலை போன்ற ஆனந்தத்தை அள்ளித் தரும்.</p>
<p>மாற்றமாகவே உருவாதல் என்பது இரண்டு சொல் வசனம் தான். ஆனால், அதுவே பல அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய தீர்வான விடையாகவும் இருக்கிறது. &#8220;ஊருக்குத்தான் உபதேசம், எனக்கில்லை&#8221; என்ற வாழ்வியல் கோலம் தீர்வுகளை ஒரு போதும் தரப்போவதில்லை.</p>
<p>அது பிரச்சனைகளுக்கு புதிய பாதைகளை உருவாக்கித் தருவதில்தான் வெற்றியெய்தும். தான் உபதேசம் செய்வது ஒன்றான விடயம், தன்னால் கடைப்பிடிக்கப்படும் போதே அர்த்தப்படுகிறது. அனைவரும் அதனை மனதார ஏற்க வழி உருவாகிறது.</p>
<p>&#8220;உலகில் என்ன மாற்றம் உருவாக வேண்டுமென நீ ஆசைப்படுகிறாயோ, அதுவாகவே நீ மாறிவிடு!&#8221; என்று காந்தி சொன்ன வசனம் எனக்கு எப்போதுமே ஞாபகத்தில் நிலைப்பதுண்டு. வாழ்க்கையில் போதனை செய்வது அல்லது மற்றவர்களுக்கு உபதேசம் செய்வது எல்லாம் இரண்டாம் கட்டம் என்றே நான் கருதுகிறேன்.</p>
<p>தான் வாழுகின்ற வாழ்க்கையின் நடைமுறைகள் தான் மற்றவர்களுக்கு வழியைக் காட்டக்கூடியதாக இருக்க வேண்டும். சிறந்த வாழ்க்கை முன்மாதிரிகளை வழங்குவது தான் மற்றவர்களை நாம் எம்பக்கம் அழைப்பதற்கு செய்ய வேண்டிய முதற்படி.</p>
<p>நீங்கள் உலகம் எப்படியிருக்க வேண்டுமென எண்ணுகிறீர்களோ, அது தான் உங்கள் உலகம்.</p>
<p>உங்களிடம் ஒரு சிறிய கேள்வி. நான்கு தவளைகள் ஓரிடத்தில் இருந்தன. அவற்றில் ஒரு தவளை பாய்ந்து விட எண்ணியது. அங்கு எத்தனை தவளைகள் எஞ்சியிருக்கும்? முந்திக் கொண்டே மூன்று என நீங்கள் பதிலளிக்க முடியும். ஆனால் அது தான் பிழையாச்சே.</p>
<p>யாரும் எண்ணுகிறார்கள் என்பதற்காக எண்ணியது நடந்துவிட்டதென பொருள் கொள்ள முடியாது. எண்ணங்களை நடைமுறையில் கொண்டுவருவதில் தான் நேரத்திற்கு அர்த்தம் கிடைக்கிறது. எண்ணங்களுக்கு வலிமை பிறக்கிறது.</p>
<p>தனிநபராக இருந்து கொண்டு முழு உலகத்தையுமே மாற்றிவிடலாம் என்ற கற்பனைக்கு யாரும் பொருள் கொடுக்க முடியாது.</p>
<p>ஆனால், ஒவ்வொருவரும் தனித்தனியாக எண்ணும் அழகிய எண்ணங்களை நடைமுறையாக்கும் போது, பூலோகமே பூத்துக் குலுங்கத் தொடங்கும். &#8220;சிறு துளி, பெரு வெள்ளம்&#8221; என்பார்கள். பெரிய வெள்ளங்களுக்கு சிறிய துளிகளின் சேர்க்கை இங்கே தேவைப்படுகிறது.</p>
<p>காந்தியாக மாறவேண்டாம். காந்தி சொல்ல வந்த எண்ணங்களுக்கு உயிர் கொடுக்கலாம். சிலவேளைகளில் எண்ணங்களின் வலிமையை அதனைச் செயற்படுத்தும் போதுதான் அறிந்து கொள்ள முடிகிறது. வெறும் பல்கலைக்கழக உள்ளக இணையத்தளமாக உருவெடுத்த Facebook, பின்னாளில், உலகமே கவ்விக் கொள்ளும் இன்றியமையாத இணையத்தளமாக மாறவில்லையா?</p>
<p>எண்ணங்களை செயற்படுத்துவதில் எப்போதுமே தடைகள் தோன்றுமென்பதில்லை. ஆனால், தடைகள் தோன்றாமல் எண்ணங்கள் நடைமுறைக்கு வந்த சரித்திரங்களும் இல்லை.</p>
<p>காந்தி சொன்ன விடயங்களில் மேற்சொன்ன இரண்டு விடயங்களும் என்னை மிகவும் பாதித்தவை என்றே நான் சொல்வேன். இது இப்படியிருக்க, கூகிளுக்குள் காந்தி குடிபுகுந்த கதை, உண்மையானது.</p>
<p>இன்றைய கூகிளின் இல்லப்பக்கம் (Homepage) எல்லாம், Google என்ற சொல்லின் முதல் எழுத்தான G இற்குப் பதிலாக காந்தியின் படத்தைக் கொண்டிருந்தது. கூகிள் தனது இல்லப்பக்கத்தை முக்கிய நிகழ்வுகளின் நிமித்தம் அவற்றைக் குறிப்பிடுமாற் போல், மாற்றியமைப்பது நீங்கள் அறிந்ததே!</p>
<p><img class="aligncenter size-full wp-image-591" title="gandhi_google" src="http://niram.files.wordpress.com/2009/10/gandhi_google.jpg?w=465&#038;h=160" alt="gandhi_google" width="465" height="160" /></p>
<p>எம்மை நாமே தேடவேண்டிய தருணங்கள் வாழ்க்கையில் அடிக்கடி நிராசையாக வருவதில்லை. அந்தத் தருணங்கள் உருவாக்கப்பட வேண்டும். தேடல் இல்லாதவரை, நாம் தொலைந்தவர்களாகவே ஆகி விடுகிறோம்.</p>
<p>- உதய தாரகை</p>
<h6><span style="font-weight:normal;">Gandhi என்கின்ற திரைப்படம் பற்றிய பூரண தகவல்களை அறிந்து கொள்ள இணைய திரைப்பட தரவுத்தளத்தின் முகவரி <a href="http://www.imdb.com/title/tt0083987/">இதோ.</a> கூகிளின் இல்லப்பக்கத்தில் ஏராளமான ஆளுமைகள் தங்கள் திறமைகள் மூலம், கூகிள் இலட்சணைக்கு அழகு சேர்த்திருக்கிறார்கள். இவர்களில் கவிஞர் ரவீந்ரநாத் தாகூர் மற்றும் காந்தி ஆகிய இருவரும் இந்தியாவைச் சேர்ந்த ஆளுமைகள் என்பது குறிப்பிடத்தக்கது.</span></h6>
Posted in அதிசயம், அனுபவம், ஆங்கிலம், இணையம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கூகிள் (Google), சினிமா, சுவாரஸ்யம், தொழில்நுட்பம், மேற்கோள், வாழ்க்கை  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/niram.wordpress.com/590/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/niram.wordpress.com/590/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/niram.wordpress.com/590/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/niram.wordpress.com/590/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/niram.wordpress.com/590/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/niram.wordpress.com/590/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/niram.wordpress.com/590/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/niram.wordpress.com/590/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/niram.wordpress.com/590/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/niram.wordpress.com/590/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=590&subd=niram&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://niram.wordpress.com/2009/10/02/google-humility-and-start-today/feed/</wfw:commentRss>
		<slash:comments>19</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1b23f926c064fc73135bfbe1afb14d28?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">உதய தாரகை</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2009/10/change_this1.jpg" medium="image">
			<media:title type="html">change_this</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2009/10/gandhi_google.jpg" medium="image">
			<media:title type="html">gandhi_google</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>டவுசர்கள் இல்லை என்று குழந்தைகள் அழுகும்</title>
		<link>http://niram.wordpress.com/2009/09/26/sadness-and-love/</link>
		<comments>http://niram.wordpress.com/2009/09/26/sadness-and-love/#comments</comments>
		<pubDate>Sat, 26 Sep 2009 22:32:44 +0000</pubDate>
		<dc:creator>உதய தாரகை</dc:creator>
				<category><![CDATA[அதிசயம்]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[ஆங்கிலம்]]></category>
		<category><![CDATA[இணையம்]]></category>
		<category><![CDATA[இயற்கை]]></category>
		<category><![CDATA[உணர்வு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[எண்ணம்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[சுவாரஸ்யம்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[மேற்கோள்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>
		<category><![CDATA[விஞ்ஞானம்]]></category>

		<guid isPermaLink="false">http://niram.wordpress.com/?p=573</guid>
		<description><![CDATA[சிலவேளைகளில் நமது உணர்வுகளுக்கு அதிசக்தி கொண்ட அனுபவங்களை சின்னச் சின்ன விடயங்கள் தந்துவிடுவது அழகு. இன்று வலைப்பதிவுகள் பலதையும் வாசித்துக் கொண்டிருந்த போது, பல விடயங்கள் என் உணர்வுகளில் அதிர்வுகளைக் கொண்டு வந்தன.
