காலை உயர்த்தியதைக் கவனித்தீர்களா?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 3 நிமிடங்களும் 59 செக்கன்களும் தேவைப்படும்.)

கடந்த இரு வாரங்களாக இடம் பெற்ற இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் மிகத்துரிதமாக நடைபெற்று முடிந்து, வெற்றியணியும் தேர்வு செய்தாகிவிட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெற்ற இறுதிப் போட்டி மொத்த போட்டியினதும் சூட்டை இரசிகர்களுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் வழங்கியதெனலாம்.

இளம் வீரர்களால் நிரம்பிய இரு அணிகளும் இறுதிப்போட்டியில் ஆடிய விதம், 1996 ஆம் ஆண்டின் வில்ஸ் உலகக் கிண்ண போட்டியின் இறுதிப் போட்டியை ஞாபகப்படுத்தியதாக எனது நண்பர் ஒருவர் போட்டி பற்றிக் கதைக்கும் போது குறிப்பிட்டார். உண்மையில் 1996 இற்குப் பிறகு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகள் எதுவும் அவ்வளவு சோபிக்கவில்லை என்றே கூறவேண்டும்.

தொடர்ந்து படிக்க…

இரண்டாவது ஆண்டில் உங்கள் நிறம்

வணங்கத் தலையும் வழங்க மொழியும் தந்த வல்லோனைப் போற்றுகின்றேன். இது நான் பாடசாலை நாட்களில் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது, சபையை விளிக்கப் பயன்படுத்திய வரிகள் தாம். இப்பதிவிற்கும் இவ்வசனமே முதல் வசனமான அமைதல் பொருத்தமானதாக இருக்கும் என நம்பினேன். அது இப்பதிவின் முதல் வசனமாயிற்று.

கடந்த வாரம் பூராக நிறம் வலைப்பதிவில் “என்னவென்று சொல்வது?” என்ற தலைப்புடன் இத்தனை நாட்களில் சொல்கிறேன் என சிறிய அறிவிப்பொன்றை நீங்கள் கண்டிருக்கக்கூடும். அந்த அறிவிப்பில் மறைந்திருந்த விடயத்தை இப்பதிவின் தலைப்பைக் கண்டவுடனே நீங்கள் புரிந்திருப்பீர்கள்.

கட்டுரையின் தொடர்ச்சியை வாசிக்க…

வாசிப்பு என்கின்ற பழக்கம்

வாசிப்புப் பழக்கம் பற்றிய கதைக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்ற கேள்வி உங்களுக்குள் சில வேளை எழுந்திருக்கக் கூடும். ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் வாசிப்பு பற்றி அதிகம் கதைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஒரு மொழி மீதான பாண்டித்தியம், அம்மொழியிலான நூல்களை ஏன் செய்தித்தாள்களை ஆர்வமாக வாசிப்பதால் ஒருவரிடம் இயல்பாகவே குடிகொண்டு விடக்கூடும். மொழிகள் எம்மோடு இணைந்து கொள்வதன் நிகழ்தகவு, அம்மொழி தொடர்பாக நாம் கொண்டுள்ள ஆர்வத்தின் பால் தங்கியிருக்கின்றது என்பது எனது கருத்தாகும்.

கட்டுரையின் தொடர்ச்சியை வாசிக்க…

பல் போனால் இதயமே போகுமாம்!!!

“பல் போனால் சொல் போகும்” என்று கேட்டிருக்கிறோம். அதென்ன இதயம் போகும் என்ற கதை… என்று நீங்கள் கேட்டபது புரிகிறது. என்னங்க செய்வது, விஞ்ஞானிகள் புதுசு புதுசா பல விசயங்களைப் பற்றி ஆய்ந்தறிந்து அதனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்தத் தகவல்கள் இன்றளவில் மனிதனின் வாழ்க்கை முறை பற்றி அதிகம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தை உண்டு பண்ணியுள்ளதெனலாம்.

கட்டுரையின் தொடர்ச்சியை வாசிக்க…

பொல்லாதவன் மற்றும் கெட்டவன்

தனுசின் பொல்லாதவன் மற்றும் சிம்புவின் கெட்டவன் ஆகிய வரவிருக்கும் திரைப்படங்கள் பற்றிக் நான் கதைக்கப் போகின்றேன் என நீங்கள் நினைத்தால் அது தவறு. ஒரு தனிநபரை பொல்லாதவனாகவோ, கெட்டவனாகவோ ஏன் நல்லவனாகவோ உருவாக்குவதில் உயிர் நாடியாகத் திகழும் ஒரு பண்புக் கூறு பற்றி ஆராயலாம் என நினைத்தேன். அது இப்பதிவாயிற்று.

மனமே எல்லாம் செய்யும் ஆயுதமாகி, அது கொண்ட இயல்புகளே மனிதனை புனிதனாக்குவதில் துணை நிற்கிறது. மனப்பாங்குகள் தான் மனிதனின் இயல்புகளைத் வெளியுலகிற்கு சொல்லும் தீபம் என்று சொல்லலாம்.

கட்டுரையின் தொடர்ச்சியை வாசிக்க…