(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 3 நிமிடங்களும் 59 செக்கன்களும் தேவைப்படும்.)
கடந்த இரு வாரங்களாக இடம் பெற்ற இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் மிகத்துரிதமாக நடைபெற்று முடிந்து, வெற்றியணியும் தேர்வு செய்தாகிவிட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெற்ற இறுதிப் போட்டி மொத்த போட்டியினதும் சூட்டை இரசிகர்களுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் வழங்கியதெனலாம்.
இளம் வீரர்களால் நிரம்பிய இரு அணிகளும் இறுதிப்போட்டியில் ஆடிய விதம், 1996 ஆம் ஆண்டின் வில்ஸ் உலகக் கிண்ண போட்டியின் இறுதிப் போட்டியை ஞாபகப்படுத்தியதாக எனது நண்பர் ஒருவர் போட்டி பற்றிக் கதைக்கும் போது குறிப்பிட்டார். உண்மையில் 1996 இற்குப் பிறகு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகள் எதுவும் அவ்வளவு சோபிக்கவில்லை என்றே கூறவேண்டும்.