(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 52 செக்கன்கள் தேவைப்படும்.) [?]
நேற்றைய தினம் நிறம், தனது ஆறாவது ஆண்டில் காலடியெடுத்து வைத்தது. வாழ்க்கை, வழக்கங்கள், ஆதிக்கம், ஆர்வம் என விரியும் பரந்துபட்ட விடயங்களும், வாழ்வின் அவதானிக்க மறந்துபோன அழகிய அனுபவங்கள் பற்றிய அழகிய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் உருவான நிறம், கடந்த பல ஆண்டுகளில் பலரையும் கவர்ந்திருப்பதையிட்டு புளகாங்கிதம் கொள்கிறேன்.
பதிவுகளைப் பார்வையிட்ட புள்ளவிபரங்களின் அடிப்படையில், கடந்த ஆண்டில் நிறத்தில் இடம்பெற்ற பதிவுகளில், உங்களைக் கவர்ந்த முதல் ஐந்து பதிவுகளாக பின்வருவன அமைகின்றன.
- அழகு தமிழுக்கு ஐபோனில் ஒரு App – iTamil
- எந்திரனும் முற்றத்து மல்லிகையும்
- ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்படவேண்டிய வாழ்க்கை
- உன்னைப் பற்றிய எனது கவலைகள்
- கதையொன்றின் வலிமை
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் புதன் பந்தல் என்றொரு விசேடமான பகுதியொன்றையும், பிரதி புதன்கிழமையும் வழங்கி வருகிறேன். இந்தப் பகுதி பலரையும் கவர்ந்துள்ளதையிட்டும் பேருவகை கொள்கின்றேன்.
கடந்த ஐந்து வருடத்தில் நிறத்தின் பதிவுகள் பற்றிய உங்களின் பின்னூட்டங்கள், மின்னஞ்சல்கள் என்பன எனது பொழுதுகளின் மகிழ்ச்சிக்கும் பதிவுகளின் மெருகேற்றத்திற்கும் காரணங்களாக இருந்திருக்கிறன. இந்த அழகிய எண்ணங்களின் பயணத்தில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் நன்றிகள் பல.
பின்னூட்டம் சொல்லியனுப்பாவிட்டாலும், பதிவுகளை செய்தியோடைகள் (RSS) மூலம், நேரடியாக தளத்திற்கு வருகை தந்து பார்வையிடும் மற்றும் பதிவுகளை தங்களின் நண்பர்களிடையே சமூக வலைத்தளங்களின் மூலமாக பகிர்ந்து அன்பு வளர்க்கும் நண்பர்களுக்கும் நன்றிகளைச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்தும் நீங்கள் நிறத்தோடு இணைவீர்கள் என்ற நம்பிக்கையோடு, நிறம் தொடரும்.
அல்பர்ட் ஐன்ஸ்டைனின் இந்த அர்த்தமுள்ள மேற்கோளை எனக்கு ரொம்பப் பிடிக்கும். வெறும் இரண்டே வரிகளில் தனிமனித ஆற்றலின் விஞ்ஞானத்தை சொல்வது ஐன்ஸ்டைனின் அழகு.
நிறத்தின் பயணத்தில் இணைந்துள்ள உங்களுக்கு, மீண்டும் நன்றிகளைச் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி.
– உதய தாரகை