என்னை நானே தேடித் தேடி..

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 33 செக்கன்களும் தேவைப்படும்.)

எம்மைச் சுற்றியுள்ள சூழல் பற்றிய நிலைகள் எந்நேரமும் ஒரு நிலையில் இருப்பதில்லை. அது அப்படி இருக்கவும் கூடாது. ”அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் உலகில் ஏராளம்” என்று அன்பே சிவம் திரையில் ஒரு வசனம் வரும்.

மகிழ்ச்சி என்பது பிரச்சனைகள் எதுவுமே இல்லாத நிலையல்ல, மாறாக பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஆற்றல்தான் மகிழ்ச்சியாகும் என்று அண்மையில் நூலொன்றில் வாசித்தேன். அடுத்த வினாடி தரும் மாற்றத்தை சந்திக்கின்ற, எதிர்நோக்கின்ற சக்திதான் வாழ்க்கையை ரசிக்கச் செய்கிறது.

தொடர்ந்து படிக்க…

ஜெஸ்ஸியும் மக்னீஸியமும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 3 நிமிடங்களும் 11 செக்கன்களும் தேவைப்படும்.)

திரைப்படங்கள் எல்லாமே ஒவ்வொருவரிலும் அதிர்வுகளை எந்நேரமும் ஏற்படுத்துவது கிடையாது. சொல்ல வந்த விடயம், சொல்லிய விதம், அதை பார்ப்பவர்கள் விளங்கிக் கொண்ட விதம் என எல்லாமே திரைப்பட ஊடகத்தின் உயிர்நாடிகள் தாம்.

திரையில் கண்ட விடயத்தை ஒருவர் புரிந்து ரசிக்கும் விதம், மற்றவர்களாலும் அவ்வாறே ரசிக்கப்பட வேண்டுமென்கின்ற எந்த விதிமுறைகளும் கிடையாது. ஆனால், சிலவேளைகளில் பார்வையாளனை ஒரே உணர்வுகளுக்குள் கட்டிப் போடும் திரைக்காவியங்களும் தோன்றாமலில்லை.

தொடர்ந்து படிக்க…