வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களிலும் நாட்கள் நகர்வதைக் காட்டும் ஒரு ஆதாரமாகவே பிறந்த நாட்கள் அமைந்து விடுகின்றன. பலரும் வயது போனபோதும், அவ்வாறு தமக்கு வயது ஆகவில்லை என்பதை உலகறியச் செய்யும் பொருட்டு சோடணைகள் செய்வதிலே பல வயதுகளை தொலைக்கும் கொடுமையும் உண்டு.
வருடத்திற்கொரு வயது ஒவ்வொருவருக்கும் கூடிச் செல்வது தான் இயற்கை. அதுதான் பூமி தோன்றிய காலம் தொட்டு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு வருடத்திலுள்ள ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானதாகவே இருக்கும். அதனாலே பல கலைகள் தோன்றியிருக்கின்றன. அவற்றை இரசிக்கும் வகையில் பார்ப்பதும், ரசிப்பதும் அழகு.