எண்ணம். வசந்தம். மாற்றம்.

வாழ்வைக் கொண்டாடும் பாடம்

பூமி, வாழ்க்கை, பூர்வகுடிகள் என அனைத்தையும் கொண்டாடுகிறது எஞ்சாய் எஞ்சாமி!

அறிவின் வரிகளில் அடர்த்தியும் ஆழமும் உச்சமாக அமைந்துள்ளது.

நாலடிகளில் நாகரிகம், பூமி வரலாறு, விவசாயிகளின் வாழ்வின் துயர் என பலதையும் விபரிக்கும் விதம் – கவிதை.

அன்னக்கிளி அன்னக்கிளி
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி இந்த
மண்ணைக் கொடுத்தானே பூர்வகுடி!

கம்மங்கரை காணியெல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்கெல்லாம்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி!

நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்
தோட்டம் செழிச்சாலும்
என் தொண்டை நனையலேயே!

அறிவு – தெருக்குரல்

“தீ” மற்றும் “அறிவு” தந்துள்ள பாடல் — இது பாடம்.

ஏ. ஆர். ரகுமானின் செயற்றிட்டமான தன்னார்வ இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் மாஜாவினால் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

எஞ்சாய் எஞ்சாமி

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்