உணர்வுகளில் ஏற்படும் அதிர்வுகள், சில நேரங்களில் மகிழ்ச்சியாக, அழுகையாக, சுமையாக, சிரிப்பாக என பல பரிமாணங்களை எடுப்பது யாவரும் ரசிக்க வேண்டிய கலை. துன்பங்கள் பற்றி யாரும் சொல்லும் போது, அந்த நிலைகளுக்குள் என்னை நுழைத்து அழுது கொண்ட நாட்கள் எனக்கு நிறையவே ஞாபகத்தில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=573&subd=niram&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>சிலவேளைகளில் நமது உணர்வுகளுக்கு அதிசக்தி கொண்ட அனுபவங்களை சின்னச் சின்ன விடயங்கள் தந்துவிடுவது அழகு. இன்று வலைப்பதிவுகள் பலதையும் வாசித்துக் கொண்டிருந்த போது, பல விடயங்கள் என் உணர்வுகளில் அதிர்வுகளைக் கொண்டு வந்தன.</p>
<p>உணர்வுகளில் ஏற்படும் அதிர்வுகள், சில நேரங்களில் மகிழ்ச்சியாக, அழுகையாக, சுமையாக, சிரிப்பாக என பல பரிமாணங்களை எடுப்பது யாவரும் ரசிக்க வேண்டிய கலை. துன்பங்கள் பற்றி யாரும் சொல்லும் போது, அந்த நிலைகளுக்குள் என்னை நுழைத்து அழுது கொண்ட நாட்கள் எனக்கு நிறையவே ஞாபகத்தில் உண்டு.</p>
<p><span id="more-573"></span></p>
<p>இந்த நிலைக்கு ஆங்கிலக்காரன் Compassion  என்ற சொல்கொண்டு அழைப்பான். இந்தச் சொல்லின் கருத்தாக a deep awareness of and sympathy for another&#8217;s suffering என்பது அமையும். ஒரு மனிதனின் துன்பங்கள் பற்றிய ஆழ்ந்த விழிப்புணர்வும் கவலையுமே இந்த நிலையாகும்.</p>
<p><img class="aligncenter size-full wp-image-575" title="tear" src="http://niram.files.wordpress.com/2009/09/tear.jpg?w=465&#038;h=160" alt="tear" width="465" height="160" /></p>
<p>துன்பங்களைப் பற்றி சொல்பவர்கள், அதைக் கேட்பவரின் கவனத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்வது கிடையாது. அவர்கள் அந்த விடயங்களைச் சொல்லும் பாங்கு, கேட்பவர்களைக் கவர்ந்து விடுகிறது. நான் சில நேரங்களில், துன்பங்களைப் பற்றி பகிரும் நிலையில், கேட்டவர்கள் அதனால் கொள்ளும் கவலையை போக்க, அவர்களைத் தேற்றவும் செய்திருக்கிறேன்.</p>
<p>பகிர்தலில் எப்போதும் சுமைகள் கனமிழக்கின்றன.</p>
<p>இன்று மாலை &#8220;<a href="http://angumingum.wordpress.com/2009/03/10/poverty_lit/">உயரத்திருந்து யாசித்தல்</a>&#8221; என்ற <a href="http://angumingum.wordpress.com">சித்தார்த்தின்</a> பதிவை வாசித்தேன். வறுமையின் கொடுமைகளை சங்ககால இலக்கியத்தின் செழிப்பில் பதிந்திருந்தார். வாசிக்கும் போது, மெய்சிலிர்த்துப் போனேன். கவலைகளை வரவைக்க வேண்டுமென யாரும் தங்கள் துன்பங்களை பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால், அந்தப் பகிரல்கள் ஒருபோதும் கவலையை வரவைக்க மறந்துவிடுவதுமில்லை.</p>
<p>அந்தப் பதிவில் காணப்பட்ட கவிதையொன்று என் நெஞ்சத்தைத் தொட்டது. கண்களுக்கு ஈரம் கொடுத்தது. எழுத்துக்களின் வலிமையையும் வலியையும் உணர்ந்த இன்னொரு தருணமாக இதை உணர்ந்தேன்.</p>
<p>அக்கவிதையை இங்கும் தரலாமென நினைத்தேன். சுயம்புலிங்கத்தின் &#8220;தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்&#8221; என்ற கவிதையது.</p>
<blockquote><p>நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்<br />
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை<br />
டவுசர்கள் இல்லை என்று குழந்தைகள் அழுகும்<br />
ஒரு அடி கொடுப்போம்<br />
வாங்கிக்கொண்டு ஓடி விடுவார்கள்<br />
தீட்டுக்கறை படிந்த<br />
பூ அழிந்த சேலைகள்<br />
பழைய துணிச்சந்தையில்<br />
சகாயமாய் கிடைக்கிறது<br />
இச்சையை தணிக்க<br />
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது<br />
கால் நீட்டி தலைசாய்க்க<br />
தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது<br />
திறந்தவெளிக் காற்று<br />
யாருக்கு கிடைக்கும்<br />
எங்களுக்கு கொடுப்பினை இருக்கிறது<br />
எதுவும் கிடைக்காதபோது<br />
களிமண் உருண்டையை வாயில் போட்டு<br />
தண்ணீர் குடிக்கிறோம்<br />
ஜீரணமாகிவிடுகிறது<br />
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை<br />
நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்.<br />
<em> &#8211; மு. சுயம்புலிங்கம்.</em></p></blockquote>
<p>இந்த வறுமையின் வறட்சி, கண்களின் வறட்சியை கட்டாயப்படுத்தி போக்கிறதல்லவா? அழுது விட்டேன் நான்.</p>
<p>எனக்குத் துன்பமான நிலைகள் ஏற்பட்டபோதும், அதனை எனக்கு நெருங்கியவர்களுடன் சொன்னால் அவர்கள் மனம் என்ன பாடு படுமென எண்ணியே பலநேரங்களில் துன்பங்களை வாடகைச் சிரிப்பினால் மறைத்த அனுபவங்கள் எனக்கு இருக்கிறது.</p>
<p>அந்தநேரங்களில், எனது நாட்குறிப்பேடு எனது நெருங்கியவனாக மாறிய நாட்கள் தான் அதிகம்.</p>
<p>இது இப்படியிருக்க, இன்னொரு வலைப்பதிவில் கீழுள்ள பொத்தானைக் கண்டேன். ஏற்கனவே, நிறத்தில் <a href="http://niram.wordpress.com/2009/08/30/story-behind-her-button-position/">அவளின் பொத்தான் பற்றி</a> சொல்லியுமிருக்கிறேன் என்பது வேறு விஷயம் (யாரந்த அவள்..?). ஆனால், அந்த பொத்தானுக்கும் இந்த பொத்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.</p>
<p>இணையத்தளங்களை உருவாக்கும் அனுபவம் அல்லது அறிவு உங்களுக்கிருந்தால் கீழுள்ள நிழற்படத்தில் காணப்படும் பொத்தானின் காதலின் சுவையைப் பற்றி அழகாகவே அறிந்து கொள்வீர்கள். Romance என்ற சொல்லிற்கு பொத்தானிலுள்ள வெறும் வசனம் கொடுத்த அர்த்தம் கண்டு சிலிர்த்துப் போனேன்.</p>
<p><img class="aligncenter size-full wp-image-574" title="button_html_css" src="http://niram.files.wordpress.com/2009/09/button_html_css.png?w=468&#038;h=358" alt="button_html_css" width="468" height="358" /></p>
<p>சின்னச் சின்ன விடயங்கள் வாழ்க்கைக்குத் தரும் உணர்வுகள் எல்லாமே ரசிக்கப்பட வேண்டியது தான். அது மகிழ்ச்சியோ துக்கமோ என்பதெல்லாம் துணையான கேள்விகள் மட்டுந்தான்.</p>
<p>பொத்தானின் காதல் சுவை காண, இணையத்தளம் செய்வது பற்றிய அறிவு வேண்டிக்கிடக்குது. என்ன கொடுமை சார் இது என்றல்லவா யோசிக்கிறீர்கள். காதலும் சிலவேளை கஷ்டமானது தான் புரிவதற்கு (அட.. உதய தாரகை தத்துவமெல்லாம் சும்மா அதிரடியாய் இருக்கே!!!).</p>
<p><a href="http://en.wikipedia.org/wiki/Nhat_Hanh">திக்நக்ஹான்</a> என்ற எழுத்தாளர் சொன்ன கூற்றொன்றை அண்மையில் வாசித்தேன். பிடித்திருந்தது. அதனை தமிழ்ப்படுத்தினேன்.</p>
<blockquote><p>நீரிலோ அல்லது மெல்லிய காற்றிலோ நடப்பதை மக்கள் வழமையாக அதிசயமாக பார்க்கின்றனர். ஆனால், நீரிலோ, மெல்லிய காற்றிலோ நடப்பது அதிசயமேயல்ல. பூமியில் நடப்பதுதான் அதிசயமானது. ஒவ்வொரு நாளும் எத்தனையோ அதிசயங்களை நாம் வாழ்க்கையில் எம்மையறியாமலே சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். நீல வானம், வெண் முகில்கள், பச்சை இலைகள், சின்னக் குழந்தையின் ஆர்வமான கரிய கண்கள் &#8211; ஏன் நமது சொந்த இரு கண்கள். எல்லாம் அதிசயமே!!☻</p></blockquote>
<p><span style="background-color:#ffffff;">அதிசயங்களே தொடர்கின்றன. நீங்கள் வாசிப்பதும் தான்!!</span></p>
<p>- உதய தாரகை</p>
Posted in அதிசயம், அனுபவம், ஆங்கிலம், இணையம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கவிதை, சுவாரஸ்யம், தொழில்நுட்பம், மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம்  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/niram.wordpress.com/573/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/niram.wordpress.com/573/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/niram.wordpress.com/573/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/niram.wordpress.com/573/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/niram.wordpress.com/573/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/niram.wordpress.com/573/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/niram.wordpress.com/573/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/niram.wordpress.com/573/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/niram.wordpress.com/573/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/niram.wordpress.com/573/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=573&subd=niram&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://niram.wordpress.com/2009/09/26/sadness-and-love/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1b23f926c064fc73135bfbe1afb14d28?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">உதய தாரகை</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2009/09/tear.jpg" medium="image">
			<media:title type="html">tear</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2009/09/button_html_css.png" medium="image">
			<media:title type="html">button_html_css</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வீழாமலே இருக்க முடியுமா?</title>
		<link>http://niram.wordpress.com/2009/09/25/beauty-love-god-money-2/</link>
		<comments>http://niram.wordpress.com/2009/09/25/beauty-love-god-money-2/#comments</comments>
		<pubDate>Fri, 25 Sep 2009 16:32:16 +0000</pubDate>
		<dc:creator>உதய தாரகை</dc:creator>
				<category><![CDATA[அதிசயம்]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[உணர்வு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[எண்ணம்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சுவாரஸ்யம்]]></category>
		<category><![CDATA[புதியவை]]></category>
		<category><![CDATA[மேற்கோள்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://niram.wordpress.com/2009/09/25/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/</guid>
		<description><![CDATA[நிறைய விடயங்கள் பற்றிச் சொல்ல வேண்டுமென நினைத்தாலும், நமக்கான நம்முடைய தணிக்கைக் குணம் சிலவேளைகளில் பிடிவாதம் பிடித்துக் கொண்டுவிடுவது உண்மையே. தணிக்கை, பிடிவாதம் என்ற சொற்கள் போட்டு காமடி கீமடி பண்றேன் என்று மட்டும் யோசிக்காதீர்கள்.
