(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 31 செக்கன்களும் தேவைப்படும்.)
மனம் பற்றிய விந்தைகளைப் பற்றி நாளாந்தம் நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். மனத்தின் ஆளுமை, உத்வேகம் பற்றிய ஆர்வநிலைகளை வார்த்தைகளில் சொல்லிவிட்டு அடுத்த விடயம் பற்றி சொல்ல ஆரம்பித்துவிட முடியாது. ஆனால், நமது மனது பற்றிய ஆழமான விசாரிப்புகளில் மட்டுந்தான் நாம் எம்மைப் பற்றிய விடயங்களை அறிந்து கொள்ள முடிகிறது.
உங்களைச் சூழ்ந்த உலகம் பற்றிய அவதானிப்புகள் தான் இந்தக் கணத்தின் வலிமையையோ, வெறுப்பையோ தருவதற்கு காரணியாகி விடுகிறது.