சொன்னது சரிதானா..?

மொழி என்பது நாம் நினைத்ததை இன்னொருவருக்கு நினைத்த வகையிலேயே யதார்த்தமாக சொல்வதற்கு கிடைத்த அளப்பரிய சொத்து எனலாம். தாம் சொல்ல வந்த விடயத்தை பொருத்தமான முறையில் சொல்லத் தெரியாமல் அதனை மற்றவர்களுக்கு புரிய வைக்கப் போய் ஆயுளின் அரைவாசியை இழந்தோர் பலர். மொழியின் இலகுவான பயன்பாட்டை உணராதவர்கள் அவர்கள்.

ஒரு மொழி நபருக்கு நபர் வேறுபடுவதில்லை. ஆதலால், மொழியை புரிந்து கொள்பவர்கள், பயன்படுத்துவர்கள் ஆகியோரிடம் காணப்படும் மொழி தொடர்பான அறிவு இங்கே இருபட்சத் தெளிவுக்கு ஆதாரமாகிறது. கனவுகளை காரியமாக்கப் போவதை விட, விபரித்துச் சொல்வதில் சுவாரஸ்யம் இருக்கும். காரியமாவதற்கான துப்பும் கிடைக்கும். விபரிப்பில் அத்துணை விசேடம் உள்ளது.

தொடர்ந்து படிக்க…

மொழிபெயர்க்க முடியாத மெளனம்

காரணங்கள் எதுவுமே இல்லாமல் வலிகள் தரும் வேதனையை நாம் தனிமையில் மட்டும் தான் உணர முடியும். தனிமைக்கு அழகு உண்டு. வலிகளை வலிமைகளாக்கும் திறனும் உண்டு. வாழ்க்கையின் அர்த்தங்களை ஆழ்மனதின் விருப்புக்களுடன் சேர்த்து அறிந்து கொள்ளச் செய்யும் ஊடகம் தான் தனிமை என நான் சொல்வேன்.

“கூட்டமாக இருக்கும் நிலையில் உன் பேச்சிலும், தனிமையாக இருக்கும் நிலையில் உன் சிந்தனையிலும் கவனமாக இரு” என பிரபல்யமான கூற்றொன்று உள்ளது. தனிமையின் வலிமையைச் சொல்ல இந்தக் கூற்று ஒன்றே போதும். தனிமை எப்போதும் வலிகளை வழங்குவதற்காக வருவதில்லை. அது வலிமைகளை பெற்றுக்கொள்வதற்காய் தொடர்கிறது.

தொடர்ந்து படிக்க…

பெட்டிக்குள்ளே ஒரு பெண்

எளிமையான விடயங்களைக் கூட மிகத் துரிதமாகச் செய்யப் போய் அதில் தோல்வி காண்பவர்களை நீங்கள் கண்டிருக்கக்கூடும். சின்னச் சின்ன விடயங்களிலும் மகிழ்ச்சியை தேடி அனுபவிப்பவர்களையும், மகிழ்ச்சியிருந்த போதும் அதனை வெறுத்து, எமக்கு மகிழ்ச்சி வேண்டாமே என கோசமிடும் புதுமையானவர்களையும் நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.

வாழ்க்கையின் மகிழ்ச்சி பற்றி நிறத்தில் நிறையக் கதைத்திருக்கிறேன். மகிழ்ச்சிதான் வாழ்க்கை. மகிழ்ச்சியை தொலைத்து நாம் நிற்பதனால், வாழ்க்கையே எம்மை விட்டு தொலை தூரமாகிவிட்டது என எண்ணத் தோன்றுகிறது. நம்மைச் சுற்றியே மகிழ்ச்சி பொதிந்து கிடக்கின்றது என்ற பழமொழி போன்ற கருத்தை வலியுறுத்த எனக்கு ஆர்வமில்லை.

தொடர்ந்து படிக்க…