மழைபெய்யும் நள்ளிரவில் நான்

இப்போதெல்லாம் மாறி மாறி பருவ காலங்கள் வருவதெல்லாம் என்னால் அதிகமாகவே உணரக்கூடியதாக இருக்கிறது. ஒரு வருடத்தில் பருவங்கள் நான்கு முறை மாறும் அழகு அனுபவிக்கப்பட வேண்டியது. இப்போது நள்ளிரவாகிறது, மெல்லிய தூறலாய் மழை பொழிகிறது.

கடந்த வருடம், மாலை நேரமொன்றில் திடீரென யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் பனி பொழிந்த சம்பவம் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. எவ்வளவுதான் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி கண்டபோதிலும், இயற்கையின் மனதை அப்படியே வாசித்துவிட முடிவதில்லை. பெண்களின் மனதை புரிந்து கொள்ளவே முடியாது என்று சொல்வார்கள். அதனாலோ என்னவோ, பூமியையும் பூமாதேவி என்கிறார்கள்.

தொடர்ந்து படிக்க…