(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 33 செக்கன்கள் தேவைப்படும்.) [?]
அதுவொரு செவ்வாய்க்கிழமை. கல்லூரி வளாகத்தின் நூலகத்தில் என்றும் போல், நிறையப் பேர் நூல்களை எடுப்பதற்கும் கொடுப்பதற்கும் வாசிப்பதற்குமாய் குழுமியிருந்தனர்.
கோபாலும், வழமைபோலவே நூலொன்றை இரவல் வாங்கிக் கொள்ள அங்கு சென்றிருந்தான்.
அவனுக்கு தேவையான புத்தகம் இருக்கின்ற பகுதியை நோக்கிச் சென்று பொருத்தமான நூலை தேடலானான்.
ஒரு புத்தகத்தின் பொருளடக்கத்தை பார்க்க முற்பட்ட போது, அப்புத்தகத்தின் உள்ளே இருந்து காகிதத் துண்டொன்று எட்டிப் பார்த்து, கீழே விழுந்தது.
விழுந்த காகிதத்தை ஆர்வத்தோடு எடுத்துத் படித்தான் கோபாலு.
இன்றைக்கு நீ கவலையாகவிருந்தால், நீ உலகில் இருப்பதாய் நினைவில் கொள். நீ உலகில் இருப்பதை மறந்து போனால், நீ வாழ்க்கையை வாழ்கிறாய் என ஏற்றுக் கொள். வாழ்கின்ற வாழ்க்கை பற்றிய பிடிப்பில்லை என்றால், நீ நேசிக்கப்படுவதை உணர்ந்து கொள். நீ நேசிக்கப்படுவதை நம்பவில்லையாயின், இது உனக்காகவே ஒருவரால் எழுதப்பட்டது என்பதை தெரிந்து கொள்.
வாசித்த மாத்திரத்திலேயே அவன் முகத்தில் புன்னகை எங்கிருந்தோ தொற்றிக் கொண்டது.
அந்த அழகிய காகிதப் பொக்கிஷத்தை, இருந்த புத்தகத்தோடு இரவல் வாங்கிக் கொண்டு சென்றவன், திருப்பிக் கொடுக்கவேயில்லை.
(யாவும் கற்பனையல்ல)
– உதய தாரகை
நீங்கள் என்னை நிச்சயமாக ட்விட்டரில் தொடரலாம். நான் இங்கே. 🙂 – Follow @enathu