நான்கு விடயங்களைப் பற்றி நமது வலைப்பதிவுலக நண்பர்கள் தமது கருத்துக்களை பதிந்து கொண்டு வருகிறார்கள். இன்று நிறத்தில் புதிய பதிவு எழுத வேண்டுமென ஆவலில் இருந்த எனக்கு இந்த விடயங்கள் பற்றி யாரும் அழைக்காமலேயே எழுதலாம் என்ற ஆர்வம் கிட்டியது.

நான்கு விடயங்கள் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=561&subd=niram&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>நிறைய விடயங்கள் பற்றிச் சொல்ல வேண்டுமென நினைத்தாலும், நமக்கான நம்முடைய தணிக்கைக் குணம் சிலவேளைகளில் பிடிவாதம் பிடித்துக் கொண்டுவிடுவது உண்மையே. தணிக்கை, பிடிவாதம் என்ற சொற்கள் போட்டு காமடி கீமடி பண்றேன் என்று மட்டும் யோசிக்காதீர்கள்.</p>
<p>நான்கு விடயங்களைப் பற்றி நமது வலைப்பதிவுலக நண்பர்கள் தமது கருத்துக்களை பதிந்து கொண்டு வருகிறார்கள். இன்று நிறத்தில் புதிய பதிவு எழுத வேண்டுமென ஆவலில் இருந்த எனக்கு இந்த விடயங்கள் பற்றி யாரும் அழைக்காமலேயே எழுதலாம் என்ற ஆர்வம் கிட்டியது.</p>
<p><span id="more-561"></span></p>
<p>நான்கு விடயங்கள் என்னவென்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். அழகு, காதல், கடவுள் மற்றும் பணம் என்பதாகும். எனது பார்வையில் இந்தவொவ்வொன்றும் எப்படியிருக்கிறது எனச் சொல்லப் போகிறேன். கொஞ்சம் கேளுங்களேன். (கொஞ்சம் நீங்க கேளுங்களேன். மச்சான் கொஞ்சம் நீ கேளேன்!!).</p>
<h4>அழகு &#8211; எல்லாமே அழகுதான்</h4>
<p><img title="beauty" src="http://niram.files.wordpress.com/2009/09/beauty.jpg?w=465&#038;h=160" alt="beauty" width="465" height="160" /></p>
<p>வானம் அழகானது. பூமி அழகானது என்றெல்லாம் கதையளக்க நான் தயாரில்லை. உலகின் ஒவ்வொரு கணத்தின் சுவாசத்திற்குள்ளும் அழகு தன்னை எப்போதும் உயிர்ப்பித்துக் கொள்ள மறப்பதில்லை. அழகின் நிலைகளால்தான் பூமியின் பூக்களுக்கு மதிப்புக் கிடைக்கிறது. சூரியனின் சுட்டெறிப்புக்கு அர்த்தம் பிறக்கிறது.</p>
<p>வெள்ளை நிறத்தாலான எல்லாமே எனக்குப் பிடிக்கும். ஆனால், வெள்ளையில் சில நிறங்கள் சேர்ந்து உருவாகும் நிலை அதைவிடவும் ரொம்பப் பிடிக்கும். வெள்ளைத் தாள்களில் எப்போதும் கரிய நிறப் பேனாக்கள் கொண்டு கீறி, தாளைக் காயப்படுத்தி அழகு செய்ய இன்னும் பிடிக்கும். (உதய தாரகை!! இதெல்லாம் ஓவராப்படல&#8230;)</p>
<p>நேர்த்திதான் எனக்கு அழகு. எப்படியோ, எனக்கு அழகாகத் தோன்றும் விடயங்கள் இன்னொருவருக்கு அசிங்கமாகத் தோன்றும் நிலையுள்ளதே அதுவே உச்ச அழகு. ஏனையதெல்லாம் மிச்ச அழகு!! (பாட்டு ஒன்று இப்போ ஞாபகத்திற்கு வந்திருக்குமே!! பெண்ணழகு உச்ச அழகு!! &#8211; பூமியில உள்ளதெல்லாம் மிச்ச அழகு.!! &#8212; எட்டில் அழகு, பதினெட்டில் அழகு.. என்று பாடல் தொடர்ந்து செல்லும்..)</p>
<p>குறித்த பாடலில் எனக்கு பிடித்த பல வரிகள் இருந்தாலும்,</p>
<blockquote><p>வானொலியோடு பாடும் அழகு<br />
பாடிக் கொண்டு சமைப்பதழகு<br />
தாமரை இலையில் நீரழகு<br />
அட தாவணி பெண்போல் யாரழகு!!??</p>
<p>ஒவ்வொரு பெண்ணும் ஓரழகு!!<br />
அந்த ஒன்றுக்குள்ளே நூறழகு!!</p></blockquote>
<p>என்ற வரிகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் (இருக்கோட்டும். இருக்கோட்டும்.)</p>
<p>அழகு எப்போதுமே அழகுதான்!!!</p>
<h4>காதல் &#8211; வாசிக்கப் பட வேண்டியது</h4>
<p><img title="love" src="http://niram.files.wordpress.com/2009/09/love.jpg?w=465&#038;h=160" alt="love" width="465" height="160" /></p>
<p>காதல் என்ற வார்த்தையைக் கூட நான் தணிக்கை செய்தே பல ஆண்டுகள் கழித்திருக்கிறேன். காதலர் தினம், காதல் கோட்டை என திரைப்படங்கள் கூட வெளிவந்த காலத்திலும் காதல் என்ற சொல்லுக்கு எனது நாக்கு கூட மொழி கொடுக்கவில்லை. காதலில் அவ்வளவு எனக்குக் கோபமா? என்று கேட்காதீர்கள். அது அவ்வாறே நடந்தது!!!</p>
<p>எனக்குத் தெரிந்த காதல் எல்லாமே கணினியோடு தான்!! இன்றும் அது தொடர்வது அழகிய ஆனந்தம்!! (நம்புங்க சார்..)</p>
<p>மொழி திரைப்படத்தில் வரும் காதல் காட்சிகள், அவை கொண்டுள்ள உணர்வுகளின் மொத்த ஆழம் என எல்லாவற்றையும் இன்னும் என்னால் ரசித்து வியந்து கொள்ள முடிகிறது. சிலவேளைகளில் திரைப்படங்கள் காதலிக்கச் சொல்லும்! மொழியும் அப்படித்தான்.</p>
<h4>கடவுள் &#8211; உணரப்பட வேண்டிய உச்சம்</h4>
<p><img src="http://niram.files.wordpress.com/2009/09/god_lord.jpg?w=465&#038;h=160" border="0" alt="god_lord" width="465" height="160" /></p>
<p><span style="background-color:#ffffff;">“கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே” என்று எம். ஜி. ஆர் படப் பாடலொன்று உண்டு. “ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் அன்பே சிவமாகும். நாத்தீகம் பேசும் நல்லவர்களெல்லாம் சிவமே அன்பாகும்” என்று கமலின் படத்தில் வரும்.</span></p>
<p>எது எப்படியானபோதும், மனிதனின் குணங்களோடு கலந்த இறைவனின் குணங்கள் தான் மகிழ்ச்சியைத் தரக்கூடியது. இறைவனின் அன்பான குணங்களை அகத்தில் கொள்ளும் நிலையே அகம் முழுக்க ஒளி தரும்.</p>
<p>கொஞ்சம் அனுபவிக்க இந்தக் காணொளி:</p>
<p><span style="text-align:center; display: block;"><a href="http://niram.wordpress.com/2009/09/25/beauty-love-god-money-2/"><img src="http://img.youtube.com/vi/Ad357O6hgOM/2.jpg" alt="" /></a></span></p>
<h4>பணம் – பத்தும் தருமாம்!!</h4>
<p><img title="money" src="http://niram.files.wordpress.com/2009/09/money.jpg?w=465&#038;h=160" border="0" alt="money" width="465" height="160" /></p>
<p>சிறுவயதில் தந்தையிடம் பணம் கேட்டு வாங்கி, கடையில் ஐஸ்கிறீம் வாங்கித் தின்னும் போதெல்லாம் பணத்தின் மகிமை எனக்குப் புரியவேயில்லை.</p>
<p>பின்னர், கல்லூரி சென்று படிக்கத் தொடங்கியதும் பணத்தின் ‘பவர்’ விளங்கியதெனலாம். இப்போதெல்லாம் எனது நண்பர்கள் பலரும் தொலைபேசியில் அழைப்பெடுத்துக்கூட பணம் பற்றித்தான் கதைக்க முனைகிறார்கள். ஏனென்று கேட்டால், காசு தான் கடவுள் என்று வேறு பில்ட்அப் கொடுக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது!!??</p>
<p>அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று யாரும் சும்மா சொல்லியிருக்கவே மாட்டாங்க என்பதில் நான் ரொம்பத் தெளிவாய் இருக்கேன்.</p>
<p>போதும். போதும்.. (எனக்குச் சொன்னேன்!!)</p>
<p>- உதய தாரகை</p>
<h6><span style="font-weight:normal;">பணம் என்ற தலைப்பின் கீழ் நான் பதித்துள்ள நிழற்படம் கடந்த வருடம் எனது கையடக்கத் தொலைபேசி மூலம் எடுக்கப்பெற்றதாகும். சில்லறைக்காசுகளை சேர்த்து வைத்த எனக்கு இந்த மகிழ்ச்சி எஞ்சியது அழகு!</span></h6>
