எண்ணம். வசந்தம். மாற்றம்.

புரிவதில்லை…

அலைபாயும் வேளையில்
கரை ஒதுங்கும் சருகுகள்…
இடர்காணும் நேரமதில்
அகன்றோடும் சொந்தங்கள்!!
காந்தம் கண்டு கவரப்படும் இரும்பு…
காசு வந்தால்
ஒட்டிக் கொள்ளும் உறவு!!
கதிரவன் வழியில்
கண்சிமிட்டும் சூரியகாந்தி…
நன்மை கூடுமிடும்
வேஷமிடும் உணர்வுகள்!!
இன்னும் ஏராளம்!!
வினோதமான நாடகங்கள்
இப்பூமியிலே…
மனித உணர்வுகளின்
வஞ்சத்தை எண்ண,
நெஞ்சத்தை தாக்கிறது
ஒரு புயல்..!!
இன்னும் புரியவில்லை!!
இந்நாடகங்கள் “மனிதனுக்கு”
எதற்கென்று…

2003 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 05 ஆம் திகதி தினகரன் பத்திரிகையில் பிரசுரமான என் “கவிதை”..

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்