(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 21 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
1926 ஆம் ஆண்டு வெளிவந்த கார்ட்டூன் புத்தகம் தான் வின்னி த பூஃ என்பது. மனிதனின் குணாதிசயங்கள், பண்புகள் என்பவற்றைக் கொண்ட மிருகங்களின் புனைவுக் கதைகளாக இதனை கண்டு கொள்ள முடியும். இதன் தழுவல் நிலைப் படைப்புகள் 2000களிலும் திரைப்படங்களாகக் கூட எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
ஆப்பிள் நிறுவனம் தனது iOS என்ற பணிசெயல் முறைமையில் iBooks ஐ அறிமுகப்படுத்திய போது, இந்த நூலை இலவசமாக தரவிறக்கம் செய்யும் சாத்தியத்தை வழங்கியது. ஸ்டீவ் ஜொப்ஸ் இதனை அறிமுகப்படுத்திய நிலையொரு கலை.
இந்தக் கதையாக்கத்தின் ஓட்டத்தில் நிறைய பாத்திரங்கள் வந்து சந்திக்கும். பூஃ என்பது ஒரு கரடி. அதன் நண்பர்களின் ஒருவர் தான் பிக்லட் என்பது மிகச் சிறிய இன்னொரு மிருகம். இது தன்னை வீரனாக உருவாக்க முயற்சிப்பதோடு தனது பயமெல்லாவற்றையும் தாண்டிய வாழ்வை நோக்கிய பயண வேட்கையோடும் காணப்படும்.
இந்தப் பாத்திரங்களிடையே இடம்பெறுகின்ற சம்பாஷணைகள் மிகவும் உணர்வு வலிமை நிறைந்தவை.
“அன்பை எப்படி உச்சரிப்பது?” என்று பிக்லட், பூஃவிடம் கேட்கும்.
“அது உச்சரிப்பதல்ல. உணர்ந்து கொள்வது” எனப் பதிலளிக்கும் பூஃ.
மனிதனின் அழகிய உணர்வுகளின் பயணத்தை வெளிப்படையாக இந்த மிருகங்களின் புனைவு பாத்திரங்களின் மூலம் எடுத்துத் செல்கின்ற A. A. Milne இன் கதை சொல்லும் பாணி — வியப்பு.
பண்டையக் காலத்தில் வாழ்ந்த நாட்டின் அரசனொருவன், மிகப்பெரிய ராஜசக்கரவர்த்தி ஆகிவிட வேண்டுமென்ற கனவோடு தினமும் வாழ்ந்து வந்தான்.
நாட்டின் அத்தனை விடயங்களையும் அடக்கியாள வேண்டுமென்கின்ற அவனின் வேட்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. இந்த நிலையை விரைவில் அடைந்து கொள்வதற்காய் நாட்டின் பிரபலமான ஞானியொருவரைச் சந்தித்து ஆசி பெறச் சென்றான்.
அரசன் சென்ற நேரத்தில், ஞானியோ தியானத்தில் திளைத்திருந்தார். கொஞ்சம் நேரம் காத்துக் கொண்டிருந்தான் அரசன். ஆனாலும், ஞானி, தியானத்தை நிறைவாக்கியதாகக் தெரியவில்லை.
இன்னும் கொஞ்ச நேரம் காத்துக் கொண்டிருந்தான். ஆனாலும் ஞானியின் தியானம் முடிந்த பாடில்லை.
“ஏ, நான் உலகத்தையே ஆள வேண்டுமென்ற வேட்கையில், அதற்காக உனது ஆசி பெறலாமென வந்தேன். நீ என்னுடன் கதைக்காமலா புறக்கணிக்கின்றாய்?” என்ற ஆவேசத்துடனும் கோபத்துடனும் ஞானியை நோக்கி அரசன் கத்திக் கொண்டு வெளியேற முற்பட்டான்.
திடீரென சுதாகரித்துக் கொண்ட ஞானி, “அரசே, உலகத்தை ஆள வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களால் உங்களின் ஆத்திரத்தைக் கூட அடக்க முடியாமல் இருக்கும் போது, எப்படி பிறரை அடக்கி ஆளப் போகிறீர்கள்?” என்ற அமைதியாகச் சொன்னார்.
அரசன் அவ்விடத்திலிருந்து வாழ்வின் மீதான புதிய பார்வையுடன் வெளியே சென்றான்.
“உணரந்து கொள்கின்ற அனுபவ அறிவு நிலைகள் சொல்லித்தரும் பாடங்கள் மிக உயர்வானவை. எல்லோருக்கும் அவர்கள் சார்பான நிலையில் இந்தச் சம்பவத்தின் தாக்கமிருக்கும் — உணர்ந்து கொள்ளும் வலிமையிருக்கும்” என கோபாலு கடுமையாக நம்புகிறான்.
ஈற்றில் ஒரு புதிரையும் சொல்லச் சொன்னான், கீழ்வரும் படத்தில் ஆங்கில எழுத்தான O ஒன்று இருக்கிறதாம். அது எங்கிருக்கிறது என கண்டுபிடிக்கச் சொன்னான்.
– உதய தாரகை — Follow @enathu
*இற்றைப்படுத்துகை (14.01.2012): குறித்த புதிரில் O என்ற எழுத்து ஒரு தடவையல்ல, நிறையத் தடவைகள் காணப்படுகின்றன. ஒரு O காணப்படுகிறது என்று நான் புதிரில் குறிப்பிட்டுள்ளதால், ஒரு O ஐக் கண்டவுடன் தேடல்களை நிறைவு செய்து, விடையை பலரும் மறுமொழியாகச் சொல்லியனுப்பி இருந்தனர். முக்கோணங்களைத் தாண்டியும் யோசிக்கப் பழக வேண்டுமென்பதைச் சொல்லவே (இதை Thinking out of the triangle என்று ஆங்கிலத்தில் சொல்லலாம். Box என்று சொல்ல விருப்பமில்லை. 😉 ) இந்தப் புதிர் என கோபாலு சொல்லச் சொன்னான்.
நல்லாருக்கு பதிவு… கடைசி புதிருக்கு விடையை எப்பிடியும் போடுவீங்கள்தானே.. 🙂
மேலிருந்து ஆறாவது வரிசை வலதுபுறம் இருந்து இடது புறம் நோக்கி எட்டாவது 0
2nd Paragraph, 2nd row, 8th place from right.
பதிவின் கீழே புதிர் பற்றிய கோபாலின் நோக்கத்தினை இற்றைப்படுத்தலாக இணைத்துள்ளேன். முயற்சிக்கு வாழ்த்துக்கள். நன்றி. 🙂