Posted in அதிசயம், அனுபவம், அழகு, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, சுவாரஸ்யம், புதியவை, மேற்கோள், வாழ்க்கை  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/niram.wordpress.com/561/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/niram.wordpress.com/561/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/niram.wordpress.com/561/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/niram.wordpress.com/561/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/niram.wordpress.com/561/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/niram.wordpress.com/561/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/niram.wordpress.com/561/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/niram.wordpress.com/561/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/niram.wordpress.com/561/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/niram.wordpress.com/561/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=561&subd=niram&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://niram.wordpress.com/2009/09/25/beauty-love-god-money-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1b23f926c064fc73135bfbe1afb14d28?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">உதய தாரகை</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2009/09/beauty.jpg" medium="image">
			<media:title type="html">beauty</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2009/09/love.jpg" medium="image">
			<media:title type="html">love</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2009/09/god_lord.jpg" medium="image">
			<media:title type="html">god_lord</media:title>
		</media:content>

		<media:content url="http://img.youtube.com/vi/Ad357O6hgOM/2.jpg" medium="image" />

		<media:content url="http://niram.files.wordpress.com/2009/09/money.jpg" medium="image">
			<media:title type="html">money</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>காலை உயர்த்தியதை கவனித்தீர்களா?</title>
		<link>http://niram.wordpress.com/2009/09/23/cricket-numbers-and-runs/</link>
		<comments>http://niram.wordpress.com/2009/09/23/cricket-numbers-and-runs/#comments</comments>
		<pubDate>Wed, 23 Sep 2009 20:39:05 +0000</pubDate>
		<dc:creator>உதய தாரகை</dc:creator>
				<category><![CDATA[அதிசயம்]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[உணர்வு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[எண்ணம்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சிரிப்பு]]></category>
		<category><![CDATA[சுவாரஸ்யம்]]></category>
		<category><![CDATA[மேற்கோள்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://niram.wordpress.com/?p=544</guid>
		<description><![CDATA[இவ்வருடத்திற்கான ஐசிசி மினி உலகக் கிண்ணப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்த 2007 செப்டம்பரில் நடந்த இருபது 20 போட்டிகளின் இறுதிப் போட்டி முடிந்த கையோடு நான் பதிந்த பதிவு பலராலும் விரும்பப்பட்டதோடு, இலங்கையிலிருந்து வெளியாகும் மெட்ரோ நியூஸ் பத்திரிகையின் வார இதழின் முழுப்பக்கத்திலும் அப்போது இந்தப் பதிவு பிரசுரமாகியதும் குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், குறித்த பத்திரிகையில் &#8220;உதய தாரகை (வலைப்பதிவிலிருந்து)&#8221; என்று மட்டுமே எனது பதிவின் கீழ் பிரசுரித்திருந்தார்கள். எனது வலைப்பதிவின் முகவரியை அவர்கள் அங்கு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=544&subd=niram&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>இவ்வருடத்திற்கான ஐசிசி மினி உலகக் கிண்ணப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்த 2007 செப்டம்பரில் நடந்த இருபது 20 போட்டிகளின் இறுதிப் போட்டி முடிந்த கையோடு நான் பதிந்த பதிவு பலராலும் விரும்பப்பட்டதோடு, இலங்கையிலிருந்து வெளியாகும் மெட்ரோ நியூஸ் பத்திரிகையின் வார இதழின் முழுப்பக்கத்திலும் அப்போது இந்தப் பதிவு பிரசுரமாகியதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>ஆனாலும், குறித்த பத்திரிகையில் &#8220;உதய தாரகை (வலைப்பதிவிலிருந்து)&#8221; என்று மட்டுமே எனது பதிவின் கீழ் பிரசுரித்திருந்தார்கள். எனது வலைப்பதிவின் முகவரியை அவர்கள் அங்கு தந்திருக்கலாம் என எனது பல நண்பர்களும் சொன்னது எனக்கின்னும் ஞாபகமிருக்கிறது.</p>
<p><span id="more-544"></span></p>
<p>குறித்த பதிவை, நான் இன்று மீள்பதிவாக இடலாமென ஆசைப்படுகிறேன். இதற்கு பல காரணங்கள் உள்ளன. கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெறும் காலம் இதுவென்பது ஒரு காரணம் மட்டும் தான். ஏனைய காரணங்களைச் சொல்லி பதிவின் நீளத்தைக் கூட்ட எனக்கு ஆர்வமில்லை. நேராகவே பதிவிற்குச் செல்வோம்.</p>
<p>கீழ்வரும் பதிவு நான் 2007 செப்டம்பர் 27 ஆம் திகதி பதிந்ததாகும்.</p>
<p style="margin:0;padding:10px 0 0;">கடந்த இரு வாரங்களாக இடம் பெற்ற இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் மிகத்துரிதமாக நடைபெற்று முடிந்து, வெற்றியணியும் தேர்வு செய்தாகிவிட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெற்ற இறுதிப் போட்டி மொத்த போட்டியினதும் சூட்டை இரசிகர்களுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் வழங்கியதெனலாம்.</p>
<p style="margin:0;padding:10px 0 0;">இளம் வீரர்களால் நிரம்பிய இரு அணிகளும் இறுதிப்போட்டியில் ஆடிய விதம், 1996 ஆம் ஆண்டின் வில்ஸ் உலகக் கிண்ண போட்டியின் இறுதிப் போட்டியை ஞாபகப்படுத்தியதாக எனது நண்பர் ஒருவர் போட்டி பற்றிக் கதைக்கும் போது குறிப்பிட்டார். உண்மையில் 1996 இற்குப் பிறகு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகள் எதுவும் அவ்வளவு சோபிக்கவில்லை என்றே கூறவேண்டும்.</p>
<p style="margin:0;padding:10px 0 0;"><span id="more-142"> </span></p>
<p style="margin:0;padding:10px 0 0;">நடந்து முடிந்த இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளின் வேகம், அப்போட்டிகள் தொடர்பில் மக்கள் காட்டிய ஆர்வம் என்பன வியக்கத்தக்க வகையில் அமைந்திருந்தது. கிரிக்கெட்டின் எதிர்காலம் இருபது 20 போட்டிகள் என முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான டொனி கிரேக் கடந்த வாரம் Cricinfo எனும் இணையத்தளத்தில் குறிப்பிட்டிருந்தது எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. உண்மையில் 50 ஓவர்களைக் கொண்ட போட்டியை ஒரு நாள் பூராக நடத்துவதென்பது யாருக்குத்தான் சலிப்பைத் தராது?</p>
<p style="margin:0;padding:10px 0 0;">சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டிகளை கண்டு களிக்க வந்தவர்களின் தொகை மிகவும் குறைவானதாகும். ஆனால், இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டிகளைக் கண்டு கொள்ள வந்தவர்களின் எண்ணிக்கையோ விசாலமானதாகும். தென்னாபிரிக்க அரங்குகள் யாவும் நிரம்பி வழிந்ததையே அவதானிக்க முடிந்தது. இந்த நிலைமை 50 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் போட்டிகள் பற்றி பரிசீலிக்க வேண்டிய தருவாயை உண்டுபண்ணியுள்ளது என்றே குறிப்பிட வேண்டும்.</p>
