மெய்யென நம்பியுள்ள பொய்கள்

நாம் கொண்டுள்ள நம்பிக்கைகளின் வகைகளும், நிலைகளும் ஒவ்வொருக்கு ஒருவர் வேறுபடும். நம்பிக்கை – சூழல் காரணிகளால் வலுப்படுத்தப்படலாம் அல்லது, வழு என பலரும் அதனை விட்டு நீங்கலாம். ஆனால், நம்பிக்கை – பிழையைக்கூட சரியென எண்ண வைத்துவிடும் வலிமை கொண்டது!

நம்பிக்கைகள் என்றுமே மெய்யானதாக இருந்ததுமில்லை. அதுபோலவே, என்றுமே பொய்யானதாகவும் இருந்ததில்லை. நம்பிக்கை, மெய்யுடன் கலக்கும் போது, தரம் கொள்கிறது.

தொடர்ந்து படிக்க…

உனக்கான பாடல், உன்னைப் பற்றிப் பாடவில்லை

இந்த இரவில் நிறத்தில் புதிதாக பதிவொன்றை இடவேண்டுமென நான் நினைக்கிறேன். நான் எதுவாக இருந்தேனோ அதுவாகவே ஆகிவிட ஆர்வங் கொள்கிறேன். அதுவொரு மிக நீளமான பயணம். மிக மிக நீளமானது தான். அங்கும் இங்குமென பல இடங்களில் இடர்களைச் சந்திந்திருக்கிறேன். வாழ்க்கை என்பது அவ்வளவு லேசுபட்டதல்ல. முக்கியமாக வயது வந்த வாழ்க்கை.

கடந்துவிட்ட நேரத்தை மீளக்கொண்டு வரும் வரமெனக்கு இருந்திருந்தால் என கற்பனை செய்கிறேன். எனது வாழ்வின் அழகிய நேரங்கள் நிறைவு பெற்றுவிட்டது போன்ற எண்ணம் எனக்குள் குடிகொள்கிறது. இனிவரும் எல்லாமே நானறிந்த அழகிய நேரங்களை விடக் குறைவான அர்த்தங்களையே கொண்டிருக்கும். வாழ்வைத் திரும்பிப் பார்க்கும் போது, அந்த மங்கலான நிலையை மட்டுமே என்னால் கண்டு கொள்ள முடிகிறது.

தொடர்ந்து படிக்க…

Google Wave இல் அலையடித்த அனுபவங்கள்

கடந்த மாதம் இறுதி நாளின் காலை நேரம் எங்கும் அமைதியாகவே விடிந்தது. விடிந்தது என்றே நம்புகிறேன். ஆனால், இணையவெளி எல்லாமே ஒரே ஆரவாரம், கும்மாளம், ஆரவாரிப்பு, ஆவல், காத்திருப்பு என எல்லாமே பரந்து விரிந்து கிடந்தன.

காரணங்கள் எதுவுமே இல்லாமல், எந்த விடயங்களும் நடப்பதில்லை. அப்படித்தான் அன்றைய பொழுதின் இணைய ஆரவாரங்களுக்கும் காரணமிருந்தது. Google Wave என்ற கூகிளின் மிகப்புதிய தொடர்பாடல் கருவி (Communication Tool) தனது பயணத்தை உலக மக்களோடு சேர்ந்து தொடங்கிய நாள்.

தொடர்ந்து படிக்க…

மெழுகுவர்த்தியில் எனக்கு உடன்பாடில்லை

அன்றொரு நாள் மாலை வேளை, எனது நண்பனொருவனுடன் கதைத்துக் கொண்டிருந்த போது யோசித்த விடயமொன்றை அண்மையில் Forbes சஞ்சிகை ஆய்வொன்று செய்து அதன் பெறுபேறுகளை வெளியிட்டிருந்தது.

புள்ளிவிபரங்கள் பல வேளைகளில், ஒரு விடயம் சம்மந்தமான தரவுகளை விபரமாகச் சொல்வதில் வெற்றி கண்டு கொள்கின்றன. “எவ்வளவு பணத்தை இந்தப் உலகத்திலுள்ள பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள், அவர்களால், உலகத்தையே வாங்கி விடமுடியும் போல..” எனது நண்பன் பணம் பற்றி வியந்து கதைக்கத் தொடங்கினான்.

தொடர்ந்து படிக்க…

கூகிளுக்குள் அகிம்ஷைப் போராட்டம்

பூலோகம் தோன்றிய காலந்தொட்டு பல ஆளுமைகள் உதித்து மனிதர்களின் வாழ்தலின் அர்த்தங்களைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். பலரும் வெற்றி கண்டிருக்கிறார்கள். இந்தச் சக்கரம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

1982 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு திரைப்படம் 8 ஒஸ்கார் விருதுகளை வாங்கிச் சென்றது. றிச்சட் அட்டன்புரோ இயக்கிய திரைப்படமது. ஒரு மனிதனின் வாழ்க்கைச் சரிதத்தைச் சொல்லியது தான் அந்தப் படம்.  ஆனால், வாழ்க்கை இப்படித்தான் வாழப்பட வேண்டுமென்பதையும் சொல்லி நின்றது.

தொடர்ந்து படிக்க…

டவுசர்கள் இல்லை என்று குழந்தைகள் அழுகும்

சிலவேளைகளில் நமது உணர்வுகளுக்கு அதிசக்தி கொண்ட அனுபவங்களை சின்னச் சின்ன விடயங்கள் தந்துவிடுவது அழகு. இன்று வலைப்பதிவுகள் பலதையும் வாசித்துக் கொண்டிருந்த போது, பல விடயங்கள் என் உணர்வுகளில் அதிர்வுகளைக் கொண்டு வந்தன.

உணர்வுகளில் ஏற்படும் அதிர்வுகள், சில நேரங்களில் மகிழ்ச்சியாக, அழுகையாக, சுமையாக, சிரிப்பாக என பல பரிமாணங்களை எடுப்பது யாவரும் ரசிக்க வேண்டிய கலை. துன்பங்கள் பற்றி யாரும் சொல்லும் போது, அந்த நிலைகளுக்குள் என்னை நுழைத்து அழுது கொண்ட நாட்கள் எனக்கு நிறையவே ஞாபகத்தில் உண்டு.

தொடர்ந்து படிக்க…

வீழாமலே இருக்க முடியுமா?

நிறைய விடயங்கள் பற்றிச் சொல்ல வேண்டுமென நினைத்தாலும், நமக்கான நம்முடைய தணிக்கைக் குணம் சிலவேளைகளில் பிடிவாதம் பிடித்துக் கொண்டுவிடுவது உண்மையே. தணிக்கை, பிடிவாதம் என்ற சொற்கள் போட்டு காமடி கீமடி பண்றேன் என்று மட்டும் யோசிக்காதீர்கள்.

நான்கு விடயங்களைப் பற்றி நமது வலைப்பதிவுலக நண்பர்கள் தமது கருத்துக்களை பதிந்து கொண்டு வருகிறார்கள். இன்று நிறத்தில் புதிய பதிவு எழுத வேண்டுமென ஆவலில் இருந்த எனக்கு இந்த விடயங்கள் பற்றி யாரும் அழைக்காமலேயே எழுதலாம் என்ற ஆர்வம் கிட்டியது.

தொடர்ந்து படிக்க…