நான் தலைப்பில் குறிப்பிட்ட “இது திரைப்படம் அல்ல” என்ற வரிகளே இந்தப் பதிவை வாசிக்கத் தொடங்கும் முன் தங்கர் பச்சானின் திரையோவியமான “சொல்ல மறந்த கதை” பற்றி உங்கள் ஞாபகங்களை ஏற்படுத்திருக்கக்கூடும். கிராமத்தில் “வீட்டோடு மாப்பிள்ளை” எனும் எண்ணக்கருவைப் பற்றி திறம்பட சித்தரித்த படமது. இயக்குனர் சேரன் நடித்த படம் என்பது போனஸ் தகவல்.
இது திரைப்படம் பற்றியதல்ல எனக் குறிப்பிட்டு சினமாவைப் பற்றியே அடுக்கிக் கொண்டிருக்கிறீங்களே! என்று நீங்கள் ஆச்சரியமாகப் பார்ப்பது புரிகிறது. சரி ஓவராக பேசாமல் மேட்டருக்கு வர்ரேன்.