<p style="margin:0;padding:10px 0 0;">சரி.. சரி.. என்னது ரொம்பத்தான் கிரிக்கெட் பற்றி விமர்சிக்கிறீங்க? அப்படியென்று நீங்கள் எண்ணுவது போல் தோனுகிறது. விஷயத்திற்கு வர்ரேன். அப்போ.. இன்னமும் விசயம் ஆரம்பிக்கலையா? என்று மட்டும் கேட்காதீர்கள்.</p>
<h4 style="font-family:Arial, Helvetica, Georgia, sans-serif;font-size:12px;margin:0;padding:9px 0 0;">அபசகுனமான எண்</h4>
<p style="margin:0;padding:10px 0 0;">நீங்கள் அநேகமாக கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கும் போது, ‘நெல்சன்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த சொல்லின் அர்த்தம் என்னவென்று தெரியுமா? என்று உங்களிடம் கேட்டால், நீங்கள் 111 போன்று ஒரே இலக்கங்கள் தொடர்ச்சியாக வந்தால் அதுவே நெல்சன் எண் என்று மிகத் தெளிவாகக் நீங்கள் கூறக்கூடும். மேலும், கிரிக்கெட் விளையாட்டின் போது, அணியின் ஓட்ட எண்ணிக்கையானது, நெல்சன் எண்ணாக அமையும் பட்சத்தில் ஆட்டமிழப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும் என்றும் நீங்கள் சொல்லுவீர்கள். நீங்கள் சொன்ன விடயங்கள் எல்லாம் உண்மைதான். ஆனால், 111 என்பது போல் வரும் எண்ணுக்கு எவ்வாறு நெல்சன் எனப்பெயர் வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?</p>
<p style="margin:0;padding:10px 0 0;">பிரித்தானியாவின் புகழ்பெற்ற கடற்படை வீரராகத் திகழ்ந்த நெல்சன் என்ற வீரர் தனது இறுதிக்காலங்களில் ஒரு கண், ஒரு கை மற்றும் ஒரு கால் ஆகியவற்றை மட்டுமே கொண்டிருந்தார். இதனால், இந்த ஒன்று எனும் எண்களைச் சேர்த்து வரும் 111 என்ற எண் நெல்சன் இலக்கமாக ஆகியதாம். அதுவே, 222 என விரியும் ஏனைய இலக்கங்களும் நெல்சனாக அடையாளம் காணப்படக் காரணமாகியதாம்.</p>
<p style="margin:0;padding:10px 0 0;"><img style="background-image:initial;background-attachment:initial;background-color:#ffffff;background-position:initial initial;background-repeat:initial initial;border:1px solid #dddddd;padding:4px;" src="http://niram.files.wordpress.com/2007/09/wicket_cricket.jpg" alt="wicket_cricket.jpg" hspace="5" vspace="5" align="left" />ஆனாலும், கிரிக்கெட் விளையாட்டில் களத்தில் நாட்டப்பட்டிருக்கும் மூன்று விக்கெட் பொல்லுகளிலும் மேலே சிறிய Bail எனப்படும் இரு துண்டுகள் காணப்படும். இது நீக்கப்பட்டால் ஆட்டமிழப்பு என்று அர்த்தப்படும். இங்கு Bail கள் நீக்கப்படுகையில் விக்கட்டினது தோற்றம் 111 என்றவாறே காட்சியளிக்கும். அதனாலேயே கிரிக்கெட்டில் 111 போன்ற நெல்சன் இலக்கங்கள் ஆட்டமிழப்பை ஏற்படுத்தக்கூடிய துரதிஷ்டமான எண்கள் என்ற மூடநம்பிக்கை நிலவி வருகின்றது.</p>
<h4 style="font-family:Arial, Helvetica, Georgia, sans-serif;font-size:12px;margin:0;padding:9px 0 0;">பூச்சியத்திற்கு அதிர்ஷ்டமில்லை</h4>
<p style="margin:0;padding:10px 0 0;">நடந்து முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தின் பல போட்டிகளிலும் நெல்சன் இலக்கத்தின் போது, ஆட்டமிழப்புகள் இடம்பெற்றதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். ஏன் இறுதிப்போட்டியிலும் நெல்சன் இலக்கமான 111 ஆனது, அணியின் ஓட்ட எண்ணிக்கையாக அமைந்த போது ஆட்டமிழப்பு இடம் பெற்றது. இதனால், அதிகமான ஆட்டமிழப்புகள் நெல்சன் இலக்க ஓட்டங்களின் போதே இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற நியாயமான நம்பிக்கை நிறையப் பேரிடம் காணப்படுகிறது. இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டுமென The Cricketer எனும் சஞ்சிகை 1990 ஆம் ஆண்டு ஒரு ஆய்வினை நடாத்தியது.</p>
<p style="margin:0;padding:10px 0 0;">ஆய்வின் முடிவுகள் என்ன சொல்லியிருக்கும் என எண்ணுகிறீர்கள்?</p>
<p style="margin:0;padding:10px 0 0;">ஆய்வு முடிவுகளின் படி, ஓட்ட எண்ணிக்கை நெல்சன் எண்ணாக அமைந்த நிலையில் ஏற்பட்டுள்ள ஆட்டமிழப்புகளிலும் பார்க்க ஓட்ட எண்ணிக்கை பூச்சியமாக இருந்த போதே அதிகமான ஆட்டமிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, பூச்சியம் தான் கிரிக்கெட் தொடர்பில் அபசகுணமான எண் என எண்ணத் தோன்றுகிறது.</p>
<h4 style="font-family:Arial, Helvetica, Georgia, sans-serif;font-size:12px;margin:0;padding:9px 0 0;">ஒரேயொரு முட்டாள் நான்தான்</h4>
<p style="margin:0;padding:10px 0 0;">இது இப்படியிருக்க, கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்தில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நடுவர் ஒருவர் அடிக்கடி தனது காலை உயர்த்தியதை நீங்கள் அவதானித்துள்ளீர்களா? நீங்கள் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் ஆர்வமுள்ளவராயிருந்தால் கட்டாயம் அந்த நடுவரை அவதானித்திருப்பீர்கள்.</p>
<p style="margin:0;padding:10px 0 0;">அந்த நடுவரின் முழுப்பெயர் <span style="font-size:12pt;font-family:'Times New Roman';">David Robert Shepherd</span>, அவர் டேவிட் செப்பர்ட் என்றே உலக கிரிக்கெட் அரங்கில் மிகப் பிரசித்தமான நடுவராகத் திகழ்ந்தவர். இப்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார். நான் இப்படி நடுவரைப் பற்றிச் சொல்லுகையில், உங்கள் மனக்கண் முன்னே டேவிட் செப்பர்ட்டினது, தொப்பை கொண்ட நிலையிலுள்ள வெள்ளை தொப்பி அணிந்த உருவம் இப்போது வந்திருக்கும். இவருக்கும் நெல்சன் எண்ணுக்கும் நிறையத் தொடர்புண்டு.</p>
<p style="margin:0;padding:10px 0 0;">இவர் தனது சிறுபராயத்தில் கிராமத்தில் கிரிக்கெட் விளையாடுகின்ற போது, 111 என்ற எண் என்பது விளையாடுபவர்களின் பார்வையில் அதிர்ஷ்டமில்லாத எண்ணாகவே காணப்பட்டதாம். இவ்வாறு 111 மற்றும் அதன் மடங்குகளான 222, 333 போன்ற எண்களை நெல்சன் எண்களாக அடையாளப்படுத்திக் கொண்ட செப்பர்டடும் மற்றும் அவரின் நண்பர்களும் இந்த எண் ஓட்ட எண்ணிக்கையாக உள்ள நிலையில் ஏதும் விரும்பத்தகாத ஆட்டமிழப்புகள் நடந்திடக் கூடாதென்பதற்காக ஒரு உத்தியைக் கையாண்டனராம்.</p>
<p style="margin:0;padding:10px 0 0;">அது என்ன உத்தி? என்றுதானே நீங்கள் கண் புருவம் விரிந்த நிலையில் என்னைப் பார்த்துக் கேட்கிறீர்கள்.</p>
<p style="margin:0;padding:10px 0 0;">நெல்சன் எண்களில் ஆட்டமிழப்புகள் நடைபெறக்கூடாது என்றால் எமது கால்களை பூமியின் தொடுகையில் இருந்தும் எடுத்தலே பொருத்தமான ஒரே முன்னெடுப்பாகும் என்று அவர்கள் முடிவு செய்தனராம். விளையாடமல் ஆட்ட அரங்கினுள் இருப்பவர்கள் காலை பூமியிலிருந்து உயர்த்திக் கொள்ளுவார்களாம். மைதானத்தில் ஆட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர், பூமியிலிருந்து காலின் தொடுகையை நீக்கும் பொருட்டு, காலை உயரத்துவார்களாம் அல்லது துள்ளிக் குதிப்பார்களாம்.</p>
<p style="margin:0;padding:10px 0 0;">அந்தப் பழக்கம்தான் சர்வதேச அரங்கிலும் டேவிட் செப்பர்ட், நெல்சன் இலக்கம் ஓட்ட எண்ணிக்கையாக வரும் நிலையில், காலை உயர்த்தி துள்ளிக் குதிப்பதற்கு காரணமானது. இந்த விடயத்தை அதிகமானோர் அவ்வளவாக அவதானிக்கவில்லை. அவதானித்தவர்களும் அதற்கான காரணத்தை அறிந்திருக்கவில்லை.</p>
