ஒலிகள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களிலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகமாகவே திகழ்கின்றன.
உலகிலுள்ள எல்லா விடயங்களுக்குமே அவை ஒவ்வொன்றுடனும் இணைந்த வகையில் தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. ஒலியும் அவ்வாறுதான். மொட்டுக்கள் விரிந்து பூவாகும் போது கேட்கும் ஓசை தனித்துவமானது. உயிர்களின் உணர்வுகள் கொண்ட இன்னொரு வடிவம் தான் ஓசை – ஒலி.
ஒலி என்பது எதேச்சையாக தோன்றிவிடுவதில்லை. அதிர்வுகளின் ஒன்றுகூடலால் உதயமாவதே ஒலியாகும். அதிர்வுகள் எல்லாம் ஒலியை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு நிறைய உடன்பாடு உண்டு. மௌனத்திலும் ஒலியிருக்கிறது என நான் தீவிரமாக நம்புகிறேன். மௌனங்கள் மொழியாக உணரப்படும் நிலையில், மௌனத்திற்கு ஒலி உண்டு என நம்புவதில் என்ன பிழை என்பது எனது கருத்து. நீங்கள் எப்படியோ?