அதுவொரு மாலைப்பொழுதாகவே இருக்க வேண்டும். எனது நண்பனொருவனை சந்தித்தேன். அவனிடம் பல விடயங்கள் தொடர்பாகக் கதைத்துக் கொண்டிருந்தேன்.
திடீரென அவனிடம் சில சம்பவங்கள் பற்றிக் கேள்விகள் சிலவற்றைக் கேட்கலானேன். அவனும் எதற்கும் தயார் என்ற நிலையில் சட்டு சட்டு என பதில் சொல்லிக் கொண்டேயிருந்தான்.
அப்போதுதான் நான், “அநேகமாக ஆண்கள் இடது கையிலும் பெண்கள் வலது கையிலும் மணிக்கூடு கட்டியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டேன்.