<p style="margin:0;padding:10px 0 0;"><img style="background-image:initial;background-attachment:initial;background-color:#ffffff;background-position:initial initial;background-repeat:initial initial;border:1px solid #dddddd;padding:4px;" src="http://niram.files.wordpress.com/2007/09/umpire-jumping-nelson.jpg" alt="umpire-jumping-nelson.jpg" /></p>
<p style="margin:0;padding:10px 0 0;">ஆனாலும், சீதோஷன நிலைகளுக்கேற்பவும் தனது கால்களை உயர்த்தி தான் உடற்பயிற்சியும் செய்து கொள்வதாகவும் நடுவர் தனது குறிப்பொன்றில் குறிப்பிடுகின்றார். மைதானத்தில் இறுக்கமான நிலைமைகள் இருக்கும் சந்தர்ப்பத்தில் நெல்சன் எண் ஓட்ட எண்ணிக்கையாக வந்த போதிலும் அதற்கான தனது காலை உயர்த்தி துள்ளிக் குதிக்கும் “பரிகாரத்தை” தன்னால் செய்ய முடியாமல் போனதாகவும் அவர் மேலும் நினைவு கூறுகிறார்.</p>
<p style="margin:0;padding:10px 0 0;">“இப்படியொரு மூடநம்பிக்கையுடைய எந்த முட்டாள் நடுவரையும் என்னால் ஞாபகப்படுத்த முடியவில்லை. ஒருவேளை அந்த ஒரேயொரு முட்டாள் நான்தானோ??!!” என்று தனது சிறு வயதுப் பழக்கமாக வந்த மூடநம்பிக்கை பற்றி கருத்துத் தெரிவிக்கையில் டேவிட் செப்பர்ட் குறிப்பிடுகின்றார்.</p>
<p style="margin:0;padding:10px 0 0;">என்னதான் இருந்தாலும், நெல்சன் எண்ணுக்குப் பின்னால் இவ்வளவு சம்பவங்களா? என்று நீங்கள் சொல்ல வருகிறீர்களா?</p>
<h4 style="font-family:Arial, Helvetica, Georgia, sans-serif;font-size:12px;margin:0;padding:9px 0 0;"><strong><span style="font-size:16pt;font-family:'Times New Roman';">“Eleventy-one” </span></strong>– என்ன புரியவில்லையா?!</h4>
<p style="margin:0;padding:10px 0 0;">111 என்ற எண்ணின் சில முக்கியத்துவங்களைப் பற்றி நாம் இப்போது சுருக்கமாகக் கண்டு கொள்வோம்.</p>
<p style="margin:0;padding:10px 0 0;">2004 ஆம் ஆண்டு ஆவர்த்தன அட்டவணையில் ஒரு மாற்றம் இடம் பெற்றது. அதாவது, 111 ஆம் இலக்க அணுவெண்ணுடைய மூலகமாக<span style="font-size:12pt;font-family:'Times New Roman';">unununium (Uuu)</span> என்ற தற்காலிக பெயரினால் அழைக்கப்பட்ட மூலகத்தின் பெயர் <span style="font-size:12pt;font-family:'Times New Roman';">roentgenium (Rg)</span> என்ற நிரந்தரப் பெயராக மாற்றம் செய்யப்பட்டது.</p>
<p style="margin:0;padding:10px 0 0;">நியூஸிலாந்தில் அவசர தொலைபேசி இலக்கம் என்ன தெரியுமா? ஆமா, அந்த 111 என்ற நெல்சன் எண்தான். எமது நாட்டில் அவசர சேவை தொலைபேசி இலக்கம் 119 என்பதாகும்.</p>
<p style="margin:0;padding:10px 0 0;"><em><span style="font-size:12pt;font-family:'Times New Roman';">The Lord of the Rings </span></em>என்ற திரைப்படத்தில் <span style="font-size:12pt;font-family:'Times New Roman';">“Eleventy-one”</span> என்ற சொல்லொன்று பாவிக்கப்படும். அது 111 என்ற வயதைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் சொல்லாகும்.</p>
<p style="margin:0;padding:10px 0 0;">போதும்.. போதும்.. என்று நீங்கள் சொல்வது போல் தோனுகிறது. நீங்களும் நெல்சன் எண் தொடர்பில் உங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் நிறத்துடன் பகிர்ந்து கொள்ளலாமே!</p>
<p style="margin:0;padding:10px 0 0;">- உதய தாரகை</p>
<p style="margin:0;padding:10px 0 0;">பி.கு: இதன் மூலப்பதிவின் சுட்டி <a href="http://niram.wordpress.com/2007/09/27/nelson-number-cricket-niram-colour-zeezat-twenty-20/">இங்கே.</a></p>
Posted in அதிசயம், அனுபவம், உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, சிரிப்பு, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/niram.wordpress.com/544/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/niram.wordpress.com/544/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/niram.wordpress.com/544/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/niram.wordpress.com/544/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/niram.wordpress.com/544/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/niram.wordpress.com/544/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/niram.wordpress.com/544/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/niram.wordpress.com/544/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/niram.wordpress.com/544/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/niram.wordpress.com/544/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=544&subd=niram&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://niram.wordpress.com/2009/09/23/cricket-numbers-and-runs/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1b23f926c064fc73135bfbe1afb14d28?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">உதய தாரகை</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2007/09/wicket_cricket.jpg" medium="image">
			<media:title type="html">wicket_cricket.jpg</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2007/09/umpire-jumping-nelson.jpg" medium="image">
			<media:title type="html">umpire-jumping-nelson.jpg</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>முத்தங்களும் மூன்று வருடங்களும்</title>
		<link>http://niram.wordpress.com/2009/09/17/kisses-and-three-years/</link>
		<comments>http://niram.wordpress.com/2009/09/17/kisses-and-three-years/#comments</comments>
		<pubDate>Thu, 17 Sep 2009 07:36:50 +0000</pubDate>
		<dc:creator>உதய தாரகை</dc:creator>
				<category><![CDATA[அதிசயம்]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[இணையம்]]></category>
		<category><![CDATA[உணர்வு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[எண்ணம்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சுவாரஸ்யம்]]></category>
		<category><![CDATA[செய்தி]]></category>
		<category><![CDATA[பிறந்த நாள்]]></category>
		<category><![CDATA[மேற்கோள்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://niram.wordpress.com/?p=533</guid>
		<description><![CDATA[வாழ்க்கையில் நாம் பல விடயங்களைச் செய்ய வேண்டுமென ஆசைப்படுவதும் அவற்றில் சிலவற்றை அதீத ஆர்வத்துடன் செய்வதும் அதனாலே பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதும் ஒரு சக்கரம் போலவே சுழன்று கொண்டேயிருக்கிறது.
ஆரம்பிப்பதுதான் கஷ்டமானது. ஆரம்பித்துவிட்டால் எல்லாமே சுபமாக அமையும். அல்லது சுபமாக அமைய வேண்டியதற்கான வழிகள் பிறக்குமென பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். போனஸாக பல நூல்களிலும் இந்த எண்ணத்தை வாசித்திருக்கிறேன்.
