இலக்குகள் என்பவை மாயைகள் என்றே எண்ணுகிறேன்.
நீங்கள் இலக்கை நோக்கி பயணிக்கின்ற பாதைதான் இலக்குக்கு முகவரி கொடுக்கிறது.
இலக்கை அடைந்தேனா, அதை நோக்கி நகர்ந்தேனா, அதை விலக்கி நடந்தேனா என்பதை உங்கள் பயணமே தீர்மானிக்கிறது.
ஒவ்வொரு நாளும் இலக்கை நோக்கிச் செய்கின்ற சின்னச் சின்ன செயல்கள், நாளடைவில் பிரமாண்டமாய் உருவாவதே உண்மை.
இலக்குகளை நீங்கள் உருவாக்கத் தேவையில்லை. இலக்குகளை அடைந்து கொள்வதற்கான முறைமையே உங்களுக்கு தேவைப்படுகிறது.
நீங்கள் ஒவ்வொரு நாளும் செய்பவைதான் உங்களுக்கு முகவரி தருகிறது. செல்வத்தைத் தருகிறது. வாழ்வைத் தருகிறது. வசதியைத் தருகிறது. மனஅமைதியைத் தருகிறது.
எழுத வேண்டுமென நினைக்கிறீர்களா? நீங்கள் எழுதுவதை மற்றவர்கள் வாசிக்க வேண்டுமென துடிக்கிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எழுதுவது மட்டுந்தான்.
இங்கு செயல் தான் உங்களைச் செதுக்கும்.
ஒவ்வொரு நாளாய் உங்களைச் செதுக்குங்கள். சிற்பி செதுக்கிய சிற்பமாவீர்கள்.
