சிலவேளைகளில் நமது உணர்வுகளுக்கு அதிசக்தி கொண்ட அனுபவங்களை சின்னச் சின்ன விடயங்கள் தந்துவிடுவது அழகு. இன்று வலைப்பதிவுகள் பலதையும் வாசித்துக் கொண்டிருந்த போது, பல விடயங்கள் என் உணர்வுகளில் அதிர்வுகளைக் கொண்டு வந்தன.
உணர்வுகளில் ஏற்படும் அதிர்வுகள், சில நேரங்களில் மகிழ்ச்சியாக, அழுகையாக, சுமையாக, சிரிப்பாக என பல பரிமாணங்களை எடுப்பது யாவரும் ரசிக்க வேண்டிய கலை. துன்பங்கள் பற்றி யாரும் சொல்லும் போது, அந்த நிலைகளுக்குள் என்னை நுழைத்து அழுது கொண்ட நாட்கள் எனக்கு நிறையவே ஞாபகத்தில் உண்டு.