மொழி என்பது நாம் நினைத்ததை இன்னொருவருக்கு நினைத்த வகையிலேயே யதார்த்தமாக சொல்வதற்கு கிடைத்த அளப்பரிய சொத்து எனலாம். தாம் சொல்ல வந்த விடயத்தை பொருத்தமான முறையில் சொல்லத் தெரியாமல் அதனை மற்றவர்களுக்கு புரிய வைக்கப் போய் ஆயுளின் அரைவாசியை இழந்தோர் பலர். மொழியின் இலகுவான பயன்பாட்டை உணராதவர்கள் அவர்கள்.
ஒரு மொழி நபருக்கு நபர் வேறுபடுவதில்லை. ஆதலால், மொழியை புரிந்து கொள்பவர்கள், பயன்படுத்துவர்கள் ஆகியோரிடம் காணப்படும் மொழி தொடர்பான அறிவு இங்கே இருபட்சத் தெளிவுக்கு ஆதாரமாகிறது. கனவுகளை காரியமாக்கப் போவதை விட, விபரித்துச் சொல்வதில் சுவாரஸ்யம் இருக்கும். காரியமாவதற்கான துப்பும் கிடைக்கும். விபரிப்பில் அத்துணை விசேடம் உள்ளது.