நிறம் என்ற எனது இந்த வலைப்பதிவை நான் தொடங்கி அதில் முதல் பதிவிட்ட நாளும் இன்று போல ஒரு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=533&subd=niram&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>வாழ்க்கையில் நாம் பல விடயங்களைச் செய்ய வேண்டுமென ஆசைப்படுவதும் அவற்றில் சிலவற்றை அதீத ஆர்வத்துடன் செய்வதும் அதனாலே பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதும் ஒரு சக்கரம் போலவே சுழன்று கொண்டேயிருக்கிறது.</p>
<p>ஆரம்பிப்பதுதான் கஷ்டமானது. ஆரம்பித்துவிட்டால் எல்லாமே சுபமாக அமையும். அல்லது சுபமாக அமைய வேண்டியதற்கான வழிகள் பிறக்குமென பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். போனஸாக பல நூல்களிலும் இந்த எண்ணத்தை வாசித்திருக்கிறேன்.</p>
<p>நிறம் என்ற எனது இந்த வலைப்பதிவை நான் தொடங்கி அதில் முதல் பதிவிட்ட நாளும் இன்று போல ஒரு நாளாகவே இருந்திருக்கிறது. அது மூன்று வருடங்களுக்கு முன்னாகவும் வந்திருக்கிறது. (என்ன உதய தாரகை.. நிறம் வலைப்பதிவு ஆரம்பித்து இன்றோடு மூன்று வருடம் பூர்த்தியாகிறது என்று சொல்லலாமே! &#8211; அதை விட்டுட்டு சும்மா சுத்தி வளைச்சிகிட்டு&#8230;)</p>
<p><span id="more-533"></span></p>
<p>நான் கண்ட, காணும் மற்றும் காண விரும்பும் உலகம் என அனைத்தையும் பதிவு செய்யும் தளமாக நிறம் விளங்க வேண்டுமென ஆசை கொண்டேன். பல வேளைகளில் எனது அனுபவங்களை என்னால் மறக்க முடியாத சம்பவங்களோடு சொல்லிய விதம் பலரையும் பிடித்திருந்தது.</p>
<p><a href="http://niram.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/">இன்னொரு பிரபஞ்சம்</a> என எனது அனுபவங்களைச் சொல்லும் தொடரை ஆரம்பித்தேன். இந்தத் தொடரின் சொல்வாக்கை &#8220;யாரும் பார்க்காத உதய தாரகையின் வானம்&#8221; என்பதாகவும் அமைத்திருந்தேன். தொடரில் பதிந்த பதிவுகளை பலரும் விரும்பிப் படித்தார்கள் என்பதை நான் பெற்றுக் கொண்ட சில மின்னஞ்சல்கள் சொல்லி நின்றன. (ப்&#8230;பா.. போதும்.. போதும்..)</p>
<p>ஒவ்வொரு ஆண்டின் நிறைவின் போதும் அதுபற்றிய பதிவு எழுதும் நான், இந்த மூன்றாம் ஆண்டின் நிறைவைக் குறிப்பதற்காக பதிவொன்றை எழுத எண்ணிய போது, எனது வலைப்பதிவின் புள்ளிவிபரங்கள் சுவாரஸ்யமான பல விடயங்களைச் சொல்லி நின்றன.</p>
<p>சுவாரஸ்யமான அந்தச் சில விடயங்களை பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன்.</p>
<p>இந்தப் பதிவு நிறத்தின் 101 பதிவாகும் (ஆமா.. இதற்கு முன்னுக்கு எழுதிய &#8220;<a href="http://niram.wordpress.com/2009/08/30/story-behind-her-button-position/">அவள் சட்டையில் ஏன் அந்தப்புறமாக பொத்தான்?</a>&#8221; என்ற பதிவுதான் நூறாவது பதிவு).</p>
<p>வலைப்பதிவை நான் தொடங்கியதிலிருந்து மிகவும் அதிகமானோரால் வாசிக்கப்பட்ட பதிவாக &#8220;<a href="http://niram.wordpress.com/2008/05/12/my-first-lover-niram-zeezat/">எனது முதலாவது காதலி</a>&#8221; பற்றிய பதிவு அமைந்துள்ளது ( அட.. உதய தாரகை உங்களுக்கும் இந்தக் காதல் கத்திரிக்காய் எல்லாம் இருக்குதா? சொல்லவேயில்லை..!!).</p>
<p>கடந்த ஆண்டில் (2008 செப்டம்பர் முதல் 2009 செப்டம்பர் வரை) நிறத்தில் நான் பதிந்த பதிவுகளில் அதிகமானோர் விரும்பிப் படித்த முதல் ஐந்து பதிவுகளாக பின்வருவன அமைந்துள்ளன.</p>
<ol>
<li><span style="background-color:#ffffff;"><a href="http://niram.wordpress.com/2009/04/12/importance-of-silence/">மொழிபெயர்க்க முடியாத மெளனம்</a></span></li>
<li><span style="background-color:#ffffff;"><a href="http://niram.wordpress.com/2008/12/01/tear-and-sorrow/">ஆனைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும்</a></span></li>
<li><span style="background-color:#ffffff;"><a href="http://niram.wordpress.com/2009/05/10/love-life-affection-gratitude/">மலரே என்னை மறவாதே!</a></span></li>
<li><span style="background-color:#ffffff;"><a href="http://niram.wordpress.com/2009/01/08/friendship-and-love-and-me/">ஒரு மணிநேரம் அவளருகில் நான்</a></span></li>
<li><span style="background-color:#ffffff;"><a href="http://niram.wordpress.com/2008/10/03/stay-hungry-stay-foolish-niram-steve-jobs/">பசித்திரு, முட்டாளாயிரு</a></span></li>
</ol>
<p>இப்படியாக, புள்ளிவிபரங்கள் இருக்க, உங்கள் கவனத்தை முத்தங்கள் பக்கம் கொஞ்சமாய் அழைக்கப் போகின்றேன்.</p>
<p><img class="aligncenter size-full wp-image-534" title="kiss_meaning" src="http://niram.files.wordpress.com/2009/09/kiss_meaning.jpg?w=465&#038;h=160" alt="kiss_meaning" width="465" height="160" /></p>
<p>முத்தம் &#8211; எளிமையான ஒரு செயல் தான் ஆனால், அது கொண்டுள்ள தெரிவிக்கின்ற அர்த்தங்கள் ஆயிரம் என்றே முத்தம் பற்றி பலரும் சொல்கின்றார்கள்.</p>
<p>நான் Boston.com இல் வெளியாகும் <a href="http://www.boston.com/bigpicture/">The Big Picture</a> என்ற பகுதியை வழமையாக ரசிப்பவன். அதில் உலகத்தின் உணர்வுகள் எல்லாவற்றையும் காலத்திற்கேற்ப சொல்லுமாய்ப் போல், பெரிய நிழற்படங்கள் மூலம் விபரிக்க முனைந்திருப்பார்கள். வெற்றியும் கண்டிருப்பார்கள்.</p>
<p>துல்லியமான நிழற்படங்கள், உயிர்ப்பான உணர்வுகள் என என் மனத்திரையின் உணர்வுக்கு அழுத்தம் கொடுப்பதாய் அவை யாவும் அமைந்து போவதை எண்ணி பல வேளைகளில் நான் வியந்ததுண்டு.</p>
<p>அண்மைக்காலமாக பரவிவரும் Swine Flu எனப் பொதுவாகச் சொல்லப்படும் H1N1 வைரஸ் தொற்றுகையின் காரணமாக, பிரான்ஸ் நாட்டு அரசாங்கம், தமது நாட்டு மக்களை பாரம்பரிய முத்தமுறையான கன்னத்திற்கு கன்னம் முத்தம் கொடுப்பதை பின்பற்றுமாறு பணித்துள்ளது.</p>
<p>பிரான்ஸ் முத்தம் என்பது நீங்கள் அறிந்ததே! (உதய தாரகை!! எங்களுக்கு புரியலையே!! ஆமா.. அதுதாங்க.. French Kiss..  அப்பாடா இப்போ புரிஞ்சுது.) இதனால், தொற்றுநோய்க்காவிகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தாவிவிடலாம் என்ற பயமே இந்தப் பணிப்பை அரசாங்கம் அறிவிக்க காரணமாய் அமைந்தது.</p>
<p>விசயம் அதுவல்ல.</p>
<p>நேற்று Big Picture கொண்டு வந்த உணர்வு: முத்தம்.</p>
<p>முத்தமென்ற எளிய செயலொன்றை கமராக் கண்களுக்குள் கொண்டு வந்து அந்த பிரமாண்ட நிழற்படங்களால், உணர்வுகளுக்கே பிரமிப்பை தந்தது Big Picture. கட்டாயம் உங்கள் உணர்வுகளுக்கு உயிர்ப்பைக் கொடுங்கள்.</p>
<p>முத்தங்களின் தொகுப்பு <a href="http://www.boston.com/bigpicture/2009/09/a_collection_of_kisses.html">இங்கே இருக்கிறது.</a> இரசிக்கலாமே!!</p>
<p>- உதய தாரகை</p>
Posted in அதிசயம், அனுபவம், அழகு, இணையம், உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, சுவாரஸ்யம், செய்தி, பிறந்த நாள், மேற்கோள், வாழ்க்கை  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/niram.wordpress.com/533/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/niram.wordpress.com/533/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/niram.wordpress.com/533/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/niram.wordpress.com/533/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/niram.wordpress.com/533/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/niram.wordpress.com/533/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/niram.wordpress.com/533/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/niram.wordpress.com/533/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/niram.wordpress.com/533/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/niram.wordpress.com/533/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=533&subd=niram&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://niram.wordpress.com/2009/09/17/kisses-and-three-years/feed/</wfw:commentRss>
		<slash:comments>8</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1b23f926c064fc73135bfbe1afb14d28?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">உதய தாரகை</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2009/09/kiss_meaning.jpg" medium="image">
			<media:title type="html">kiss_meaning</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அவள் சட்டையில் ஏன் அந்தப்புறமாக பொத்தான்?</title>
		<link>http://niram.wordpress.com/2009/08/30/story-behind-her-button-position/</link>
		<comments>http://niram.wordpress.com/2009/08/30/story-behind-her-button-position/#comments</comments>
		<pubDate>Sun, 30 Aug 2009 23:34:03 +0000</pubDate>
		<dc:creator>உதய தாரகை</dc:creator>
				<category><![CDATA[அதிசயம்]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[எண்ணம்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சிரிப்பு]]></category>
		<category><![CDATA[சுவாரஸ்யம்]]></category>
		<category><![CDATA[புதியவை]]></category>
		<category><![CDATA[மேற்கோள்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://niram.wordpress.com/?p=522</guid>
		<description><![CDATA[அதுவொரு மாலைப்பொழுதாகவே இருக்க வேண்டும். எனது நண்பனொருவனை சந்தித்தேன். அவனிடம் பல விடயங்கள் தொடர்பாகக் கதைத்துக் கொண்டிருந்தேன்.
