நாம் கொண்டுள்ள நம்பிக்கைகளின் வகைகளும், நிலைகளும் ஒவ்வொருக்கு ஒருவர் வேறுபடும். நம்பிக்கை – சூழல் காரணிகளால் வலுப்படுத்தப்படலாம் அல்லது, வழு என பலரும் அதனை விட்டு நீங்கலாம். ஆனால், நம்பிக்கை – பிழையைக்கூட சரியென எண்ண வைத்துவிடும் வலிமை கொண்டது!
நம்பிக்கைகள் என்றுமே மெய்யானதாக இருந்ததுமில்லை. அதுபோலவே, என்றுமே பொய்யானதாகவும் இருந்ததில்லை. நம்பிக்கை, மெய்யுடன் கலக்கும் போது, தரம் கொள்கிறது.