திடீரென அவனிடம் சில சம்பவங்கள் பற்றிக் கேள்விகள் சிலவற்றைக் கேட்கலானேன். அவனும் எதற்கும் தயார் என்ற நிலையில் சட்டு சட்டு என பதில் சொல்லிக் கொண்டேயிருந்தான்.
அப்போதுதான் நான், &#8220;அநேகமாக ஆண்கள் இடது கையிலும் பெண்கள் வலது கையிலும் மணிக்கூடு கட்டியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா?&#8221; என்று கேட்டேன்.

&#8220;ம்&#8230; பார்த்திருக்கிறேன்.&#8221; என்று பதில் சொன்னான்.
நானும் விடவில்லை. &#8220;உண்மையாகவே பார்த்திருக்கிறாயா?&#8221; என்று கேட்டேன்.
&#8220;ஆமாம்டா.. நெசமாகவே பார்த்திருக்கிறேன்.&#8221; [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=522&subd=niram&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>அதுவொரு மாலைப்பொழுதாகவே இருக்க வேண்டும். எனது நண்பனொருவனை சந்தித்தேன். அவனிடம் பல விடயங்கள் தொடர்பாகக் கதைத்துக் கொண்டிருந்தேன்.</p>
<p>திடீரென அவனிடம் சில சம்பவங்கள் பற்றிக் கேள்விகள் சிலவற்றைக் கேட்கலானேன். அவனும் எதற்கும் தயார் என்ற நிலையில் சட்டு சட்டு என பதில் சொல்லிக் கொண்டேயிருந்தான்.</p>
<p>அப்போதுதான் நான், &#8220;அநேகமாக ஆண்கள் இடது கையிலும் பெண்கள் வலது கையிலும் மணிக்கூடு கட்டியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா?&#8221; என்று கேட்டேன்.</p>
<p><span id="more-522"></span></p>
<p>&#8220;ம்&#8230; பார்த்திருக்கிறேன்.&#8221; என்று பதில் சொன்னான்.</p>
<p>நானும் விடவில்லை. &#8220;உண்மையாகவே பார்த்திருக்கிறாயா?&#8221; என்று கேட்டேன்.</p>
<p>&#8220;ஆமாம்டா.. நெசமாகவே பார்த்திருக்கிறேன்.&#8221; என்று உறுதிப்படுத்தினான்.</p>
<p>&#8220;அப்படி ஆண்கள் இடது கையிலும் பெண்கள் வலது கையிலும் மணிக்கூட்டை ஏன் கட்டுகிறார்கள் என்று தெரியுமா?&#8221; என்று அவனிடம் கேட்டு நின்றேன்.</p>
<p>&#8220;ம்&#8230; தெரியாதே!&#8221; என்று முளித்தான். முயன்று பார்க்கச் சொன்னேன். அவனும் எவ்வளவோ யோசித்தான். தனது கையடக்கத் தொலைபேசியை வேறு எடுத்துக் கொண்டு தன் நண்பனுக்கு வேறு அழைப்பெடுத்து விசாரித்தான். முடியவில்லை.</p>
<p>&#8220;எனக்குத் தெரியாது&#8221; என்று சொல்லி நின்றான்.</p>
<p>நானோ, &#8220;அப்படி மணிக்கூட்டை ஆண்கள் இடது கையிலும் பெண்கள் வலது கையிலும் கட்டுவது நேரத்தைப் பார்க்கத்தான்&#8221; என்று இயல்பாகவே சொல்லி நின்றேன்.</p>
<p>&#8220;என்ன கொடுமை சார்??!!&#8221; என்று அவன் மனதிற்குள் யோசித்திருக்க வேண்டும். (ஜோக்கு ஒன்று சொன்னமில்ல..  கொஞ்சம் சிரிக்கலாமில்ல..??!!)</p>
<p>மேற்சொன்ன &#8216;சம்பவக்கடி&#8217; அண்மையில் என்னிடம் ஒரு நண்பன் பகிர்ந்து கொண்டது தான். (இருக்கோட்டும்.. இருக்கோட்டும்.. மேட்டருக்கு வாரன்)</p>
<p><img class="aligncenter size-full wp-image-523" title="button_talks" src="http://niram.files.wordpress.com/2009/08/button_talks.jpg?w=465&#038;h=160" alt="button_talks" width="465" height="160" /></p>
<p>இனி ரொம்ப சீரியஸான விடயம்.</p>
<p>ஆண்களின் சட்டைகளில் பொத்தான் பொருத்தப்பட்டுள்ள பக்கத்தைக் கவனித்துப் பார்த்துள்ளீர்களா? இதிலென்ன கவனிக்க வேண்டிக்கிடக்குது என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது.</p>
<p>பெண்களின் சட்டைகளில் பொத்தான் பொருத்தப்பட்டுள்ள பக்கத்தைக் கவனித்திருக்கிறீர்களா? நல்ல கேள்வி என்று தானே நீங்கள் யோசிக்கிறீர்கள்.</p>
<p>உண்மையில், ஆண்களின் சட்டைகளிலும் பெண்களின் சட்டைகளிலும் பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ள பக்கம் வித்தியாசமானது.</p>
<p>ஏனிப்படி இது இருக்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கலாம். அதற்கொரு வரலாறே உண்டென்றால் நீங்கள் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும்.</p>
<p>19 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்த செல்வந்த எஜமானிகள் தங்கள் வேலைகளைச் செய்து கொள்ள பல அடிமைகளையும் வேலையாட்களையும் பெற்றிருந்தனர். அந்நாட்களில் இந்த வேலையாட்களையே தமக்கு உடையணிவித்துக் கொள்வதற்கும் எஜமானிகள் பயன்படுத்தியுள்ளனர்.</p>
<p>இதன் காரணமாக, வேலையாட்கள் எஜமானிகளுக்கு உடையணிவிக்கும் போது, பொத்தான்களை பூட்டுவதை இலவாக்கும் பொருட்டு, சட்டையின் இடப்பக்கத்தில் பொத்தான் பொருத்தப்பட்டு தையற்காரர்களால் சட்டைகள் தைக்கப்பட்டது.</p>
<p>ஆனாலும், வேலையாட்களை செல்வந்த எஜமான்கள் கொண்டிருந்த போதும், தமது ஆடைகளை தாமே உடுத்திக் கொண்டதால், அவர்களுக்கு பொத்தானை பூட்டுவதை இலகுவாக்க, சட்டையின் வலப்பக்கத்தில் பொத்தான்கள் பொருத்தப்பட்ட நிலையில் சட்டைகள் தைக்கப்பட்டன.</p>
<p>இந்தப் பழங்காலத்து வழமையே தொடர்ந்தும் பொத்தான் பொருத்துமிடம் தொடர்பில் பேணப்படுவது அழகிய கலை.</p>
<p>இருபாலாரின் சட்டைகளில் பொத்தான்கள் இடம் மாறி பொருத்தப்பட்டது தொடர்பின் பின்னணியில் பல சம்பவங்கள் சொல்லப்பட்டாலும், இதுவே பலராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.</p>
<p>சின்னதொரு பொத்தான் பொருத்தப்படும் இடம் சொல்லும் வரலாறு வித்தியாசமானது தான். நூற்றாண்டு கால வரலாற்றுச் சம்பவ உண்மைகளை வெறும் சட்டை பொத்தான்கள் காலத்தால் அழியாமல் கடத்திக் கொண்டுவருவது அதிசயமே!</p>
<p>- உதய தாரகை</p>
Posted in அதிசயம், அனுபவம், அழகு, உலகம், எண்ணம், கட்டுரை, சிரிப்பு, சுவாரஸ்யம், புதியவை, மேற்கோள், வாழ்க்கை  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/niram.wordpress.com/522/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/niram.wordpress.com/522/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/niram.wordpress.com/522/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/niram.wordpress.com/522/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/niram.wordpress.com/522/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/niram.wordpress.com/522/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/niram.wordpress.com/522/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/niram.wordpress.com/522/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/niram.wordpress.com/522/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/niram.wordpress.com/522/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=niram.wordpress.com&blog=414637&post=522&subd=niram&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://niram.wordpress.com/2009/08/30/story-behind-her-button-position/feed/</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1b23f926c064fc73135bfbe1afb14d28?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">உதய தாரகை</media:title>
		</media:content>

		<media:content url="http://niram.files.wordpress.com/2009/08/button_talks.jpg" medium="image">
			<media:title type="html">button_talks</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>